>> Friday, August 19, 2011

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்; 5 பேர் பலி


காசா மீது இஸ்ரேல் 2009 இல் நடத்திய வான் தாக்குதலில் பெரும் உயிர்ச் சேதங்கள் எற்பட்டன

காசா மீது இஸ்ரேல் 2009 இல் நடத்திய வான் தாக்குதலில் பெரும் உயிர்ச் சேதங்கள் எற்பட்டன

இஸ்ரேலின் தெற்கே ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில், இஸ்ரேலும் காசா நிலப்பரப்புக்குள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் குறைந்தது 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்


முன்னதாக, இஸ்ரேலிய மண்ணில் எகிப்தின் எல்லையை ஒட்டி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பாரக் கூறியிருந்தார்.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், ஹமாஸுடன் இணையாது காசாவில் செயற்பட்டுவரும் பீஆர்சி என்ற அமைப்பின் தலைவரும் மேலும் நான்கு உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஃபா நகரில் வீடொன்றிலிருந்த இரண்டு பொதுமக்கள் கொல்லபட்டுள்ளதாக பாலஸ்தீன் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, பீர்ஷெபா நகரிலிருந்து கரையோர நகரான ஈலட் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்றின் மீது ஆயுததாரிகள் முதலில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வீதியோரத்து குண்டொன்றுக்கும் ரொக்கட் தாக்குதலுக்கும் மேலும் இரண்டு வாகனங்களும் சிக்கின.

சம்பவ இடத்துக்கு விரைந்த இஸ்ரேலிய படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றிருந்தது.
குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது
பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்

பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்

நீண்டகாலத்துக்குப் பின்னர் எகிப்திய எல்லையை அண்டி இஸ்ரேல் மண்ணில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.

காசா நிலப்பரப்பிலிருந்து எகிப்தின் சினாய் பாலைவனத்தினூடாக ஆயுததாரிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவியிருப்பதாக இஸ்ரேலிய படைத்தரப்பு கூறுகின்றது.

காசாவே பயங்கரவாதத்தின் முக்கிய ஊற்றிடமாக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுத் பாரக் இதற்கு விளக்கம் கூறியுள்ளார்.
தெற்கு இஸ்ரேல் மற்றும் எல்லை நாடுகள்

தெற்கு இஸ்ரேல் மற்றும் எல்லை நாடுகள்

ஆனால் ஹமாஸ் எம்.பி சலாஹ் அல் பர்தாவீல், காசாவை தொடர்புபடுத்திக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துவிட்டார்.

காசாவில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய ஆக்கிரமிப்புக் குடியிருப்பினால் இயல்பாகவே ஏற்படக்கூடிய பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை பார்ப்பதாகவும் ஹமாஸ் எம்.பி கூறினார்.

Read more...

>> Friday, August 5, 2011


பேச்சுவார்த்தை: ததேகூ காலக்கெடு


த தே கூ முத்திரை
த தே கூ முத்திரை
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து, கூட்டமைப்பு கடும் விமர்சனத்தையும் கவலைகளையும் வெளியிட்டுள்ளது.

வியாழன் இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கை அரசு, பேச்சுவார்த்தைகளை வெளியுலகுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக காட்ட முனையும் அதே வேளையில், உண்மையில் இவை, ஒரு வெளித்தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாகவே இதைத் தாங்கள் பார்ப்பதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகளில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்படுதல், வடகிழககில் செயல்படும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைதல், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஆகியவை குறித்து பேசிவந்ததாக கூட்டமைப்பு கூறுகிறது.

ஆனால் பத்துச் சுற்றுப் பேச்சுக்களுக்கு பிறகு இந்தப் பிரச்சினைகளில் எந்தவிதமான பெரிய முன்னேற்றமும் காணப்படவில்லை என்று கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கொடுத்த பிரேரணைகள் எதற்கும் அரசிடமிருந்து பல மாதங்களாக எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அரசியல் தீர்வுப் பிரச்சினையில், எந்தவிதமான காத்திரமான விவாதமும் நடத்த முடியவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்தச் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்கிற “ஏமாற்று வழிமுறையை” தொடர வேண்டிய அவசியம் இருக்கிறதா என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

சமஷ்டி அமைப்பின் கட்டமைப்பு , மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு, நிதியதிகாரங்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் இரண்டு வாரத்தில் தெளிவாக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.

அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Read more...

>> Tuesday, August 2, 2011


'அரசு பழி வாங்குகிறது'- திமுக கோஷம்


திமுக ஆர்ப்பாட்டம்
திமுக ஆர்ப்பாட்டம்
ஆளும் அதிமுக அரசு தங்களைப் பழிவாங்குவதாகக் கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து பெருமளவில் நில அபகரிப்பு நடந்திருப்பதாக்க் கூறி, இன்றைய அதிமுக அரசு அபகரிப்பு குறித்த புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதியின் ம்கன் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் என இதுவரை பலர் கைதாயிருக்கின்றனர்.

மாநில அளவில் 1500 புகார்கள் வந்திருப்பதாக அரசு கூறுகிறது.

ஆனால் தங்களைப் பழிவாங்கவே அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக திமுகவினர் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி, ஜெயலலிதா அரசைக் கண்டித்து மாநில அளவில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

முன்னணித் தலைவர்கள் பலரும் இந்த ஆர்ப்பட்டங்களில் கலந்துகொண்டனர்.

வடசென்னை திமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்ன உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறியே முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் மாலையில் விடுதலையாயினர்.

Read more...


'கரைவலை உரிமம் பறிபோனது'- முல்லை.மீனவர்


வடக்கில் கரைவலை மீன்பிடித் தொழில்
கரைவலை உரிமங்கள் பறிபோகின்றன- தமிழ் மீனவர்கள்
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழர்களின் உரிமங்கள் சிங்கள மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதேவேளை அங்கு தமிழர்கள் எவரும் கரைவலைத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கபடவில்லை என்றும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் முன்னர் இருந்த 44 ‘கரைவலை பாடுகளில்’ ஓரிரு பாடுகளுக்கே சிங்களவர்கள் உரிமம் வைத்திருந்துள்ளதாகவும் மற்றைய பாடுகளுக்குரிய உரிமத்தை தமிழர்களே வைத்திருந்ததாகவும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான முன்னாள் கல்வியதிகாரி அண்டனி ஜெகநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.

1984 இல் தமிழர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு, அங்கு சிங்கள மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கரைவலை உரிமங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

முன்னர் இருந்த 44 பாடுகள் இன்று 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் அண்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.

கொக்கிளாய் பகுதிக்கு உரிம ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்ற தமிழ் மீனவர்கள், அங்கு சிங்கள முதலாளிமார் உரிமங்களை காட்டி தொழில் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

‘உரிமம் உள்ள சிங்களவர்கள் அனுமதிக்கப்பட்டனர்’- அமைச்சர்


அமைச்சர் ராஜித்த சேனாரத்ன

ஆனால், இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சரான ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

அந்தப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்து, விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கு மாத்திரமே அங்கு மீண்டும் கரைவலைத் தொழில் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அதுதவிர, தென்பகுதியில் இருந்து எவரும் புதிதாக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழர்களின் உரிமங்கள் சிங்களவர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை அவ்வாறு தமிழர்கள் எவருக்காவது உரிமம் இருந்து, அவர்கள் அங்கு கரைவலை தொழில் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், தன்னிடம் புகார் செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Read more...

>> Monday, August 1, 2011


எடியூரப்பா ராஜினாமா


எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை எடியூரப்பா கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு தன்னுடைய ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்று எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

சட்டத்திற்கு புறம்பான சுரங்கத்தொழிலில் எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக லோகயுக்தாவில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, பதவியை விட்டு விலகுமாறு எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது.

ஆனால் அது தொடர்பில் மேலிடத்துடன் முறுகல் நிலையில் இருந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ள எடியூரப்பா தன் மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு சதானந்த கவுடாவை முதலமைச்சராக்கவும் அவர் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter