>> Wednesday, August 25, 2010


வட கிழக்கு இந்தியாவில் வெள்ள பாதிப்பு
இந்தியாவின் வட கிழக்கே வெள்ளம்
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் ஐம்பது கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் வீடிழக்க நேரிட்டுள்ளது.

பிரம்மபுத்ரா நதியோடு சேருகின்ற ஆறு ஒன்று பெருக்கெடுத்து பல இடங்களில் ஊருக்குள் புகுந்ததில், கிராமவாசிகள் மேட்டு பகுதிகளுக்கு இடம்பெயர நேர்ந்துள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பருவமழை கடுமையாகப் பெய்ந்துவரும் நிலையில், ஆறுகளிலும் ஏரி குளங்களிலும் நீர் அபாயகரமான அளவுகளை எட்டியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட உதவிகள் வேண்டும் என்று கோரி அஸ்ஸாம் மாணவர்கள் முக்கிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்துவருகின்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter