>> Tuesday, August 24, 2010


அர்ஜுன் அட்வால்
கோல்ஃப்: இந்திய வீரர் வெற்றி
வெற்றிக் கோப்பையுடன் அர்ஜுன் அட்வால்
அமெரிக்காவின் பிரபல சர்வதேச கோல்ஃப் பந்தயம் ஒன்றை வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அர்ஜுன் அட்வாலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

வடக்கு கரோலினாவில் நடந்த புகழ்மிக்க விண்தாம் சாம்பியன்ஷிப் (Wyndham Championship) கோல்ஃப் பந்தயத்தை அர்ஜுன் அட்வால் வென்றிருப்பது, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை புது தில்லி நடத்த உள்ள இத்தருணத்தில், இந்திய விளையாட்டுத் துறைக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

அர்ஜுன் அட்வாலால் ஒரு தொழில்முறை சார் கோல்ஃப் வீரராக நீடிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி இந்த விண்தாம் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தது.

உலகத் தர வரிசையில் போதிய அளவில் அவர் முன்னிலையில் இல்லை என்பதால், தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றால்தான் அமெரிக்காவில் நடக்கக்கூடிய தொழில்முறைசார் கோல்ஃப் போட்டிகளில் இவர் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் விண்தாம் போட்டியை இவர் வென்றிருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தகுதிச் சுற்றுகளை விளையாடாமலேயே பி.ஜி.ஏ. போட்டிகளில் பங்கேற்க இவருக்கு தகுதி உண்டு.

இந்தப் பந்தயத்தில் அவர் பெற்றுள்ள பரிசுத் தொகை ஒன்பது லட்சத்து பதினெட்டாயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் நான்கு கோடியே இருபத்தியிரண்டு லட்ச ரூபாய் ஆகும்.

கல்கத்தாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் ஃப்லொரிடாவில் வசித்து வரும் அர்ஜுன், இப்படி ஒரு போட்டியை வெல்வது தனது வாழ்க்கையின் லட்சியமாக இருந்ததென்று கூறியுள்ளார்.


இந்தியாவிலே நான் வளர்ந்த காலத்திலே அமெரிக்க பிஜிஏ பந்தயங்களையெல்லாம் இரவு வெகுநேரம் கண்விழித்து தொலைக்காட்சியில் பார்ப்பேன். நோர்மன், ஃபால்டோ போன்ற சிறப்பான வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு முழுக்க தூங்காமல் இருப்பேன்.

அர்ஜுன் அட்வால்

அர்ஜுன் அட்வாலின் இந்த வியத்தகு வெற்றி இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற உற்சாக பானம் என்று கூறி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவரைப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் காலூன்றி வருகின்ற கோல்ஃப் விளையாட்டும் இந்த வெற்றியால் அங்கு பிரபலம் அடையும் என்று தெரிகிறது.

கோல்ஃப்: இந்திய வீரர் வெற்றி
வெற்றிக் கோப்பையுடன் அர்ஜுன் அட்வால்
அமெரிக்காவின் பிரபல சர்வதேச கோல்ஃப் பந்தயம் ஒன்றை வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அர்ஜுன் அட்வாலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

வடக்கு கரோலினாவில் நடந்த புகழ்மிக்க விண்தாம் சாம்பியன்ஷிப் (Wyndham Championship) கோல்ஃப் பந்தயத்தை அர்ஜுன் அட்வால் வென்றிருப்பது, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை புது தில்லி நடத்த உள்ள இத்தருணத்தில், இந்திய விளையாட்டுத் துறைக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

அர்ஜுன் அட்வாலால் ஒரு தொழில்முறை சார் கோல்ஃப் வீரராக நீடிக்க முடியுமா என்ற ஒரு கேள்வி இந்த விண்தாம் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு இருந்தது.

உலகத் தர வரிசையில் போதிய அளவில் அவர் முன்னிலையில் இல்லை என்பதால், தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றால்தான் அமெரிக்காவில் நடக்கக்கூடிய தொழில்முறைசார் கோல்ஃப் போட்டிகளில் இவர் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் விண்தாம் போட்டியை இவர் வென்றிருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தகுதிச் சுற்றுகளை விளையாடாமலேயே பி.ஜி.ஏ. போட்டிகளில் பங்கேற்க இவருக்கு தகுதி உண்டு.

இந்தப் பந்தயத்தில் அவர் பெற்றுள்ள பரிசுத் தொகை ஒன்பது லட்சத்து பதினெட்டாயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் நான்கு கோடியே இருபத்தியிரண்டு லட்ச ரூபாய் ஆகும்.

கல்கத்தாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் ஃப்லொரிடாவில் வசித்து வரும் அர்ஜுன், இப்படி ஒரு போட்டியை வெல்வது தனது வாழ்க்கையின் லட்சியமாக இருந்ததென்று கூறியுள்ளார்.


இந்தியாவிலே நான் வளர்ந்த காலத்திலே அமெரிக்க பிஜிஏ பந்தயங்களையெல்லாம் இரவு வெகுநேரம் கண்விழித்து தொலைக்காட்சியில் பார்ப்பேன். நோர்மன், ஃபால்டோ போன்ற சிறப்பான வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு முழுக்க தூங்காமல் இருப்பேன்.

அர்ஜுன் அட்வால்

அர்ஜுன் அட்வாலின் இந்த வியத்தகு வெற்றி இந்திய விளையாட்டுத் துறைக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற உற்சாக பானம் என்று கூறி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவரைப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் காலூன்றி வருகின்ற கோல்ஃப் விளையாட்டும் இந்த வெற்றியால் அங்கு பிரபலம் அடையும் என்று தெரிகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter