>> Thursday, August 19, 2010


போட்டிகளின் தலைவர் புதுடில்லி விஜயம்


போட்டிகளின் தலைவர் விளையாடு அரங்குகளை காணவுள்ளார்
காமன்வெல்த் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் அமைப்பின் தலைவர் மைக் ஃபென்னல் அந்தப் போட்டிகளுக்கான கடைசி நிமிட தயார்படுத்தல்கள் குறித்து நேரில் பார்வையிடுவதற்காக புதுடில்லி சென்றுள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிகளான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.

புதுடில்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் ஆகிய பிரச்சினைகளில் சிக்கியுளள் நிலையில், அவரது விஜயம் அமைந்துள்ளது.

இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், புதுடில்லியில் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முடிப்பதற்கு குறைந்த அளவே கால அவகாசம் உள்ளது.

இரண்டு நாள் விஜயமாக புதுடில்லி சென்றுள்ள மைக் ஃபென்னல், போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளை பார்வையிடவுள்ளார். அவற்றில் இன்னமும் சில முடிக்கப்படாமல் இருக்கின்றன அல்லது தேவையான பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாத நிலையில் உள்ளன.

போட்டிகள் தொடர்பாக எழுந்துள்ள ஊழல் புகார்களும் பெரும் கவலைகளை எழுப்பியுள்ளன.

இந்த மாதத்தின் முற்பகுதியில் போட்டிக்கான ஏற்பாட்டு குழுவின் இரண்டு அதிகாரிகள் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போட்டி தொடர்பில் முறையான கலந்துரையாடல்கள் மற்றும் கையெழுத்திடப்படாமல், பல ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகைக்கு வழங்கப்பட்தாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தப் போட்டிகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, போட்டிகளை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சர்களை கொண்ட ஒரு புதிய குழு அமைக்கும் நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய இடத்து ஆதரவும் இருக்கின்றது. இந்தப் போட்டிகளை புதுடில்லி சிறப்பாக நடத்தும் என தான் கருதுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்ஸினின் தலைவர் ழாக் ரக்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எதையுமே சாதகமாக பார்ப்பதில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter