>> Wednesday, February 24, 2010

'தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை'
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.
இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு
சரத் பொன்சேகாஇராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது.
ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வடக்கிலும் வேட்பு மனுத் தாக்கல்
தனது சகாக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்தக் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தலைமையிலான 9 வேட்பாளர்கள் வன்னியிலும், அக்கட்சியின் முக்கியஸ்தராகிய கந்தையா அருமைலிங்கம் தலைமையிலான 12 வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுகின்றார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இன்று வவுனியாவுக்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமது கட்சியை நாட்டின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தத் தேர்தலைப் பயன்படுத்தும் வகையிலேயே வடக்கு கிழக்கு மற்றும் பொலன்நறுவை ஆகிய இடங்களில் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய தாங்கள், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஜனசெத்த பெரமுன என்ற தென்னிலங்கை அரசியல் கட்சியும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருக்கின்றது. இன்று வரையில் 3 அரசியல் கட்சிகள் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது,

Read more...

>> Tuesday, February 23, 2010

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவை குறித்த அவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
வவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல்
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இன்று வவுனியா செயலகத்தில் முதலாவது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றது.
ஓக்கம வசியோ, ஒக்கம ரஜவரு என்ற புதிய கட்சியே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்தக் கட்சியில் சிவபெருமாள் கேதீஸ்வரன் என்பவருடைய தலைமையில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையின்படி 9 வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
இதுவரையில் 3 முஸ்லிம் குழுக்கள் உட்பட 5 சுயேச்சை குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இராஜகுகனேஸ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்பின் அமைப்பாளர் ஜி.வி.சகாதேவன் ஆகியோர் தலைமையிலான இரண்டு சுயேச்சை குழுக்களும் இவற்றில் அடங்கும்.
வரும் வெள்ளிக்கிழமை வரையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அடுத்தடுத்த தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து, 66 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எச் ஐ வி தொற்றை தடுப்பதற்கான வழி குறித்த மருத்துவ முன் மாதிரிப் பரிசோதனை
உலகளாவிய ரீதியில் எச் ஐ வி தொற்றுக்கான சோதனைகள்
நடத்தப்படுவதுடன், ஒருவருக்கு அந்த நோயின் தொற்று ஏற்பட்டவுடனேயே அவருக்கு அந்த வைரசுக்கான எதிர்ப்பு மருந்து வழங்கப்படத் தொடங்கினால், 5 வருடங்களுக்குள் தென்னாபிரிக்காவில் எச்ஐவி தொற்றுவது நிறுத்தப்ப்ட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தொற்றுவதை தடுப்பதற்காக மருந்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிலும், தென்னாபிரிக்காவில் இந்த வருட இறுதிக்குள் மருத்துவ சோதனைககள் நடத்தப்படவுள்ளதாக, ஆராச்சியாளரான, பேராசிரியர் பிரயன் வில்லியம்ஸ் விஞ்ஞான முன்னேற்றத்துக்கான அமெரிக்க அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
1990 இல் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்து அறிமுகப்படுத்தப்பட்டமை எயிட்ஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய தருணம் என்பதுடன், பல மில்லியன் மக்களின் உயிரையும் அது காப்பாற்றியது.
இந்த மருந்து உடலில் உள்ள இந்த வைரஸின் செறிவை குறைத்ததால், அது அடுத்தவருக்கு தொற்றும் தன்மையை இழந்தது.
இந்த மருந்து கடந்த காலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டமைதான் அந்த நோய் பரவுதை தடுப்பதற்கான செயற்திறன்மிக்க முறையாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.
பெரும் பிரச்சினையாகும் மின்னணுக் கழிவுகள்
மின்னணுக் கழிவுகள்கணினிகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள், அவற்றை பயன்படுத்திய பிறகு தூக்கி வீசப்படுகின்ற போது சுற்றுச்சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவ்வாறு வீசப்படுகின்ற மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதற்கு புதிய விதிகள் தேவை என்று ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தினால், தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தோனேசியாவின் பாலியில் ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆட்சிக்குழுவின் சந்திப்பு நடக்கவிருக்கின்ற நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
எழுச்சியில் இருக்கின்ற மின்னணு சாதனங்களின் உறுபத்திக்கு, வீழ்ச்சிப் பக்கம் ஒன்றும் இருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, அங்கு பயன்பாட்டில் இல்லாத கணினிகள், தொலைபேசிகள், மற்றும், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் மிண்னணுக் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் முயற்சிகளுக்கும், ராக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்ற அந்தப் பொருட்களின் விற்பனைக்கும் இடையே ஒரு சமநிலை கிடையாது.
ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் மதிப்பீடுகளின்படி, உலகமட்டத்தில் வருடாந்தம் வெளியிடப்படுகின்ற மின்னணுக் கழிவின் அளவு 40 மில்லியன் தொன்களால் அதிகரிக்கிறது. அதிலும் இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, வீசப்படுகின்ற கணினிகளின் அளவு மாத்திரம் அடுத்த 10 வருடங்களில் 500 வீதத்தால் அதிகரிக்கப்போகிறது.
மின்னணுப் பொருட்கள் உலோகங்களையும், சில தீவிர நச்சு வேதியல் பொருட்களையும் கொண்டுள்ளன. ஆகவே அவற்றை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் நடவடிக்கை சிக்கலானது. ஆனால், சீனா போன்ற சில நாடுகளில் இவை முறையாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படாமல், வெறுமனே எரிக்கப்படுவதால், அவற்றில் இருந்து நச்சு வாயுக்கள் சுற்றாடலில் கலக்கின்றன.
மின்னணுக் கழிவு மீள் சுழற்சியகம் ஒன்றுபல நாடுகளில் இத்தகைய மின்னணுக் கழிவுகளை உடனடியாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தவும், ஒழிக்கவும் ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், அவை பெரும் மலைபோன்று குவிந்து சுற்றாடலுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன என்று ஐநா கூறுகின்றது.
மின்னணுக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், மீள் சுழற்சிக்கு உட்படுத்தவும் முறையாக ஒருங்குபடுத்தப்பட்ட ஒரு முறைமை தேவை என்று கோருகின்ற ஐநாவின் அந்த அறிக்கை, அவற்றை அறிமுகம் செய்வது மிகவும் செலவு மிக்கது என்றும் ஒப்புக்கொள்கிறது.
இருந்தபோதிலும் அத்தகைய நடவடிக்கைகள் மூலம் புதிய தொழில்களை உருவாக்க முடியும் என்றும், அந்தக் கழிவுகளில் இருக்கின்ற தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களை பிரித்தெடுக்க முடியும் என்றும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக துய்மையான, சுகாதாரமான சுற்றுச்சூழலை உலகுக்கு வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

Read more...

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவை குறித்த அவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்கலாம்.
வவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல்
இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இன்று வவுனியா செயலகத்தில் முதலாவது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றது.
ஓக்கம வசியோ, ஒக்கம ரஜவரு என்ற புதிய கட்சியே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்தக் கட்சியில் சிவபெருமாள் கேதீஸ்வரன் என்பவருடைய தலைமையில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையின்படி 9 வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
இதுவரையில் 3 முஸ்லிம் குழுக்கள் உட்பட 5 சுயேச்சை குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இராஜகுகனேஸ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்பின் அமைப்பாளர் ஜி.வி.சகாதேவன் ஆகியோர் தலைமையிலான இரண்டு சுயேச்சை குழுக்களும் இவற்றில் அடங்கும்.
வரும் வெள்ளிக்கிழமை வரையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அடுத்தடுத்த தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து, 66 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எச் ஐ வி தொற்றை தடுப்பதற்கான வழி குறித்த மருத்துவ முன் மாதிரிப் பரிசோதனை
உலகளாவிய ரீதியில் எச் ஐ வி தொற்றுக்கான சோதனைகள்
நடத்தப்படுவதுடன், ஒருவருக்கு அந்த நோயின் தொற்று ஏற்பட்டவுடனேயே அவருக்கு அந்த வைரசுக்கான எதிர்ப்பு மருந்து வழங்கப்படத் தொடங்கினால், 5 வருடங்களுக்குள் தென்னாபிரிக்காவில் எச்ஐவி தொற்றுவது நிறுத்தப்ப்ட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தொற்றுவதை தடுப்பதற்காக மருந்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவிலும், தென்னாபிரிக்காவில் இந்த வருட இறுதிக்குள் மருத்துவ சோதனைககள் நடத்தப்படவுள்ளதாக, ஆராச்சியாளரான, பேராசிரியர் பிரயன் வில்லியம்ஸ் விஞ்ஞான முன்னேற்றத்துக்கான அமெரிக்க அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
1990 இல் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்து அறிமுகப்படுத்தப்பட்டமை எயிட்ஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய தருணம் என்பதுடன், பல மில்லியன் மக்களின் உயிரையும் அது காப்பாற்றியது.
இந்த மருந்து உடலில் உள்ள இந்த வைரஸின் செறிவை குறைத்ததால், அது அடுத்தவருக்கு தொற்றும் தன்மையை இழந்தது.
இந்த மருந்து கடந்த காலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டமைதான் அந்த நோய் பரவுதை தடுப்பதற்கான செயற்திறன்மிக்க முறையாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.
பெரும் பிரச்சினையாகும் மின்னணுக் கழிவுகள்
மின்னணுக் கழிவுகள்கணினிகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள், அவற்றை பயன்படுத்திய பிறகு தூக்கி வீசப்படுகின்ற போது சுற்றுச்சூழலுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவ்வாறு வீசப்படுகின்ற மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதற்கு புதிய விதிகள் தேவை என்று ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தினால், தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தோனேசியாவின் பாலியில் ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆட்சிக்குழுவின் சந்திப்பு நடக்கவிருக்கின்ற நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
எழுச்சியில் இருக்கின்ற மின்னணு சாதனங்களின் உறுபத்திக்கு, வீழ்ச்சிப் பக்கம் ஒன்றும் இருக்கிறது. குறிப்பாக வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, அங்கு பயன்பாட்டில் இல்லாத கணினிகள், தொலைபேசிகள், மற்றும், தொலைக்காட்சிகள் போன்றவற்றின் மிண்னணுக் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் முயற்சிகளுக்கும், ராக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்ற அந்தப் பொருட்களின் விற்பனைக்கும் இடையே ஒரு சமநிலை கிடையாது.
ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் மதிப்பீடுகளின்படி, உலகமட்டத்தில் வருடாந்தம் வெளியிடப்படுகின்ற மின்னணுக் கழிவின் அளவு 40 மில்லியன் தொன்களால் அதிகரிக்கிறது. அதிலும் இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, வீசப்படுகின்ற கணினிகளின் அளவு மாத்திரம் அடுத்த 10 வருடங்களில் 500 வீதத்தால் அதிகரிக்கப்போகிறது.
மின்னணுப் பொருட்கள் உலோகங்களையும், சில தீவிர நச்சு வேதியல் பொருட்களையும் கொண்டுள்ளன. ஆகவே அவற்றை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் நடவடிக்கை சிக்கலானது. ஆனால், சீனா போன்ற சில நாடுகளில் இவை முறையாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படாமல், வெறுமனே எரிக்கப்படுவதால், அவற்றில் இருந்து நச்சு வாயுக்கள் சுற்றாடலில் கலக்கின்றன.
மின்னணுக் கழிவு மீள் சுழற்சியகம் ஒன்றுபல நாடுகளில் இத்தகைய மின்னணுக் கழிவுகளை உடனடியாக மீள் சுழற்சிக்கு உட்படுத்தவும், ஒழிக்கவும் ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், அவை பெரும் மலைபோன்று குவிந்து சுற்றாடலுக்கும், பொதுச் சுகாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கின்றன என்று ஐநா கூறுகின்றது.
மின்னணுக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், மீள் சுழற்சிக்கு உட்படுத்தவும் முறையாக ஒருங்குபடுத்தப்பட்ட ஒரு முறைமை தேவை என்று கோருகின்ற ஐநாவின் அந்த அறிக்கை, அவற்றை அறிமுகம் செய்வது மிகவும் செலவு மிக்கது என்றும் ஒப்புக்கொள்கிறது.
இருந்தபோதிலும் அத்தகைய நடவடிக்கைகள் மூலம் புதிய தொழில்களை உருவாக்க முடியும் என்றும், அந்தக் கழிவுகளில் இருக்கின்ற தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்களை பிரித்தெடுக்க முடியும் என்றும், இவையெல்லாவற்றுக்கும் மேலாக துய்மையான, சுகாதாரமான சுற்றுச்சூழலை உலகுக்கு வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

Read more...

>> Monday, February 22, 2010









நாடாளுமன்ற தேர்தலில் த.தே.கூ எம்.பிக்களில் மீண்டும் எத்தனை பேருக்கு வாய்ப்பு - சுரேஸ் பிரேமசந்திரன் செவ்வி
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள் மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிட்டு அதனை ஆதரித்து கட்சியில் இருந்து விலகியவர்களை தவிர மற்றவர்கள் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவரும் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நியதி இல்லை என்பதால் அது தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அர்த்தமற்றவை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை ஊடகவியலாளர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என மனைவி புகார்
ஊடகவியலாளரின் குடும்பம்
இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லையென அவரது மனைவி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செய்தி இணையதளமொன்றில் கருத்துக்களை எழுதி வந்த நிலையில் பிரகீத் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் அவர் காணாமல்போய் ஒருமாதம் கடந்துள்ள போதிலும் பொலிசாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையெனவும் அதிகாரிகளிடம் அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஊடகவியாளர் பிரகீத்தின் மனைவி சந்த்யா எக்னலிகொட குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அவரைக்கண்டுபிடிக்கும் பணியில் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சில தினங்களுக்கு முன்னர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஊடகவியாளரை கண்டுபிடிக்கும் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் கூறினார்.
தெலுங்கானா விவகாரத்தில் மேலும் ஒரு மாணவர் தீக்குளித்து பலி
தெலுங்கானா போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரிப்பதில் உள்ள தாமதத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது தீக்குளித்த மாணவர் இறந்துவிட்டதாக ஐதரபாத் நகர போலீசார் கூறுகின்றனர்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிசம்பரில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
வன்முறைகள் தொடர்ந்ததன் காரணமாக புதிய மாநிலத்ததை அமைக்கும் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்கள் பல அமைந்துள்ள ஐதராபாத் தெலுங்கானாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் விரும்புகின்றனர்

Read more...

>> Thursday, February 18, 2010

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆராய புதிய குழு
தமிழ்நாடு – கேரள மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக சர்ச்சையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமையும் அந்தக் குழுவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் தலா ஒரு பிரதிநிதியை நியமிக்கலாம். அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவோ அல்லது தொழில்நுட்ப நிபுணர்களாகவோ இருக்கலாம்.
அதேபோல், மத்திய அரசும் தொழில்நுட்ப நிபுணர்கள் இருவரை நியமிக்கலாம்.
அந்தக் குழுவில், மத்திய நீர்வளக் ஆணையம் பிரதிநிதிகள் யாரையும் நியமிக்கக் கூடாது என்றும், அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் கேரள அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே, முல்லைபெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அளித்த பரிந்துரையை எதிர்க்கப் போவதாகவும் கேரளத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீர்வளக் ஆணையத்தின் மீதான புகாரை மறுத்த மத்திய அரசு வழக்கறிஞர், நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
அந்தக் குழுவின் விவரங்கள் தொடர்பான அறிவிப்பை வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அந்தக் குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சட்டப்பிரச்சினைகள் அல்லாத பிற அம்சங்கள், அதாவது தற்போதுள்ள அணை எந்த அளவுக்குப் பாதுகாப்பாக உள்ளது, புதிய அணை கட்டப்பட வேண்டுமா, அதன் சாதக, பாதகங்கள் உள்ளிட்ட அம்சங்களில் அந்தக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.
நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு புதன்கிழமை இந்த உத்தரவை வெளியிட்டது.
கேரள எல்லைக்குள் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்குத் தேவையான நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையில், அணையின் கொள்ளளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த, கடந்த 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டது.
ஆனால், கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வந்து, அணையின் உயரம் 136 அடியாகவே நீடிக்க வேண்டும் என்று அறிவித்தது. அந்த நடவடிக்கை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும், புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
விசாரணை நடந்துகொண்டிருந்த நேரத்தில், இந்தப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்றும், நடுவர் மன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்றும் கேரளம் வாதிட்டது. அது தண்ணீர் பிரச்சினை அல்ல என்பதால் நடுவர் மன்றம் விசாரிக்க முடியாது என்று தமிழகம் வாதிட்டது. அதன்பிறகு, அணையின் பாதுகாப்புத் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி பாதுகாப்பாக நடக்கும் - உள்துறை அமைச்சர் சிதம்பரம்
இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
இந்தியாவில் நடைபெற உள்ள முக்கிய விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக தீவிரவாதக் குழுக்கள் விடுத்துள்ள மிரட்டலுக்கு அரசு பணிந்துவிடாது என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் இந்தியத் தலைநகர் டெல்லியில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் துவங்குகின்றன. அதன்பிறகு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும், ஆண்டின் பிற்பகுதியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட, அல்-கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இல்யாஸ் கஷ்மீரி என்பவர் நேற்று மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ப. சிதம்பரம் இத்தககைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
''ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும், பயிற்சியாளருக்கும், அதிகாரிகளுக்கும் இந்திய அரசு முழுமையான பாதுகாப்பு வழங்கும். நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இல்யாஸ் கஷ்மீரி உத்தரவிட முடியாது’’ என்றார் உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
ஆனால், தீவிரவாதக் குழுக்களின் மிரட்டலால் தாக்கம் ஏற்பட்டிருப்பது உண்மை. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வரத் திட்டமிட்டிருந்த நியூஸிலாந்து அணி, தனது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்து ஹாக்கியின் தலைவர் டேவிட் ஃபால்க்னர், போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக தான் எதிர்பார்த்த பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த வாரம் டெல்லி வந்திருந்த பிரிட்டனின் மூத்த போலீஸ் அதிகாரி, பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருப்பதாகக் கூறியிருந்தார்.
அக்டோபரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் வரையிலும் அதன் பிறகும் கூட, பாதுகாப்புத்தான் தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முல்லைத்தீவு பிரதேசத்தின் இடம்பெயர்ந்த மக்கள் அவதியுறுவதாக புகார்
மீனவர்கள்
இலங்கையின் வன்னியில் யுத்த முனைப்புகள் தீவிரம் பெற்றிருந்த போது பெருமளவிலான குடும்பங்கள் படகுகள் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையை வந்தடைந்தன.
இத்தகைய குடும்பங்கள் கடந்த இரு மாதங்களின் முன்னர் விடுவிக்கப்பட்டதுடன் இவர்களது படகுகளும் தற்போதுகடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசம் இதுவரை விடுவிக்கப்படாமையால் படகுகளை மீளப்பெற்றபோதும், இத்தகைய குடும்பங்கள் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே திருகோணமலையில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
விடுவிக்கப்பட்ட தங்கள் படகுகளையும் இவர்கள் புல்மோட்டையில் தங்களுக்கு அறிமுகமானோரின் பொறுப்பில் விட்டு விட்டேதிருகோணமலையில் தங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதே வேளை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் குடாநாட்டைச் சோந்தோர் மற்றும் மீள்குடியேற்றம் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்தோர் கடல்வழிப்பாதை வழியாக தங்கள் படகுகளைக் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

>> Tuesday, February 16, 2010

சரத் பொன்சேகாவின் கைதுக்கான காரணங்களை பௌத்த பீடாதிகளுக்கு தெளிவு படுத்துவோம்”-இலங்கை அரசாங்கம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கான காரணங்களை நாட்டு மக்களுக்கும் பௌத்த பீடங்களுக்கும் தெளிவு படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பொன்சேகாவின் கைதை அரசியல் பழிவாங்கல் என தவறாக வெளிக்காட்ட எதிர்க்கட்சினர் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
பொன்சேகாவின் கைதினைத் தொடர்ந்து நாட்டில் நல்லாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் பாதிப்பேற்பட்டுள்ளதாக தெரிவித்து பெளத்த பிக்குகள் கண்டியில் எதிர்வரும் 18ம் திகதி மாநாடொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ''இந்த நாட்டில் ஜனநாயகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மக்கள் கருதியதால் தான் கடந்த தேர்தலில் ஜனாதிபதிக்கு 18 லட்சம் அதிகபடியான வாக்குகளை மக்கள் வழங்கினர், சில வேளைகளில் அதனைக் கருத்தில் கொண்டு பெளத்த பிக்குகள் அறிக்கை வெளியிட்டார்களோ தெரியவில்லை'' என்று கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத்திலிருந்த போது அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக கூறி அவரை அரச படையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்ற நிலையில், பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு பௌத்த பீடாதிபதிகள் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரில் குண்டு வெடிப்பு- சிறார்கள் இருவர் பலி
மாணவர்களின் குடும்பத்தினர்கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் வீதியில் கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொழும்புத்துறை புளியடிச்சந்தியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் இலங்கை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
“அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார்
சிவா கேசவன் கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார்.
ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது. இந்தியாவின் சார்பில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் மூன்று வீரர்களில் ஒருவரான சிவா கேசவன், தனக்கு வழங்கப்பட்ட சீருடை தொடர்பிலும், வீரர்களுக்கு இந்திய விளையாட்டு நிர்வாகிகள் செய்து தந்துள்ள வசதிகள் தொடர்பிலும் குறைகளை வெளியிட்டுள்ளார்.
தரம் குறைந்த சீருடைகளே தனக்கு வழங்கப்பட்டிருந்ததால் இந்த வீரர் துவக்க விழாவில் இந்திய அணிக்கான சீருடை இன்றி கலந்துகொண்டிருந்தார். இந்த சர்ச்சையை அடுத்து இந்திய வீரர்களுக்குத் தேவையான சீருடைகளை கனடாவில் விளையாட்டுப் உபகரணங்கள் விற்கும் இந்தியர் ஒருவர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கனடாவில் உள்ள ஒரு உள்ளூர் பஞ்சாபி வானொலி மூலமாக இந்திய வீரர்களுக்கு நிதி திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறதது. கேசவன் பயன்படுத்துகின்ற லூஜ் எனப்படுகிற சறுக்குப் படுக்கை உடைந்துபோய் பழுது பார்க்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து அவர் புதிய சறுக்குப் படுக்கை வாங்க கனடாவில் வாழும் இந்திய சட்டத்தரணிகள் ஐந்து பேர் நாலரை லட்சம் ரூபாய் வரையில் நிதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவா கேசவன் அல்லாது அல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் ஜாம்யங் நம்ஜியால் என்பவரும், நெடுந்தூர பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் டாஷி லண்டுப் ஆகியோரும் வான்கூவர் வந்துள்ள இந்திய அணியில் அடங்குவர்.
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் தொடர்பில் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லையென குற்றச்சாட்டு
வெளியேற்றப்படும் தஞ்சம் கோருவோர்பிரிட்டனில் தஞ்சம் கோருவோரில் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவோர் தொடர்பில் முறையான சட்டவிதிகளுக்கு ஏற்ப நடாத்தப்படுவதில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தப்பிவந்து பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்படக்கூடாது என்பதே பிரிட்டனின் குடியேறிகள் தொடர்பான தலைமைச் செயலகத்தின் சட்டவிதி.
இதனால் தடுப்புக்காவலுக்கு அனுப்பப்படும் ஒவ்வொருவரும் 24 மணித்தியாலங்களில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படுவர் என தலைமைச் செயலகம் கூறுகிறார்.
ஆனால் சி்த்திரவதைகளுக்குள்ளான பலர் மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுப்பப்படாமல் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்னும் பலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னரும் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் தஞ்சம் கோரல் தொடர்பான சட்டவிதிகள் பிரிட்டனால் சிறந்த முறையிலேயே கடைப்பிடிக்கப்படுவதாக பிரிட்டனின் குடியேற்றத் துறை அமைச்சர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.

Read more...

>> Monday, February 15, 2010

இந்திய குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்
பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராசா கிலானி அவர்கள் நேற்று சனிக்கிழமை இந்தியாவின் மேற்கு பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு பலரை காயப்படுத்திய குண்டுத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கிலானி அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
புனே நகரில் வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் சிற்றுண்டி கடையில் குண்டு வெடித்தது. இதில் கொல்லப்பட்ட 9 பேரில் இருவர் வெளிநாட்டவர்கள். இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பமாகும் அதிகாரப்பூர்வ பேச்சுக்கள் வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் கிலானி தெரிவித்தார்.
புனேவில் நடந்த குண்டுத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்திய இந்துத்துவ தேசியவாதிகள் பாகிஸ்தான் கூட பேச்சுக்கள் நடைபெறக் கூடாது என கூறியிருந்தார்கள்.
சரத் பொன்சேகா வழக்கறிஞருக்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு
சரத் பொன்சேகா
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார். இதே கூட்டத்தில் பங்கேற்றஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐனாதிபதி தேர்தல் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்கு தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை பெளத்த பீடாதிபதிகளின் நேரடி அரசியல் தலையீடு குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்
சரத் பொன்சேகா
இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட வருமான சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கையின் நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.
முன்னதாக நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த நான்கு பீடாதிபதிகளும் பிப்ரவரி 18 ஆம் தேதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதற்கடுத்தபடியாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக இந்த பீடாதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

Read more...

>> Friday, February 12, 2010

அமைதி காக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் பொலிசாரால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்களையும் பாதுகாப்புப் படையினரையும் அமைதி காக்குமாறு பொன்சேகா கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டதாகவும் அவரது மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"சரத் பொன்சேகா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை"-அனோமா பொன்சேகா
பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த போது அரசாங்கத்திற்கு எதிரான அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவரது மனைவி நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது அலுவலகத்திலிருந்து கடந்த திங்களன்று இழுத்துச் சென்ற பாதுகாப்பு படையினர் அவரைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
அனோமா பொன்சேகாகூட்டுப்படைகளின் தளபதியாக இருந்த போது ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையென பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகா அவரது வழமையான மருத்துவரை சென்று அணுகுவதற்கான ஏற்பாட்டை உறுதி் செய்து தருமாறு அவரது குடும்பத்தினர் சர்வதேச செஞ்சிலுவை குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களை அமைதி காக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மூத்த அரச அதிகாரியான ரஜீவ விஜேசிங்க, எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அமைதியின்மையை ஏற்படுத்தி வன்முறைகளை தோற்றுவிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் செய்திகள் மற்றும் தகவல் வெளியீட்டு விடயங்களில் அரச அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றமைக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
பதவியை துறப்பதாக தகவல்துறை அமைச்சர் அறிவிப்பு
இதற்கிடையில் பி.பி.சிக்கு கருத்து தெரிவித்த தகவல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, தம்மை தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அனேகமாக ஜனாதிபதியே தமது அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மகரகம பகுதியில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு பொலிசார் அவர்களைக் கலைத்துள்ளனர்.
சரத் பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தாபய ராஜபக்ஸ சுமத்திய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவும் நார்வேயும் நிராகரித்துள்ளன
கோத்தாபய ராஜபக்ஸஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு, நிதி உதவிகளையும் பிற உதவிகளையும் அமெரிக்காவும் நார்வேயும் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் மறுத்துள்ளன.
அமெரிக்காவும், நார்வேயும் ஜெனரல் பொன்சேகாவின் பிரசாரத்துக்காக பெரும் பொருள் செலவிட்டுள்ளதாக தான் நூறு வீதம் நம்புவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய சமீபத்திய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டில் உண்மையேதும் இல்லை என்று அமெரிக்க தூதரகம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இதே போல மறுப்பு வெளியிட்ட நார்வே தூதரகம், பிற நாடுகளின் தேர்தல்களில் தான் தலையிடுவது கிடையாது என்று கூறியுள்ளது.
அதே நேரம் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் உரிமைகளையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
"பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்”-திமுக – காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை
தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ் நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று திமுக – காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்னவே அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சில எதிர்க்கட்சிகள் கூறிய புகாரைத் தொடர்ந்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
புதிய தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நிறைவடைய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிக்கை கிடைத்தவுடன் எதிர்வரும் 17-ம் தேதி அது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் புதனன்று அறிவித்தது.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் சூசகமாகக் கண்டித்திருந்தார்.
முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்திருந்தார்.
மண்டேலா விடுதலை பெற்று 20 வருடங்கள் பூர்த்தி
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டு நிறைவு தினத்தை அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
கேப்டவுன் நகரருகே மண்டேலா விடுதலையாகியிருந்த சிறை வாயிலின் முன்பு நினைவு வைபவம் ஒன்று நடந்துள்ளது.
விக்டர் வெர்ஸ்டர் சிறையின் வாயிற் கதவுக்கு வெளியே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் வர்ணங்களான மஞ்சள், கருப்பு, பச்சை ஆகிய நிறங்களில் உடையணிந்த பெருந்திரளான மக்களும், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பிரமுகர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர்; ஆடிப் பாடி கொண்டாடினர்.
தென்னாப்பிரிக்காவின் வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்தமைக்காக 1964ல் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா தனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னர், தனது 71ஆவது வயதில் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிய வேண்டும் என்ற விடுதலை வீரர்களின் கனவு மெய்ப்படவும், நான்கு ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஜனநாயகம் மலரவும் மண்டேலாவின் விடுதலை வழிவகுத்திருந்தது.
விடுதலைக்குப் பின்னர் நாட்டில் இனவெறி ஆட்சியை அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார். தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடக்க இவை வழி வகுத்தன.
1994ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதல் கருப்பின அதிபரானார் நெல்சன் மண்டேலா.

Read more...

>> Thursday, February 11, 2010

கொழும்பில் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் கலவரம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில், தலைநகர் கொழும்பின் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் இடை யே கலவரம் மூண்டதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
பொன்சேகாவின் விடுதலை கோரி அவரது மனைவி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பெரும் ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்காக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் உயர்நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக வந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சுமார் ஐம்பது பேர் அவ்வூர்வலத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி கலைக்க முயன்றனர்.
முதலில் கலைந்து ஓடினாலும் பின்னர் ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தங்களுடன் மோதிய ஆளுங்கட்சி ஆதரவாளர்களை திருப்பித் தாக்கி விரட்டியடித்து ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
இத்தருணத்தில் பொலிசாரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர்.
நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். வளாகத்துக்கு வெளியே பொலிசார் அமைத்திருந்த தடைகளை உடைத்து நீதிமன்றத்துக்குள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நுழைந்திருந்தனர்.
கலகத்துக்குப் பின்னர் அனோமா பொன்சேகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் புதிய தளபதி ஜெகத் ஜெயசூரிய, திங்கள் இரவு சரத் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்றிருந்த மூத்த இராணுவ அதிகாரி சுமித் மானவடு உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கைதாகியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் கொல்லப்படுவார் என்று தாங்கள் அஞ்சுவதாக எதிர்கட்சிகள் இன்று கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
சரத் பொன்சேகா மீதான இராணுவ குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆதராங்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இராணுவ உறுப்பினராக இருந்தபொழுதே அரசியல் வாதிகளுடன் இணைந்து செயலாற்றியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா மறுக்கிறார்.
பொன்சேகா கைது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் -ஆய்வு
ஆய்வாளர் கீத பொன்கலன்
இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் இருக்கும் நிலையில், தற்போது சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவம் காரணத்தால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, தணிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் இலங்கை அரசியல் பகுப்பாய்வாளர் கீத பொன்கலன்.
தேர்தல்கள் நடைபெற இன்னும் காலம் இருப்பதால், இந்தக் கைது சம்பவம், தேர்தல்கள் சுமுகமாக நடப்பதைக் குழப்பிவிடும் என்று நம்புவதற்கு பெரிய இடமளிக்கவில்லை என்றார் அவர்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், தென்னிலங்கையில் பெருவாரியான ஆதரவு பெற்றுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் நடந்த இந்த கைது சம்பவத்தின் விளைவாக, நாடாளுமன்றத்தேர்தலில், மக்கள் ஆதரவு குறைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, இது பெரிய அளவில் மாறுவதற்கான வாய்ப்பில்லை என்றார் கீத பொன்கலன்.
கொள்கை ரீதியாக வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி, ஒரே அணியில் திரண்டன. அந்தக் கூட்டணி ஒன்றாக நீடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், சரத் பொன்சேகாவின் கைது நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்தக் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது என்றார் கீத பொன்கலன்.
பொன்சேகா கைது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக விமர்சனம்
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய அரசின் சார்பில் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் அந்தக் கைது நடவடிக்கை குறித்து விமர்சித்திருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதேசிகன் கூறும்போது, யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை எதி்ர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Read more...

>> Wednesday, February 10, 2010

சரத் பொன்சேகா கைதை எதிர்கட்சிகள் கண்டிப்பு
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமை இரவு, கொழும்பில் பொன்சேகா அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பபு சபையில் உறுப்பினராக இருந்த பொழுதே அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாக இராணுவ விதிகளை அவர் மீறியுள்ளளார் என்பதால்தான் இந்த கைதுநடவடிக்கை என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.
பொன்சேகாவின் நடவடிக்கை ஒரு வகையில் தேச விரோதக் குற்றமாக அமைந்துள்ளது என பாதுகாப்பு விடயங்கள் சார்பாகப் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
இலங்கையின் முன்னாள் ஆயுதப் படைத் தளபதியாக இருந்த பொன்சேகாவை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர், திங்கட்கிழமை,ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.
சரத் பொன்சேகா கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க
சரத் பொன்சேகா கைது சட்டவிரோதமானது என்கிரார் ரணில்இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க
அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும்,அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.
மிருகத்தைப் போன்று இழுத்துச் சென்றார்கள்
பொன்சேகாவை மிருகத்தைப் போல இழுத்துச் சென்றதாக அவரின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை சந்திக்க செவ்வாயன்று அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக செய்திகள் கூறுன்றன.
இந்த கைதை தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டித்துள்ளது. பொன்சேகா தவறு செய்திருந்தால் அவரை உரிய முறையில் விசாரிக்கலாம் என்றும் இப்படி ஏதேச்சதிகாரமாக செயல்படக் கூடாது என்றும் அது கூறியுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்கு இந்தியா அனுமதி மறுப்பு
நாட்டுக் கத்தரி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பி.டி கத்தரிக்காய்கள், பொதுமக்களின் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காது என்பது உறுதி செய்யப்படும் வரை, அந்தக் கத்தரிக்காய்களை வர்த்தக ரீதியாக இந்தியாவில் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்புக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது ஜெயராம் ரமேஷ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்படும் வரை அந்தத் தடை தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இது மிகவும் கடுமையான முடிவு என்றாலும் கூட, விஞ்ஞானம், சமூகம், உற்பத்தியாளர், நுகர்வோர் ஆகிய அனைவரையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.
எந்த நிர்பந்தத்தின் அடிப்படையிலு்ம் தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின்போது அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்கலாமா என்பது குறித்து, நாடு முழுவதும் ஏழு நகரங்களில் சுமார் 8 ஆயிரம் பேரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த ஆலோசனைகளின்போது, பல இடங்களில் தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆளும் கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமன்றி, காங்கிரஸ் ஆளும் ஆந்திரம், கூட்டணிக்கட்சிகள் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. மேற்கு வங்கம், ஒரிஸா, பிகார் மாநிலங்களில் இருந்து மட்டும் 60 சதத்துக்கும் மேற்பட்ட கத்தரிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.

Read more...

>> Tuesday, February 9, 2010

சரத் பொன்சேகா திடீர் கைது
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை இரவு, கொழும்பில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தலைநகரில் அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவப் போலிசார் அவரைக் கைது செய்து அழைத்துச்சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார்.
ராணுவப்போலிசார் இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் , திங்கட்கிழமை,ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
"எனக்கு தெரிந்தது, நான் கேள்விப்பட்டது, எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை",என்று தெரிவித்தார் ஜெனரல் சரத் ஃபொன்சேகா.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு போர் குற்றங்களை செய்தன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
சரத் ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க
சரத் ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என்கிரார் ரணில்இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க
அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும்,அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.
அடிப்படை உரிமைகளை மீறும் செயல்
இலங்கை ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும்இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது என்று கூறும் ரணில் அவர்கள் நடு இரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல் எனவும் கூறுகிறார்.
ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது எனவும் ரணில் விக்ரமசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.
போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத் ஃபொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக தனிப்பாடசாலை
இடம் பெயர்ந்த மாணவர்களுக்கு தனிப்பாடசாலை
இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பின்னர், வவுனியாவில் தமது உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் தனியான பாடசாலை ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்த மாணவர்கள் கடந்த வாரம் வரையில் வவுனியா தெற்கு கல்வி வலயப் பாடசாலைகள் பலவற்றில் மாலை நேர விசேட வகுப்புகளில் கல்வி கற்று வந்ததாகவும், கடந்த வாரம் அவர்கள் அனைவரையும் தனியான ஒரு பாடசாலைக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்ததாகவும் பெற்றோர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனினும் மாணவர்களின் கல்வி நலனை முன்னிட்டே இடம்பெயர்ந்த மாணவர்களைத் தனியான ஒரு பாடசாலையில் வைத்து கல்வி கற்பிப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் கூறுகின்றார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
போதைப்பொருள் கடத்தல்: இந்தியர்கள் உட்பட ஐவருக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை
போதைப்பொருட்கள் கடத்தியதாக தண்டனை
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்தி வந்தார்கள் என்ற குற்றத்திற்காக நான்கு இந்தியர்கள் உட்பட ஐந்துபேருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கியிருக்கின்றது.
கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைமன்னார் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் மணற்திட்டொன்றருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்றினை சோதனையிட்ட போது, நான்கு பிரிவுகளாக நேர்த்தியாகச் சுற்றப்பட்டிருந்த ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததைக் கண்டு, படகிலிருந்த ஐந்து பேரைக் கைது செய்து மன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, 81.8 கிராம் நிறையுள்ள தூய ஹெரோயின் இருந்தமை கண்டறியப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
முதலாவது எதிரியாகிய இலங்கையர் ஹெரோயின் போதைப்பொருளை தமது உடைமையில் வைத்திருந்தார் என்பதும், அதனை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியப் பிரஜைகள் உதவியாக இருந்தார்கள் என்பதும் வழக்கு விசாரணைகளின்போது நிரூபணமாகியதையடுத்து, இந்தத் தண்டனை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பாக்குநீரிணை ஊடாக போதைப்பொருள் கடத்தி வரும் சம்பவங்கள் பல கண்டறியப்பட்டிருக்கின்ற போதிலும், இந்தியப் பிரஜைகளுடன் இலங்கைப் பிரஜை சம்பந்தப்பட்ட நிலையில் இரு நாட்டவர்களுக்கும் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்டம் தள்ளுபடி
"முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தவறானது", ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திரப் பிரதேச அரசு, அம்மாநிலத்தில் உள்ள சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய முஸ்லீம்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், நான்கு சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கொண்டுவந்த சட்டத்தை , ஆந்திர உயர் நீதிமன்றம் செல்லாதது என்று இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாதிக், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட அரசியல் முடிவுதான் இது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சமூகம் பின் தங்கியே இருக்கும். இதை சரி செய்யவேண்டிய நடவடிக்கைகள் அவசியம். காலங்கடந்து எடுக்கபப்ட்ட இந்த முடிவு முன்பே எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார்.
சாதி என்ற இந்து மத அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையவே இந்த இட ஒதுக்கீடு என்றும், இந்த இட ஒதுக்கீடு, சாதிபேதமற்ற மதமாகக் கருதப்படும் இஸ்லாமிய மக்களுக்கு தரப்படுவதில் நியாயம் இல்லை என்ற வாதத்துக்கு பதிலளித்த சாதிக், இந்த வாதம் தவறானது. பிற்பட்டவர்கள் என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அவர்கள் எந்த சாதியில் அல்லது எந்த மதத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்கக்கூடாது என்றார்.
பொதுவாக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர், கே.எம்.விஜயன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்பதே தவறல்ல. ஆனால், அதை அமல் படுத்தும் போது, யார் பிற்படுத்தப்பட்டவர் என்பதை விஞ்ஞான ரீதியாகக் கண்டறிய தவறிவிட்டதாக, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே இட ஒதுக்கீடு ஆரம்பித்த காலந்தொட்டு இருக்கின்ற, பிற்படுத்தப்பட்டவர் யார் என்பதை எப்படி முடிவு செய்வது என்பதில்தான் பிரச்சினையே இருந்து வந்திருக்கிறது என்றார்.
தெற்காசிய போட்டியில் இலங்கையின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை-இலங்கை ஒலிம்பிக் சங்கம்
டாக்கா போட்டிகளின் சின்னமான குருவிவங்கதேச தலைநகரான டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணியின் செயற்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தலைமைச் செயலரான மேக்ஸ்வெல் டி சில்வா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதுவரை நடைபெற்ற எந்தவொரு பிராந்திய விளையாட்டுப் போட்டிகளுக்கும் இலங்கை அனுப்பிய மிகப் பெரிய அணி இதுதான். அதன் அடிப்படையில் பார்க்கும் போது தாங்கள் இன்னமும் கூடுதலான பதங்கங்களை பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
தமது அணியின் ஆயுத்தங்களில் குறைபாடு இருந்ததே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம் என்றும் அவர் கூறுகின்றார். இலங்கை அரசும்,நாட்டின் பல விளையாட்டுச் சங்கங்களும் திட்டங்களை தீட்டினால் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்துடன் பேசி அதற்குரிய உதவிகளை இலங்கை ஒலிம்பிக் சங்கம் செய்யும் எனவும் மேக்ஸ்வெல் டி சில்வா கூறுகிறார்.
வடகிழக்கு பகுதியில் விளையாட்டு வளர்ச்சி தேவை
இலங்கையில் பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் விளையாட்டு துறையின் வளர்ச்சி மிகவும் தேவை என மேக்ஸ்வெல் டி சில்வா அவர்களும், இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீரருமான ஜூலியன் போலிங் அவர்களும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இருந்த சூழல் காரணமாக அங்கிருந்த சிறார்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது என்று கூறும் ஜூலியன் போலிங், பெரிய விளையாட்டு வீரர்களை உருவாக்குவது தற்போது முக்கியமல்ல என்றும் வாய்ப்பை இழந்த சிறார்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே முக்கியம் எனவும் கூறுகின்றார்.
வடபகுதியில் விளையாட்டு துறைக்காக திட்டங்கள் தீட்டப்பட்டால் சர்வதேச நிறுவனங்கள் உதவி செய்ய முன்வரும் எனவும் இருவரும் கூறுகின்றனர்

Read more...

>> Monday, February 8, 2010

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டாலர் இராணுவக் கடனுதவி
இலங்கை ஜனாதிபதியாக இரண்டாவது முறை தேர்தெடுக்கப்பட்ட பிறகு தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள், இந்த பயணத்தின் போது 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நடைபெற்ற போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதன் பின்புலத்தில் போருக்கு பின்னர் இந்த இராணுவ உடன்பாட்டின் நோக்கம் என்ன என்று இலங்கையிலிருக்கும் இராணுவப் பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார்.
அதில் தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது 300 மில்லியன் டாலர்கள் கடனுக்கான உடன்பாடுதான் என்றும் அந்தக் கடனுதவி ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள், அதாவது புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படவுள்ளது என்றும் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஆவணங்களை காண்பித்து வாகனங்களை மக்கள் திரும்ப பெறலாம் - யாழ் ஆயர்
யாழ் ஆயர் தாமஸ் செளந்திரநாயகம்
இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இராணுவத்தின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.
இந்த வாகனங்கள் தற்போது அந்தப் பகுதி அரசாங்க அதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் என இராணுவத்தினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, முதற் தடவையாக அவர் யுத்தம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 'கேரம்'
சென்னை
கேரம் விளையாட்டில் இந்தியா உலக சாம்பியனாக இருக்கும் நிலையில் தமிழகம் இந்த விளையாட்டில் முன்ணணியில் உள்ளது. சென்னையில் குடிசைப்புறங்கள் மற்றும் ஏழ்மையான இடங்களில் மிக அதிக அளவில் கேரம் விளையாடப்படுகிறது.
இந்த விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடங்களை பெற்றுள்ளனர். இந்த விளையாட்டு தமிழகத்தில் பிரபலமாக இருப்பதன் காரணம், இதை விளையாடுபவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்கிறார் நமது தமிழகச் செய்தியாளர் டி.என். கோபாலன்.

Read more...

>> Saturday, February 6, 2010

இலங்கையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீண்டும் மீள்குடியேற்றம் ஆரம்பம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாமை மற்றும் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மீளக்குடியமர்பவர்களுக்கு உடனடியாகத் தேவையான தற்காலிக வீடுகளை அமைப்பதற்குரிய கூரைத்தகடுகளின் கையிருப்பு முடிவடைந்ததன் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான கூரைத்தகடுகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
அவசரகால சட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரேரணை தொடர்பான விவாதங்களின் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 102 உறுப்பினர்களும் எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்து, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது.
அதேவேளை, நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச உடைமைகளின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகப் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
மாறுபட்ட கருத்துக்கள்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சுமுகமாக நடத்தும் நோக்கிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை களையும் நோக்கிலுமே இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தான் கருதுவதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆனால் நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், சட்டத்தின் ஆட்சியை கட்டுப்படுத்தி முடிவுகளை எடுப்பதற்கான நடைமுறையாகவே இதை பார்க்க வேண்டும் என கருத்து வெளியிடுகிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பாலகிருஷ்ணன்.
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ நா அமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது-இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா சபையின் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான உயர்மட்டக்குழுவின் சமீபத்திய அறிக்கைகளில் காணப்பட்ட தவறுகள் மிகப்பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.
குறிப்பாக அந்த அமைப்பின் தலைவர் முனைவர் ராஜேந்திர பச்சௌரி அவர்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் அந்த அமைப்பின்மீது தாங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா மன்ற செயற்பாடுகள் சமீபகாலங்களின் சாதித்ததைவிட சர்ச்சையில் சிக்கியதுதான் அதிகம். உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோபன் ஹேகன் மாநாட்டில் உலக நாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் ஏற்படாதது கடந்த ஆண்டின் மிகப்பெரும் தோல்வி யாக பார்க்கப்பட்டது.
அந்த பின்னடைவிலிருந்து ஐநா மன்றமும், பருவநிலைக்கான அதன் உலக அளவிலான அமைப்பும் மீள்வதற்குள் அந்த அமைப்பின் பருவநிலை தொடர்பான விஞ்ஞான நடவடிக்கைகளும், அது தொடர்பிலான அதன் அறிக்கைகளில் காணப்பட்ட தவறுகளும் பெரும் சர்ச்சையில் சிக்கின.
இது தொடர்பிலான விரிவான தகவலை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்.
தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினர்-பாகிஸ்தான் சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்
தற்கொலை குண்டுதாரியாகும்படி நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறும் சிறுமி மீனாதற்கொலை குண்டுதாக்குதல்கள் வாடிக்கையாகி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதியிலிருந்து ஒரு பஷ்டூன் இனச் சிறுமி, தன்னைத் தற்கொலைக் குண்டுதாரியாகுமாறு நிர்ப்பந்தித்த தனது குடும்பத்தினரிடமிருந்து தப்பி வந்து தனது கதையை பிபிசியிடம் கூறியிருக்கிறார்.
இவரது கருத்துக்களை பக்கச்சார்பற்ற வகையில் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், பாகிஸ்தான் போலிசார் இவரது இந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர் அளிக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கூறுகின்றார்கள்.
“நீ தற்கொலை குண்டுதாரியாகி இறந்தால், எங்களை விட முன்னதாக சொர்க்கத்துக்கு போவாய்" என்று அந்தப் பெண்ணின் சகோதரனும் தந்தையும் கூறியுள்ளனர்.
இவரது இளைய சகோதரியும் இந்த மாதிரி தற்கொலை குண்டுதாரியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

Read more...

>> Friday, February 5, 2010

பாகிஸ்தானுடனான பேச்சுக்களை தொடர இந்தியா முடிவு
இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையைத் துவக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேசப்படும் என இந்திய ஊடகங்களுக்கு மற்ற அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை நடத்தப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியா எதைப்பற்றிப் பேசத் தயாராக உள்ளது என்பது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக, இந்தியாவின் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமத் குரேஷி, பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்தபிறகு, தேதி முடிவு செய்யப்படும் என்றும், எல்லாப் பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் பேசித் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை துவங்கியது. ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா இடைநிறுத்தியது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் இந்தியா கூறிவந்தது.
இன்னும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பகத்தன்மை ஏற்படாவிட்டாலும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என்ற விருப்பம், இரு அரசுகளிடமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை--மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இடம்பெற்ற முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் வியாழனன்று காலை கண்டியில் இடம்பெற்றன.
வரலாற்று பிரசித்தி பெற்ற கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற நாட்டின் 62 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதே தமது தாகம் எனக் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இந்த விழாவில் நாட்டின் முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை சார்ந்த உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரச முக்கியஸ்தர்கள், ராஜதந்திரிகள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள். தமது நாட்டின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது என்கிற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த மே மாதம் வரையில் யுத்த பிரதேசமாகத் திகழ்ந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய வன்னிப்பிரதேசத்தின் பல இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும், இராணுவ முகாம்கள், காவால் நிலையங்கள் என்பனவற்றிலும் சுதந்திர தின வைபவங்கள் நடைபெற்றன. தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
முல்லைத்தீவு நகரில் முக்கிய இராணுவ தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ தளபதியுடன் முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் கலந்து கொண்டார். கிளிநொச்சி அரச செயலகத்திலும், மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
நேபாள குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவதில் மோசடி
சரவதேச அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் உலக அமைப்பு, நேபாளத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை நிறுத்திவைக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.
நேபாள குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் இந்த நடைமுறையை நிறுத்தவேண்டும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளை விட நேபாளத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு தான்.
தத்து கொடுக்கப்பட்ட நேபாள குழந்தைகளில் சிலர்
ஆனால் சமீபகாலமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள்.
உலக அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில், நேபாளத்தில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் சர்வதேச தரத்தின் கீழ் அமையவில்லை என்று கூறியுள்ளது.
நாடுகளுக்கிடையில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹேக் ஒப்பந்தத்தில் நேபாளமும் கையொப்பமிட்டுள்ளது. ஆனாலும் தத்து கொடுக்கப்படும் குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளும் வகையில் நேபாள அரசு செயற்படவில்லை என்றும், குழந்தைகள் பலவந்தமாக கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் பிறகு நாடு கடத்தப்படுவதையும் நேபாள அரசாங்கம் தடுக்கத்தவறிவிட்டதாகவும் இந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

>> Thursday, February 4, 2010

தேர்தலில் முறைகேடுகள் எனக் கூறி இலங்கையில் எதிர்கட்சியினர் பேரணி
இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்ற எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருக்கின்றன.
எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடம் மனு
இதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் வாக்கு எண்ணிக்கை மோசடிகள் போன்ற பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டு, எதிரணிக்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு புதன்கிழைமை எழுத்து மூலமான முறைப்பாட்டைச் செய்திருந்தார்.
இந்த முறைகேடுகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என அவர் தமது முறைப்பாட்டில் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
எனினும் ஜனாதிபதி தேர்தல் நியாயமான முறையிலேயே நடந்து முடிந்துள்ளது என தேர்தல் ஆணையாளர் தாயனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் பிரச்சார காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அவர், வாக்குத் திணிப்புகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது
மஹிந்த கொலை செய்ய சதி என்று அரசு கூறுகிறதுஇலங்கையில் அவசரககால சட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய எதிர்கட்சிகள் தீட்டிய சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அதிகாரிகள் அல்லது படைவீரர்கள். அரசியலில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 10க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டபட்டன என்பதை மறுக்கும் எதிர்கட்சியினர், கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறுகிறார்கள்.
அரசின் ஊதுகுழலாக செயற்பட்டுவரும் டெய்லி நியூஸ் எனும் தினசரி, ஜனாதிபதி மற்றும் இதர சிலரை கொலை செய்ய முயன்றார்கள் என அது கூறும் செயற்பாட்டில், இவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
ஊடகத்துறையினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்
சிக்கலில் இருக்கும் ஒரு பத்திரிகையும் அதன் ஆசிரியரும்அரசுக்கு ஆதரவான மற்றொரு தினசரியோ, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்த 37 பேரைத்தவிர மேலும் 20 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஊடகத்துறையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறும் உள்ளூர் ஊடக அமைப்புகள், அப்படியானவற்றை குறைக்கும் வகையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதனிடையே வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வந்த ஒரு இணையதளத்தின் ஆசிரியரான பிரகீத் எக்நலிகொட காணாமல் போய் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
செய்தியாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புகளும் கூறுகின்றன.
இலங்கையின் அரச ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் உட்பட 56 பேர் மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் இலங்கையில் ஊடகத் துறையினருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றும் அவர்கள் சுந்தரமாக செயற்பட முடியும் எனவும் அரசின் ஊடகத்துறை துணை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அமேவர்த்தனா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்
அதிகாரப் பகிர்வு உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்-திமுக
தமிழக முதல்வர் கருணாநிதிஇலங்கையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளது.
இது தொடர்பில் இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் போது ஒரு தீர்மானம் இயற்றப்படும் என திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுபேற்றுள்ள சிவ சங்கர் மேனன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த போதும் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியை விடுவிப்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் இடம் பெற்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

>> Tuesday, February 2, 2010

இலங்கையில் சில இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனக் கூறி சில இராணுவ அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பபடுகிறார்கள்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷமன் ஹுலுகல்ல இந்தத் தகவலை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.இப்படியாக எவ்வளவு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த அதிகாரிகள் செயற்பட்டார்கள் என்கிற தகவல் கிடைத்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
நாட்டின் முப்படைகள் மற்றும் காவல்துறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கையே இது எனவும் லக்ஷமன் ஹுலுகல்ல கூறுகிறார்.
இந்த இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
லங்கா பத்திரிகையை மூட அரசு எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
சிக்கலிலுள்ள பத்திரிகையும் அதன் ஆசிரியரும்இலங்கையிலிருந்து வெளியாகும் லங்கா வாராந்திர பத்திரிகையின் அலுவலகத்தை மூட இலங்கையின் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையை கொழும்பிலுள்ள ஒரு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே வி பி கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தாகக் கூறப்படும் அந்த பத்திரிகையில் அலுவலகத்தை மூட இலங்கையில் குற்றத் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்திருந்தாலும் அதன் ஆசிரியர் இன்னமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசின் உத்தரவுகளுக்கு அடிபணியாத ஊடகங்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகாக உள்ளூர் ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த பத்திரிகையில் வெளிவந்த சமீபத்திய கட்டுரை ஒன்று பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் விசாரணைகள் சம்பந்தமான் விதிமுறைகளை மீறியுள்ளது என்று குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.
புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது:கோத்தபாய ராஜபக்ஷ
போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை இல்லை விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.
இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்படும் என அறிவிப்பு
சம்பந்தர் மற்றும் ரவூஃப் ஹக்கீம்இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேண்டுகோளின்படி வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அக்கட்சிகள், அடுத்து வரவரவிருக்கின்ற பொதுத் தேர்தலிலும் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன.
இந்தத் தகவலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நிராகரித்து வாக்களித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்துடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்பும் தமது கட்சிக்காரர்கள் மீது வன்முறைகள் தொடர்வதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் அரசுக்கு எதிராக வாக்களித்தமைக்காக திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் பாஸ் நடைமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்கிறார் சிதம்பரம்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது என்று இந்தியா கூறுகிறதுவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபாகரின் மரணத்தை உறுதி செய்யும் மரணச் சான்றிதழ் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு தெரிவித்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை முறைப்படி முடித்து வைப்பதற்காக அதற்கான மரனச சான்றிதழை இந்தியா இலங்கையிடம் கோரியிருந்தது.
ஆனால் அத்தகைய மரணச் சான்றிதழ் ஏதும் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் தலைவரை மேற்கோள்காட்டி ஞாயிறன்று செய்திகள் வெளியாயின.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் இது தொடர்பான தகவலைக் கோரியபோதே இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனம் இதை தெரிவித்ததாக செய்திகள் கூறின.
இந்நிலையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதனை உறுதி செய்யும் முகமான மரணச் சான்றிதழ் இலங்கையிடமிருந்து இந்திய அரசுக்கு கிடைத்துவிட்டது என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more...

>> Monday, February 1, 2010

காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள்
இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.
இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மக்கள் முன்னர் தங்கியிருந்த பகுதிகளில் இன்னமும் மிதிவெடிகளை முழுமையாக அகற்றும் பணி முடிவடையாததே அவர்களை மீள்குடியேற்ற முடியாததற்கு காரணம் என்று இலங்கை அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
தாங்கள் எதிர்பார்த்ததை விட மிதிவெடி அகற்றும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும், மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.
உயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவம் அமைச்சர் தெரிவிக்கிறார்.
யாழ்குடாவில் அழுத்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் வரைப்படம்
இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் தலைமகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.
இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.
இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.
யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தும் தொடரும் அச்சுறுத்தல்கள் - த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள போதிலும் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை கூறுகின்றார்.
இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இரண்டு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட 4 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் இதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவொன்றினாலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தமிழக முதல்வருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பான மரண சான்றிதழ் இந்தியாவுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter