>> Thursday, August 26, 2010



மிருக பலிச் சடங்கு நடந்தது
இலங்கையில் சிலாபத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் மிருக பலிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது.

இந்தச் சடங்கை நடத்தக் கூடாது என்று அகில இலங்கை பிக்குமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலாபம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

ஆனாலும், அந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுக்கப்ப்பட்டது.

இந்த மிருக பலிச் சடங்கு பல காலமாக நடந்து வருவதாக பிபிசியிடம் கூறிய ஒரு ஆலய நிர்வாகி, உள்ளூர் மக்கள் இந்த சடங்குக்கு மிகுந்த ஆதரவைத் தந்ததாகவும், கூறினார். அது மாத்திரமின்றி அனைத்து மத மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மிருக பலிச் சடங்கை அகில இலங்கை இந்து மாமன்றம் என்னும் அமைப்பும் கண்டித்திருந்தது.

ஆனால், இன்று ஆலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பேச்சியம்மன் சிலைக்கு முன்பாக பக்தர்களால், மூன்று ஆடுகளும் சுமார் 7 கோழிகளும் பலியிடப்பட்டு, அவை அங்கேயே சமைக்கப்பட்டு வந்திருந்த அனைத்து இனமக்களுக்கும் பகிரப்பட்டதாக ஆலய நிர்வாகி தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter