>> Friday, August 20, 2010



"ஆதிவாசி பெண்கள் நிர்வாண ஊர்வலம்"


ஒரிசாவில் உள்ள இந்தியப் பழங்குடியினர்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்கள் இருவர் ஆடை களையப்பட்டு பெருந்திரளானோர் முன்னிலையில் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதை பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.
மாற்று ஜாதி ஆண்களுடன் நெருங்கிப் பழகியதற்காக அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரமும் இதேபோல வேறொரு பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்தப் பெண் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டபோது சுற்றி நின்று பார்த்தவர்கள் அவரைக் கேலி செய்துப் படமெடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தச் சம்பவம் பற்றிய வீடியோ படம் இணையதளம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஊடகங்களிலும் இந்த சம்பவம் குறித்த செய்திகள் அதிக அளவு வெளியானதை அடுத்து இது தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகளை தலித்துக்களும், ஆதிவாசிகளும் சந்தித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தை இடதுசாரிகள்தான் மூன்று தசாப்தங்களாக ஆண்டு வருகின்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter