>> Saturday, December 26, 2009

2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.



--------------------------------------------------------------------------------


விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 32 பேர் விடுதலை


புனர்வாழ்வு நிலையத்தில் சில முன்னாள் சிறார் போராளிகள்
இலங்கையின் வடக்கே சிறுவர் போராளிகளாக இருந்தவர்களில் 32 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தத் தகவலை, சிறுவர் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கா தெரிவித்திருக்கின்றார். வவுனியா பூந்தோட்டம் பகுதியில் செயற்பட்டு வருகின்ற சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இவர்களுக்குப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புனர்வாழ்வு நிலையத்தை ஒரு தடுப்பு முகாமாகத் தாங்கள் கருதவில்லை என்றும், அது ஒரு பாடசாலையாகவே இயங்கி வருகின்றது என்றும் விடுதலை பெற்றுள்ள சிறுவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கல்வி கற்பதற்கும், தொழில் பயிற்சி பெறுவதற்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இங்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தச் சிறுவர்களின் விடுதலை குறித்து கருத்து வெளியிட்ட அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க அவர்கள், எஞ்சியுள்ள சிறுவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


புத்துயிர் பெறும் அறமைக் மொழி



அறமைக் - இயேசுக் கிறிஸ்து பேசிய மொழியிது. சிரியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திரின் மத்தியில் மாத்திரம் பேசப்படுகின்ற இந்த மொழி அண்மைக்காலத்தில் எழுச்சி பெற்றதாக உணரப்படுகின்றது.

சிரியாவில் இருக்கின்ற மூன்று கிராமங்களில் உள்ள குடும்பங்களால் மாத்திரமே இந்த மொழி தற்போது பேசப்படுகின்றது. அதில் ஒரு கிராமம் மலோவ்லா.

இந்த அறமைக் மொழியைப் அழியவிடாமல் காப்பாற்றி பிறந்தது முதலே இந்த மொழியைக் கற்று அதில் பேசிவருகின்ற சுமார் பதினையாயிரம் பேரில் ஒருவர் ஜோர்ஜ் றிஷ்கலா. இந்த மொழியை அதன் எழுத்து வடிவத்தில் கற்பிப்பதை அவர் ஊக்குவிக்கிறார்.

ஆண்டவரே தனது மக்களுக்கான போதனைகளை அறமைக் மொழியில்தான் நிகழ்த்தியுள்ளார் என்றும் தான் சிலுவையில் அறையப் பட்ட போது இறுதியாக அவர் பேசியதும் இந்த மொழியில்தான் என்றும் றிஷ்கலா கூறுகிறார்.

அறமைக் மொழியை எழுதப், படிக்கக் கற்பிப்பதற்காக ரிஷ்கலா மூன்று வருடங்களுக்கு முன்னதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார்.அவரால் நடத்தப்படும் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 100 மாணவர்கள் கற்கிறார்கள்.

சிரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்துவருகிறார்கள். ஒருவர் மற்றவரது மத நிகழ்வுகளை கொண்டாடுவதும் வழக்கம்.

அந்த வகையில் விவிலிய காலத்து மொழியான அறமைக்கின் புத்துயிர்ப்பும் இந்த நாட்டின் வரலாற்றுச் செழுமையில் மேலும் ஒரு படிமமாக அமையும்.

Read more...

>> Tuesday, December 22, 2009

இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா விளக்கம் கோரியுள்ளது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சரணடைய முனைந்த அந்த அமைப்பின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விளக்கம் கோரியுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதியின் அலுவலகம், அது தொடர்பில் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை மேற்கோள் காட்டி முதல் முறையாக இந்தக் குற்றசாட்டுகளை இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஞாயிறன்று செய்தி வெளியிட்டுருந்தது.

ஆனால் தான் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தவறாக புரிந்தது கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த செய்தி வெளியான பிறகு ஜெனரல் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இதேவேளை, விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல் ஒன்று வெளிநாடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டு இலங்கை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார அளித்த செவ்வியையும் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


ஏ9 வீதியில் தனியார் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கம்


ஏ9 ஓமந்தை வீதித் தடை
இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் தனியார் வாகனப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக வடபிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமாகிய பசில் ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்றே தனியார் வாகனங்கள் இந்த வீதியின் ஊடாகப் பயணங்களை மேற்கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியின் ஊடாகப் பொதுமக்கள் பேருந்துகளில் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார்கள். பொதுமக்கள் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் குடாநாட்டு மக்கள் யாழ் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளில் ஏறி, தென்பகுதிக்கான பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இந்த நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஏ9 வீதியில் தனியார் வாகனங்கள் பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தனியார் பேரூந்துகளும் தற்போது சேவையில் ஈடுபட்டிருக்கின்றன.

எனினும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற பொதுமக்கள் வவுனியா தேக்கவத்தையில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிக்குச் சென்று தமது ஆள் அடையாள அட்டையின் நிழல் பிரதிகள் இரண்டைக் கொடுத்து, இராணுவ அனுமதி பெற்ற பின்பே பிரயாணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.



--------------------------------------------------------------------------------


இந்தியாவில் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு


தெலுங்கானாவில் பொலிசார்
தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் இருந்து தெலங்கானா என்கிற தனி மாநிலத்தை பிரிப்பதற்கு ஆதரவாக இந்திய நடுவணரசு கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது.

தெலங்கானாவுக்கு எதிராகவும் ஆந்திராவில் சமீபத்தில் கடும் வன்முறைகள் மற்றும் அதை ஒட்டிய அரசியல் அதிரடி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்த பின்னணியில், இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக சிறியமாநிலங்களாக பிரிக்கப்படுவதை இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பதாக அறிவித்துள்ளன.

இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு ஏன் என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு உறுப்பினர் டபிள்யூ ஆர் வரதராஜன் அவர்கள் அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்



--------------------------------------------------------------------------------


கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி


சச்சின் டென்டுல்கார்
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Read more...

>> Monday, December 21, 2009

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இடம்பெயர்ந்தவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படும் - தேர்தல் ஆணையாளர்

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்குரிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார்.

இதற்கென உரிய விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு,தேர்தல் திணைக்கள அதிகாரிகளின் ஊடாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தச் செயற்பாடுகள் திருப்திகரமாக இடம்பெறவில்லை எனவும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆண்டு வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் சில தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் பதிவு செய்வதற்கான உரிமைகள் எவருக்கும் மறுக்கப்படவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொருத்தமட்டில் கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பதிவுகளின்படி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வவுனியா தேர்தல் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.


--------------------------------------------------------------------------------


முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா நாடு திரும்பினார்


அலி சாகீர் மெளலானா

இலங்கையின் கிழக்கே 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவுடன் தொடர்புபட்டிருந்தார் என்று பேசப்பட்டு அதன் காரணமாக எதிர் நோக்கிய அரசியல் நெருக்கடி நிலையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகீர் மெளலானா மீண்டும் நாடு திம்பியுள்ளார்.

அந்நேரம் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமுன்றத்தில் பதவி வகித்த அவர் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

ஆளும் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலில் பிரவேசிப்பதற்காகவே தற்போது நாடு திரும்பியுள்ளதாக தமிழோசைக்கு தெரிவித்தார்



--------------------------------------------------------------------------------


இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் ஏன் - ஒரு அலசல்


உணவுப் பொருட்களின் விலை உயர்வு

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அண்மைக் காலத்தில் உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் கடந்த வாரம் நாடாளுமன்ற செயற்பாடுகளே ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்பட்டது. இந்தியாவில் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது என்றும் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்து கொண்டிருக்கின்றனர் என்று அரசு சொல்லி வரும் நிலையில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. ஆசிய நாடுகளின் வளர்ச்சி ஏற்றுமதியையே சார்ந்துள்ளது என்றும், அதன் காரணமாக ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சினை ஏற்படும்போது அது மற்ற நாடுகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னையிலுள்ள லயோலா கல்லூரியின் பொருளாதாரத் துறையின் தலைவர் டாக்டர் ஜோசஃப் ஜெயபால் கருத்து வெளியிடுகிறார்.

முன்னர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது தொழிற் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும்இ இதன் காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவில் உணவு விநியோகத்திலும் சரியான கொள்கைகள் கிடையாது என்றும் கூறும் டாக்டர் ஜோசஃப் ஜெயபால் விவசாயத் துறையில் செய்யப்படும் முதலீடுகளும் பெருமளவில் குறைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்



--------------------------------------------------------------------------------


தமிழ் திரைப்படத்துறையின் எதிர்காலம் குறித்த அலசல்


'காஞ்சீவரம்' திரைப்படம்

சமீபத்தில் இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பான FICCI திரைப்படத்துறையினருடன் இணைந்து சென்னையில் நடத்திய மாநாட்டில், பிரச்சினைகள் ஆங்காங்கே இருந்தாலும் தமிழ்த்திரைப்படத்தின் எதிர்காலம் சிறப்பாகவே இருப்பதாகக் கூறப்பட்டது.

Read more...

>> Saturday, December 19, 2009

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - பிரதான வேட்பாளர்களின் பிரசாரங்கள் சூடு பிடிக்கின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்த மறுதினமே அந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்ற ஜெனரல் சரத் பொன்சேகாவும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

22 பேர் இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், இந்த இரு முக்கிய வேடபாளர்களும் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இன மக்களின் தேசிய வாத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே தமது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.


சரத் பொன்சேகா
இலங்கையில் சிங்கள மக்களின் புனித நகரங்கள் இரண்டில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மத குருமாரின் ஆசிர்வாதங்கள் மற்றும் பெரும் கூட்டங்களுடன் இருவரும் ஆரம்பித்துள்ளனர்.

புத்தபெருமானின் புனித தந்தம் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள மத்திய மலையகத்தின் கண்டி நகரில் ஜெனரல் பொன்சேகாவின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கண்டி நகர மையமே அவரது கூட்டத்துக்காக நிரம்பி வழிந்தது. கூட்டத்தை சரியாக பார்ப்பதற்காக கூரைகளிலும், மரங்களின் கிளைகளிலும் மக்கள் ஏறி நின்றனர். பலத்த மழைக்கு மத்தியிலும் அவர்கள் அவ்வாறு கூடிநின்றனர்.

சிங்கள பௌத்தர்களின் மற்றுமொரு புனித நகரான அநுராததபுரத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பொன்சேகாவினதைப் போன்ற பெரிய கூட்டம் அங்கும் திரண்டிருந்தது.

--------------------------------------------------------------------------------


மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய கசாப் முன்னைய குற்ற ஒப்புதலை வாபஸ் பெற்றுக் கொண்டார்


தாக்குதலின் போது கசாப்
கடந்த வருடம் மும்பாய் நகரின் மீதான தாக்குதலை நடத்தியவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரேயொரு தாக்குதலாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த கசாப், தான் முன்னர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

கொலை மற்றும் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகியவை உட்பட முகமட் அஜ்மல் கசாப் மீது 86 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

தன்னை பொலிஸார் பலதடவவைகள் தாக்கி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட பலவந்தப்படுத்தியதாக அவர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார்.

160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான மும்பாய் தாக்குதலை நடத்திய 10 பேரில் கசாப்பும் ஒருவர் என்று இந்திய அரச சட்டத்தரணிகள் கூறுகிறார்கள்.



--------------------------------------------------------------------------------


"இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரிலிருந்து 30 ஆயிரம் படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்" - இந்திய பாதுகாப்பு அமைச்சர்


காஷ்மீர் எல்லை வரைபடம்
இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த இரண்டு வருட காலமாக ஆயுததாரிகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளதால் அங்கிருந்து சுமார் முப்பதாயிரம் படையினர் மீள அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவிக்கின்றார்.

எதிர்காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் மேலும் படைக்குறைப்பை மேற்கொள்ள அராசாங்கம் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வாகங்களுக்குட்பட்ட காஷ்மீரின் எல்லைகளைப் பிரிக்கும் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்​கை குறைக்கப்படவில்லையென இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படையினர் மீள அழைக்கப்படவுள்ளமை குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல் ஒன்று அவசியம் என தெரிவித்துள்ள இந்தியக் கட்டுப்பாட்டுக் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள், பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்த தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.



--------------------------------------------------------------------------------

Read more...

>> Friday, December 18, 2009

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டி

இலங்கையில் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 பேரது மனுக்கள் தேர்தல் ஆணையரால் ஏற்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் உட்பட 23 பேர் இன்று வேட்பு மனுக்கள் இன்று தேர்தல் ஆணையரிடம் கையளிக்கப்பட்டன.

மொத்தம் 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு வேட்பாளரின் வேட்புமனு தேர்தல் ஆணையரால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இப்போது 22 பேர் களத்தில் உள்ளனர்.

ஒரு புத்த பிக்கு, இடதுசாரி முன்னணி வேட்பாளர் கலாநிதி விக்ரமபாகு கருணரத்ன, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

.



--------------------------------------------------------------------------------


வரிச்சலுகைத் தொடர்பில் வாக்குறுதியை மீறியது இலங்கை என்று ஐரோப்பிய ஆணையம் குற்றச்சாட்டு



இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அளிக்கப்படும் ஜி எஸ் பி பிளஸ் எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை தொடர்பில் கொடுத்த வக்குறுதியை இலங்கை கடைபிடிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வரிச்சலுகையை பெறும் நாடுகள் சர்வதேச அளவுகோலின் படி மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இலங்கை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று ஐரோப்பிய ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் வர்த்தகத் துறையின் பேச்சாளர் கிறிஸ்டியானா ஹொஹ்மேன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த விசாரணையை அடுத்து, இலங்கைக்கு அளித்து வரும் வரிச்சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கும் வகையில் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன் மீது முடிவெடுக்க உறுப்பு நாடுகளுக்கு இரண்டு மாதம் கால அவகாசம் உள்ளது. அந்த முடிவு வெளியான பிறகு அதை நடைமுறை படுத்த ஆறுமாத காலம் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணையில் தமது தரப்பு கருத்துக்களையும் வழங்க இலங்கைக்கு ஐரோப்பிய ஆணையம் அழைப்பு விடுத்தது. ஆனாலும் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்துவிட்டது என்றும் ஐரோப்பிய ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விசாரணைகளில், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் குறிப்பிட்ட அளவில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.



--------------------------------------------------------------------------------


இழுபறியில் காலநிலை மாநாடு



காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐ.நா மன்ற மாநாட்டின் இறுதியில் சர்வதேச நாடுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் இறுதி ஒப்பந்தம் அல்லது பிரகடனம் குறித்த வரைவு நகலை வடிவமைப்பதில் இன்று காலையில் பெரும் குழப்பம் நிலவியது. அத்துடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததைப்போல இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை கலந்துகொள்ள மாட்டார் என்று ஊகங்கள் எழுந்தன.



மாநாட்டில் கலந்துகொண்ட பல நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

ஜெர்மனியின் அரச தலைவர் அங்கெலா மெர்கல், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பல தலைவர்கள் உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முடிவு இந்த மாநாட்டின் இறுதியில் ஏற்படாமலே போகலாம் என்று எச்சரித்துள்ளனர்.

தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையில் இந்த மாநாட்டில் காணப்படும் பரஸ்பர நம்பகமற்ற தன்மையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.



இந்த மாநாட்டை நடத்தும் டேனிஷ் அரசின் நடவடிக்கையும் இந்த பிளவை மேலும் அதிகப்படுத்தியது என்று கூறலாம். அதாவது கடந்த ஒரு ஆண்டு காலமாக சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்பட்டுவந்த மாநாட்டு இறுதி ஒப்பந்தத்தின் நகலுக்கு மாற்றாக, டேனிஷ் அரசு தயாரித்து வைத்த நகல் அறிக்கையை மற்றைய நாடுகள் மீது திணிப்பதற்கு டேனிஷ் அரசு செய்த முயற்சிகள் சிக்கலை மேலும் அதிகப்படுத்தி விட்டது.

Read more...

>> Thursday, December 17, 2009

இலங்கையில் இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்று பிரிட்டன் கூறுகிறது


மஹிந்த ராஜபக்ஷ-டேவிட் மிலிபாண்ட்( பழைய படம்)
இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு உண்மையான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும், அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வாக்களிக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த ஒரு பதிலேயே இதை அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்மை சாதகமான முன்னேற்றம் என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் மனிதநேயப் பணியாளர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களுக்கு சென்று வரவும், முன்னாள் போராளிகளை சந்திக்கவும் முழுச் சுதந்தம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேறும் வகையில் எல்லா விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் வகையில் இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேரடியாக பிரிட்டிஷ் அரசு இணைந்து செயற்படும் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும்


மஹிந்த ராஜபக்ஷ-சரத் பொன்சேகா
இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் அதை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலும் சுதந்திரமாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நடவடிக்கைதான் அனைத்து சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கருதுபவர்கள் அனைவரும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கபடுவதற்கு பங்காளிகளாக இருந்து உடன்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

அங்கு உள்நாட்டு மோதல் ஏன் ஏற்பட்டது என்பதனை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியதும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து இலங்கை அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அந்நாட்டிடம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்-அமெரிக்கா


அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணைச் செயலர் பிலிப் க்ராலி

இலங்கையில் விடுதலைப் புலிகளுடான போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தியுள்ள விசாரணைகள் குறித்து தாங்கள் அறிந்துள்ளதாகவும் அதை தாங்கள் ஆதரிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணைச் செயலர் பிலிப் ஜே க்ராலி நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது இதை தெரிவித்தார்.

ஐ நா வின் விசாரணை அறிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா கோரியுள்ளது.

மேலும் அங்கு முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றும் அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் பிலிப் ஜே க்ராலி தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


சிவாஜிலிங்கத்தின் முடிவு தனிப்பட்டது என்று டெலோ கூறுகிறது


தா தே கூ உறுப்பினர் சிவாஜிலிங்கம்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிட எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும் டெலோ அமைப்பின் முடிவு அல்ல என்றும் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தமது முடிவை வெளிப்படுத்தாமல் இருப்பது தமிழ் மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இது தொடர்பிலான முடிவை எடுப்பதில் காலதாமதமாவது தமிழ் மக்களை சங்கடப்படுத்தும் நிலைக்கு தள்ளும் என்று தான் கருதுவதாகவும் அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இம்மாதம் 19 ஆம் அல்லது 20 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிடக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.



--------------------------------------------------------------------------------


சுற்றுச்சூழல் மாசடைவதை காற்றாலை மின்சாரம் தடுக்கும்
மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகள்

காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்தான் வெப்பமயமாதலின் பின் விளைவுகளிலிருந்து உலகைக்காக்கும் வழியாகப் பார்க்கப்படுகிறது.

நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.

காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அகில இந்திய அளவில் கடன், வரிச்சலுகை இவற்றின் மூலமாக காற்றாலை மின் உற்பத்தியை மத்திய அரசு வளர்த்தெடுக்க முடிந்ததென்றால், தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசுகள் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலும், உற்பத்தியாளர் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபாடு காண்பித்து வந்ததால்தான் மாநிலம் இத்துறையில் முன்னிலை வகிக்க முடிகிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

காற்றிலிருந்து மின்சாரம் என்றாலும் எல்லா இடத்திலும் உற்பத்தி செய்துவிடமுடியாது. ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் வீசும் இடங்களில்தான் காற்றாலைகளை நிறுவமுடியும். தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலேயே அந்த வேகத்தில் காற்று வீசுகிறது.

அத்தகைய பகுதிகளில் உற்பத்திசெய்யக்கூடிய வாய்ப்பில் 75 சதத்தினை ஏற்கெனவே முற்றிலுமாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதாக, இனி செல்லக்கூடிய தூரம் அதிகம் இல்லை என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் கனகசபை.

சூரிய ஒளியில் தான் எதிர்காலம்?


சூரிய ஒளியை பயன்படுத்தும் ஒரு இந்திய கிராம மக்கள்
எரிசக்தித் துறையினைப் பொறுத்தவரை இந்தியாவின் எதிர்காலம் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது, ஆனால் தளவாடங்களின் விலையைக் கட்டுப்படுத்தி மக்கள்டையே அந்தவகையில் மின்சாரத்தைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் அவ்வழியில் வெற்றி காணமுடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Read more...

>> Wednesday, December 16, 2009

இலங்கையில் தமிழர் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ உண்மை -பிரிட்டிஷ் பத்திரிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தினர் கைதிகளை சுட்டுக் கொல்லுவதாக குற்றஞ்சாட்டி அது தொடர்பில் வெளியான வீடியோப் படங்கள் ஆதாரமானவையே என்று பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று கூறுகிறது.

ஜனவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ ஐரோப்பாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோப் படப்பதிவில் இலங்கை இராணுவ சீருடையில் இருப்பதைப் போன்று தோன்றும் ஒருவர் நிர்வாணமாகவும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருந்த இருவரை சுட்டுக் கொல்வதாக காண்பிக்கிறது.

பிபிசி உட்பட இந்த வீடியோப் படப் பதிவு பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

ஆனால் இந்த வீடியோ புனையப்பட்ட ஒன்று என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.

எனினும் சுயாதீனமான தடயவியல் நிபுணர் ஒருவர் நடத்திய ஒரு ஆய்வில் அந்த வீடியோ படப்பதிவில் ஏமாற்றும் செயலோ அல்லது ஒட்டி வெட்டும் வேலையோ இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக அந்த அந்த நாளிதழ் கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


ஐனாதிபதித் தேர்தலில் போட்டி -சிவாஜிலிங்கம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று இதுவரை அறிவிக்காத நிலையில். சிவாஜிலிங்கம் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்போது இருக்கும் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கக் கூடிய சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் இனத்தின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தவே தான் போட்டியில் இறங்குவதாக அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய நடவடிக்கையின் ஒழுங்கு நடவடிக்கையை தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய சிவாஜிலிங்கம், தான் டெலோ அமைப்பில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


கீரிமலை சிவன்கோயில் திறப்பு

கீரிமலை ஆலயம்

இலங்கையில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்குப் பொது மக்கள் இன்று முதல் இராணுவத்தின் முன்னனுமதியின்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சேந்தான்குளத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியை இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைத்து நகுலேஸ்வரம் ஆலயத்திற்கான பொதுமக்களின் பிரயாணத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவத்தில் யாழ் அரச அதிபர் கே.கணேஸ், முக்கிய இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆலயத்தைச் சென்றடைந்த இவர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்டார்கள்.


யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம்

ஆலயத்திற்குச் செல்கின்ற பொதுமக்களின் வசதிக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்து போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் அங்கு எவரும் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பத்தொன்பது வருடங்களின் பின்னர் பொதுமக்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள இந்த ஆலயம் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தற்போது அது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், ஆலய கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா நகுலேஸ்வரக் குருக்கள் தெரிவித்திருக்கின்றார்.

Read more...

>> Tuesday, December 15, 2009

அகில இந்திய வானொலியின் ராஜாராம் - சிறப்பு செவ்வி


வானொலித் துறையானது பல்வேறு வடிவங்களில் மாற்றம் அடைந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் உங்களின் கருத்து?
வானொலி மற்றும் ஒலிபரப்பு நுட்பங்கள் முன்னேறி வருகிறது. அன்மையில் எங்களுக்கு அகில இந்திய வானொலியில் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வானொலியில் இருந்து அந்த பயிற்சியை வழங்கினர். வானொலித் தொடர்பான பல வேலைகளை ஒருவரே எப்படி செய்வது என்பது தான் அந்தப் பயிற்சியின் நோக்கம்.

உதாரனமாக ஒரு விவசாய நிகழ்ச்சியை அந்த விவசாயி இருக்கும் பகுதிக்கே சென்று நிகழ்ச்சியை பதிவு செய்து அங்கேயே அதனை எடிட் செய்து செயற்கைக்கோள் மூலம் நிலையத்திற்கு அனுப்பி அப்படியே ஒலிபரப்பும் வகையில் அந்தப் பயிற்சி இருந்தது.

அந்தப் பயிற்சியின் நிறைவில் கூறினேன், பயிற்சி நன்றாக இருக்கிறது ஆனால் இதனை செயல்படுத்தினால் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். ஆனால் பயிற்சி அளித்தவர் கூறினார், இதன் மூலம் பல புதிய செய்திகனை உடனுக்குடன் வழங்கலாம். ஆனாலும் அதற்கான நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தற்பொழுது சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆள்பற்றாக்குறை, புதிய ஆட்களையும் சமீபகாலமாக நியமிப்பதில்லை.

தமிழ் செய்தி அறிக்கையில் தங்களின் அனுபவம் குறித்து கூறுங்கள்?
டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளில் ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய செய்தி அறிக்கைகள் மட்டுமல்லாமல் தமிழ் செய்திகளும் இணையத்திலும் கேட்கலாம். நியூஸ் ஆன் டிமான்ட் இணையதளத்தில் தமிழ் செய்திகளை கேட்பதோடு படிக்கவும் செய்யலாம்.

தமிழ் செய்திப் பிரிவில் நானும் சபீதா குமாரும் முழு நேர ஊழியர்கள். மற்றவர்கள் அனைவரும் பகுதி நேர பணியாளர்கள். தமிழில் டைப் செய்வதற்கு உதவியாக ஒரு மென் பொருளை ஹிந்திப் பிரிவில் கொடுத்தார்கள். அதன் துணை கொண்டு தமிழிலேயே தட்டச்சு செய்து படிக்க ஆரம்பித்தோம். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

இணையம் தங்களுக்கு எந்த அளவிற்கு செய்தி தயாரிப்பில் பயன்படுகிறது?
சென்னை வானொலி நிலையம் காலை தயாரிக்கும் மாநிலச் செய்திகள் மற்றும் திருச்சி வானொலி நிலையம் மதியம் தயாரிக்கும் முக்கியமான மத்திய செய்திகளை தற்பொழுது இணையத்தில் பார்த்துக்கொள்வதால் அவற்றையெல்லாம் மத்திய செய்திப்பிரிவுக்கு எடுத்துக்கொள்வோம். இது எங்களது செய்திப் பிரிவு டைரக்டருக்கு பிடித்துவிட்டது.

பொங்கல் விழாவின் போது எங்களால் தொடங்கப்பட்ட இந்த சேவை மற்ற மொழி பிரிவினர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் எங்களது இயக்குனர் தமிழ் பிரிவினர் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக உள்ளனர் என்றது தான். அங்கு வந்த குஜராத்தி மொழி பிரிவின் தலைவர் “நாங்கள் இந்த பணியினை ஏற்கனவே செய்து வருகிறோம்” என்றார். அதற்கு இயக்குனர் “தமிழ் பிரிவினர் அதனை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துள்ளனர்” என்றது மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது எனலாம்.

புது தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு எப்படி செயல்படுகிறது?
முதலில் செய்திகள் “பொது செய்திப்பிரிவு அறைக்கு” வரும். அதனை அங்குள்ள எடிட்டர் பெற்று மொழிப்பிரிவுக்கு அனுப்புவார். அவர் நல்ல எடிட்டராக இருந்தால் முக்கிய செய்திகள் அனைத்தினையும் எங்களுக்கு அனுப்புவார். ஒரு சிலர் தமிழ் நாடு என்று வந்தால் மட்டுமே அந்த செய்தியை எங்களுக்கு அனுப்புவர். இப்படி ஒவ்வொரு பிரிவாக கடந்து வரும்பொழுது, ஒரு சில முக்கியச்செய்திகள் விடுபட்டுவிடும். ஆனால் இந்த இணையதள வசதி வந்த பிறகு அது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுவிட்டது எனலாம்.

வானொலி பணிக்கு தாங்கள் எந்த ஆண்டில் நுழைந்தீர்கள்?
1973 மே மாதம் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு பிரிவில் செய்தி எழுத்தராக பணியில் சேர்ந்தேன். அதற்கு முன் திருநெல்வேலி தினமலரில் பணியில் இருந்தேன். அதன் பின் மதுரை மற்றும் சென்னை தினமலரில் பணியாற்றினேன்.

தங்களின் படிப்பு எங்கே தொடங்கியது?
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னடப்பள்ளி. எனது உயர் நிலைப்படிப்பு எங்கள் ஊரின் அருகேயேத் தொடங்கியது. அதன் பின் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய பேராசிரியர் தா. வளனரசு, அவர் என்னை வழிநடத்திடா விடில் நான் ஏதேனும் ஒரு அரசு அலுவலகத்தில் கிளர்க்காக பணியை முடித்திருப்பேன். தமிழ் மேல் ஒரு பற்றுதலை உருவாக்கியவர் எனலாம். காரணம் அவர் ஒரு நல்ல பேச்சாளர். நான் இளங்கலை பொருளாதாரம் படித்துவிட்டு வேலைத் தேடிக்கொண்டு இருந்த சமைத்தில் இவர் தான் என்னை தினமலரில் சேர்த்துவிட்டார். (தொடரும்)
Labels: அகில இந்திய வானொலி, ராஜாராம்

Read more...

உங்களுக்குத் தெரிந்த தட்டச்சு முறையைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யவும். உதவிக்கு பக்கத்தின் இறுதிப் பகுதிக்குச் செல்லவும்.






தெரிவு செய்க: தமிழ்-ஆங்கிலம் தமிழ் தட்டச்சு (F12 - English)






உதவி


இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அன்பு' என்று மாற்றித்தறும். பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் தெரிந்தவர்கள் 'தமிழ்-ஆங்கிலம்' முறையையும் 'தமிழ் தட்டச்சு' முறையையும் தெரிவு செய்து பயன்படுத்தவும்.
சில உதாரணங்கள்:

இடையில் ஆங்கில எழுத்துக்களை வரவழைக்க F12 -ஐ அழுத்தவும். மீண்டும் F12 - ஐ அழுத்தும் போது பழைய முறையப் பெறலாம்.
அன்பு - anbu, அப்பா - appaa, தமிழ் - thamiz, அழகு - azaku
ழ - za
ஞ - nja

ந - wa

ங் - ng
ஞ் - nj
ந் - w

யூ - yU
கூ - kU
கே - kE

கெ - ke
ண் - N
ன் - n

Read more...

கோபன்ஹேகன் மாநாடு: செல்வந்த நாடுகளின் போக்குக்கு வளர்முக மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்ப்பு

காலநிலை மாற்றம் தொடர்பாக கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச உச்சமாநாட்டில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

தமது கரிசனைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன என்று கூறி ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இந்தியா சீனா போன்ற வளர்முக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.

இந்நாடுகள் தங்களது ஒத்துழைப்பையும் விலக்கிக்கொள்வதாகக் கூறியிருந்தன.

கோபன்ஹேகனில் ஏற்படும் புதிய உடன்படிக்கை கியோட்டா ஒப்பந்தங்களை ஒட்டி அமைய வேண்டும் என்று இந்த நாடுகள் கோருகின்றன.

கியோட்டோ ஒப்பந்தப்படி புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்கும் பொறுப்பு தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மீதே உள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் கோரிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

புவியை வெப்பமடையச் செய்யவதை கணிசமான அளவில் குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு உடன்பாடு எட்டப்படுவதற்கு மிகக் குறைந்த அளவான கால அவகாசமே உள்ளது என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இவ்விவகாரம் தொடர்பில் கோபன்ஹேகன் மாநாட்டை அவதானித்துவரும் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சலீம் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


நீதிபதி தினகரனை பதவி நீக்கக் கோரி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மனு


நீதிபதி பி.டி.தினகரன்
ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கர்நாடக மாநில தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றம்சாட்டி பதவியகற்றும் செய்யும் 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுப்பதற்கான மனு ஒன்றை இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 76 பேர் கையளித்துள்ளனர்.

பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக போன்ற கட்சிகளின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள இந்த மனு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி பி.டி.தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேர்வுசெய்யப்படுவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு வழங்கியிருந்த பரிந்துரையை இந்திய அரசு அண்மையில் நிராகரித்திருந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வலுவிருப்பதால் அவர் உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக நீடிக்கக்கூடாது என்று மகஜர் கையளித்துள்ள நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து இந்து நாளிதழ் சட்ட விவகாரச் செய்தியாளர் ஜே.வெங்கடேசன் வழங்கும் விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


குறைவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு கூடுதல் பயன்; வெகுவான ஊதியம் பெறுவோரால் சமூகத்திற்கு இழப்பு: பிரிட்டனில் புதிய ஆய்வு


மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளிகளால் சமூகத்திற்கு நல்ல பலன் கிடைப்பதாகக் அறிக்கை கூறுகிறது.
பங்கு சந்தை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டு வங்கி ஊழியர்களைக் காட்டிலும் மருத்துவமனை ஊழியர்களும், குப்பை அள்ளுபவர்களும் சமூகத்திற்கு அதிகம் பயன்தரக்கூடியவர்களாக இருக்கின்றனர் என பிரிட்டனின் இடதுசாரி பொருளாதார ஆய்வு மையம் ஒன்று கூறுகிறது.

குறிப்பிட்ட ஒரு வேலையால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன என்று ஒரு புதிய வகையில் மதிப்பிடும்போது இவ்வாறான முடிவு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளையும் சேர்ந்த ஊழியர்களால் சமூகம் பெறுகின்ற பயன் என்ன? அந்த ஊழியர்கள் பெறுகின்ற சம்பளம் என்ன? என்பவற்றை ஒப்பிட்டு தி நியூ எகனாமிக் பவுண்டேஷன் என்ற ஆய்வு மையம் மதிப்பீடு ஒன்றைச் செய்துள்ளது .

சுகாதாரம் அற்ற ஒரு மருத்துவமனையால் பரவக்கூடிய நோய்களினால் சமூகத்துக்கு ஏற்படும் செலவை கருத்தில் கொண்டு பார்க்கையில், அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு டாலர் சம்பளம், பத்து டாலர்கள் மதிப்புள்ள பயனை சமூகத்துக்கு அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.


வருமான வரி கணக்காளர்கள் பெறும் ஒரு டாலர் சம்பளத்துக்கு சமூகம் 47 டாலர்களை இழப்பதாகக் கூறப்படுகிறது
முதலீட்டு வங்கி வர்த்தகர் ஒருவர் பெரும் சம்பளம் பெறுபவர் என்றாலும், உலகப் பொருளாதாரமே பாதிக்கப்படுவதற்கு வழிவகுத்திருந்த வர்த்தக சந்தை ஸ்திரத்தமை குலைவுக்கு இவர்களும் ஒருவகையில் காரணமாய் இருந்துள்ளனர். அவ்வகையில் பார்க்கையில், இந்த வங்கி வர்த்தகர்கள் பெற்ற ஒவ்வொரு டாலர் சம்பளத்துக்கும் சமூகம் ஏழு டாலர்கள் மதிப்பை இழந்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.

சமூகம் நிஜமாகவே பெற்ற பயனின் மதிப்பு இவ்வாறு இருக்கும்போது, இவர்களுக்கான ஊதியத்தில் மட்டும் ஏற்றத்தாழ்வு ஏன்? என இந்த அமைப்பு கேள்வி எழுப்புகிறது.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


விளையாட்டரங்கம்

அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அணிகள் இழந்துள்ளன.
2012 ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது, டென்னிஸ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது.
உலக குத்துச் சண்டை ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை உக்ரைன் நாட்டின் விடாலி கிளிட்ஸ்க்ஷோ தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

Read more...

>> Monday, December 14, 2009

தலைப்புச் செய்திகள் பார் • பேச்சு • தொகு
ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் மாநாடு 2009 (சின்னம் படத்தில்) டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் ஆரம்பமானது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியத் துடுப்பாட்ட அணி, தேர்வுத் துடுப்பாட்ட அணிகளுக்கான உலகத் தரவரிசையில் முதல் தடவையாக முதல் இடத்துக்கு வந்துள்ளது.
வங்காளதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டு குறைந்தது 45 பேர் காயமடைந்தனர்.
இரசியாவின் யூரல் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பேர்ம் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
பாக்கிசுத்தான் ராவல்பிண்டியில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 குழந்தைகள் உட்பட 35க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உருகுவேயின் ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் கெரில்லா போராளி ஒசே முகிக்கா வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிசெய்திகள் - மேலும் செய்திகள்..
டிசம்பர் 2009 செய்திகள்
இந்திய, இலங்கை, உலகச் செய்திகள்: பார் • பேச்சு • தொகு




<< டிசம்பர் 2009 >>
ஞா தி செ பு வி வெ ச
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31

MMIX
அண்மைய நிகழ்வுகள்
உரும்கி கலவரங்கள்
ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்
புதுக்குடியிருப்பு ஊடறுப்பு
முல்லைத்தீவுப் படுகொலைகள்
சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி
பிரித்தானியத் தமிழர் பேரணி
கனடா தமிழர் பேரணி
பிரான்சியத் தமிழர் பேரணி

அண்மைய இறப்புகள்
விச்சிசுலாவ் தீகனொவ்
வித்தாலி கீன்ஸ்புர்க்
தெ. நித்தியகீர்த்தி
தருமபுரம் சுவாமிநாதன்
சி.பி.முத்தம்மா
நாத்திகம் இராமசாமி
கவிஞர் பாலா
எஸ். வரலட்சுமி
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
அரங்க முருகையன்
நார்மன் போர்லாக்
தொகு

தொடர் பிரச்சினைகள்
ஈழப்போர்
ஈராக்கியப் போர்
தார்ஃபூர் போர்

டிசம்பர் 5:
கல்குடாவில் படையினர் சுட்டதில் பொதுமகன் கொல்லப்பட்டார்
இரசியாவில் இரவு விடுதியில் வெடி விபத்து: 102 பேர் உயிரிழப்பு
டிசம்பர் 4:
வங்காள தேசத்தில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
சுமாத்திராவில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து காரணமாக 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ர்த்துவதற்காக நேபாளத்தின் அமைச்சரவைக் கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்றது. (சீஎனென்)
பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
டிசம்பர் 3:
சோமாலியாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தான்சானியர்களை நெதர்லாந்து கடற்படையினர் விடுவித்து 13 சோமாலி கடற்கொள்ளைக்காரர்களைப் பிடித்தனர். (ஏபி)
சீனாவில் ஜூலையில் உருமுச்சியில் இடம்பெற்ற கலவரங்களில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேருக்கு மரண தண்டனை வழங்க்கப்பட்டது. (பிபிசி)
போபாலில் நச்சுவாயுக் கசிவினால் 3,787 பேர் இறந்த 25 ஆண்டு நிறைவு நினைவுகூரல் இந்தியாவில் இடம்பெற்றன. (த டைம்ஸ்)
சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்
படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
டிசம்பர் 2:
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பாய்மரப்படகுப் பயணிகள் விடுதலை
டிசம்பர் 1:
ஒந்துராசின் ஜனாதிபதியாக பொர்ஃபீரியோ லோபோ சோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஹஃபிங்டன் போஸ்ட்)
17 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக வட கொரியா தனது நாணய மதிப்பை உயர்த்தியது. (யொன்ஹாப்)
வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்
முன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு

Read more...

கோட்டாபய ராஜபக்ஷ போர் குற்றங்களுக்கு உத்தரவிட்டார் - சரத் பொன்சேகா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைவரும், வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவருமான ஜெனரல் சரத் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் கடந்த மேமாதம் முடிவுக்கு வந்த வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டுமே ஒழிய அவர்கள் சரணடைய இடம்தரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது பாதுகாப்புச் செயலர் கோட்டாபயதான் என்று ஜெனரல் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

யுத்தம் நடந்த சமயத்தில் களத்தில் நின்ற இராணுவத் தளபதிகளுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் மூலம் தனக்கு இந்த விபரங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர் தடுத்து நிறுத்தம்


ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதியை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு இந்திய நடுவணரசு ஒப்புக்கொண்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னைக்கு கிருஷ்ணா நீர் அளிக்கும் அணையின் கதவுகளை ஆர்ப்பாட்டகாரர்கள் மூடியிருக்கிறார்கள். அதே சமயம் தாங்கள் பதவி விலகுவதாக சனிக்கிழமையன்று அறிவித்த 20 அமைச்சர்கள் ஆந்திர முதல்வர் ரோசைய்யா அவர்களின் வேண்டுகோளையடுத்து தங்களது முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.



--------------------------------------------------------------------------------


தமிழகத்தை பிரிக்கும் எண்ணத்திற்கு இடமில்லை - தமிழக முதல்வர்


தமிழக முதல்வர் கருணாநிதி

தெலுங்கானா விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, தாமதமான முடிவும், அதை தொடர்ந்து அவசரமான முடிவையும் எடுக்க கூடாது என்பது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் சிலரும் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, திமுகவுக்கு அப்படி ஒரு கருத்து இல்லை என்றும், தமிழக மக்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தமிழகத்திற்கும், ஆந்திரப் பிரதேசத்திற்கும் இடையிலான போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

Read more...

>> Friday, December 11, 2009

புதிய தெலுங்கானா மாநிலம் உருவாகிறது


புதிய மாநிலம் கேட்டு போராடியவர்கள்
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து, தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள்.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து, தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள்.

அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை துறப்பதாக அறிவித்துள்ளனர்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்



இலங்கை சிறைச்சாலைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி; வவுனியாவில் இன்று அமைதிப்பேரணி நடைபெற்றுள்ளது.

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்தப்பேரணி நடந்தது.

அரசியல் கைதிகளின் உறவினர்கள் பாதுகாவலர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் பேரணி வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணையக அலுவலகத்தின் எதிரில் இருந்து ஆரம்பமாகி வவுனியா அரச செயலகத்தில் சென்று முடிவடைந்தது.

மனித உரிமைகள் அமைச்சருக்கு எழுதப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்களினால் மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள், வவுனியா அரச செயலக அதிகாரிகள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்டவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------


இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கக் கோரிக்கை


கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி
இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் வெகுவாக நடந்துவரவே செய்கிறது.

Read more...

>> Thursday, December 10, 2009

புதுமாத்தளனில் இறந்த படையினருக்கான நினைவுத் தூபியை இலங்கை ஜனாதிபதி திறந்து வைத்தார்

இலங்கை அரசினால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி அங்கு போர் நினைவுத் தூபி ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கும் இன்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதியுடன் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

மடுத் தேவாலயத்திற்கும் முதற்தடவையாகச் சென்ற அவர் அங்கு இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்டார்.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இறுதிச் சமர் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்குச் சென்ற அவர் அங்கு போரினால் உயிரிழந்த படைவீரர்களுக்கான நினைவுத் தூபி ஒன்றினையும் திறந்து வைத்திருக்கின்றார்.

புதுமாத்தளன் நினைவுத்தூபி, ஆயுத கிளர்ச்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்குமே ஒழிய, அதனை தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதன் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நினைவிடம் ஒன்றை அமைப்பது குறித்தும் தான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


டெல்லியில் இலங்கை தூதுக்குழு


இந்திய வெளியுறவு அமைச்சருடன் கோத்தாபாய மற்றும் பசில் ராஜபக்ஷ ( ஆவணப்படம்)
இலங்கையிலிருந்து மூன்று உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று புதனிரவு புதுடெல்லி வந்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபஷ, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை அந்தக் குழுவினர் வியாழக்கிழமையன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றிருக்கும் நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 500 கோடி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், அங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்தியாவிடம் எடுத்துரைக்கவும், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, இலங்கையில் ஜனவரி இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



--------------------------------------------------------------------------------


கச்சதீவு ஒப்பந்தம் மீறப்படுவதாக கருணாநிதி குற்றச்சாட்டு


முதல்வர் கருணாநிதி
இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் மீறப்படுவதாகக் தமிழக முதல்வர் கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்துபோன ஒன்று, மறு பரிசீலனை செய்யமுடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கச்சத்தீவு அருகாமையில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கோ, அங்கே யாத்திரை செல்வதற்கோ எவ்வித இடையூறும் அளிக்கப்படக்கூடாது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் உருவான நெருக்கடி காலகட்டத்தில் அவை குறித்த ஷரத்துக்களை இலங்கை அரசு திரும்பப்பெற்றதாக செய்திகள் வெளியாயின என்று கருணாநிதி கூறினார்.

அத்தகைய செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் அண்மை நிகழ்வுகள் இருக்கின்றன, இந்நிலை தொடரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.



--------------------------------------------------------------------------------


'இந்திய அரசபடை- மாவோயிஸ்ட் இடையேயான மோதல்களால் சிறார் கல்வி பாதிப்பு'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்


இந்திய மாவோயிஸ்டுகள்
இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களால் இந்தியாவின் விளிம்பு நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறார்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாவதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் சின்னமாக பார்க்கும் மாவோயிஸ்ட்டுகள், அவற்றை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

அரசாங்கப் படைகள் பள்ளிக்கூடங்களில் தளமமைப்பதால், அவை தாக்குதல் இலக்காவதாகக் கூறி, படைகள் பள்ளிக்கூடங்களைத் தாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

Read more...

>> Wednesday, December 9, 2009

இலங்கை நிலவரம் பற்றிய செனட் அறிக்கை - அமெரிக்க இராஜதந்திரி இலங்கை விஜயம்

அமெரிக்காவின் மூத்த இராஜதந்தரிகளில் ஒருவரான ரொபர்ட் பிளேக் இலங்கையில் போருக்குப் பின்னரான மீள் இணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் இலங்கை சென்றுள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் முதற் தடவையாக இலங்கை சென்றுள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பில் அமெரிக்காவின் செனட் சபை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் விடயங்களில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்



--------------------------------------------------------------------------------


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் விவசாய முயற்சிகளில்


வடக்கு கிராமம் ஒன்று
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளவர்கள் விவசாய முயற்சிளில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவில் பத்தாயிரம் பேர் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இவர்களில் நாலாயிரம் குடும்பங்கள் நெற்செய்கை மற்றும் காய்கறிச் செய்கையில் தற்போது ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

நெற்செய்கைக்கென இரண்டு ஏக்கர் காணியும், தோட்டச் செய்கைக்கென ஒரு ஏக்கரும் அதிகாரிகளினால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. தோட்டச் செய்கையில் 2000 விவசாயிகள் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


ஆந்திராவை பிரித்து தெலுங்கனா என்ற தனி மாநிலம் அமைய வேண்டுமென கோரும் போராட்டம்


எல்லை வரைபடம்
தென் மாநிலமான ஆந்திராவில், 10 மாவட்டங்களைக் கொண்டு தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டிஆர்எஸ் எனப்படும் தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தொடர்ந்து 10வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடரும் நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

உடல்நிலை மோசமடைந்து வருவதால், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்களின் அறிவுறுத்தலையும் சந்திரசேகர் ராவ் நிராகரித்துவிட்டார்.

ராவின் இரத்தப் பரிசோதனை, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதை உறுதி செய்திருப்பதாகவும், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் சந்திரசேகர் ராவ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என அரசு உறுதியளித்தால்தான் தனது உண்ணாவிரதத்தை நிறுத்தப் போவதாக ராவ் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தை உள்ளடக்கிய 10 மாவட்டங்களைக் கொண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read more...

>> Tuesday, December 8, 2009

'இலங்கைக்கு தற்போதைக்கு இந்திய எம்பிக்களை அனுப்புவது உசிதமல்ல'- எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கையில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ள, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவது உசிதமானது அல்ல என்று கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்புவது சரியாக இருக்குமா என்று கேட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகப் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவது குறித்து அரசு தீவிரமாக் பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்வதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ள நிலையில், அதை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் இன்று தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம்தான் நிரந்தரத் தீர்வு காண முடியும் என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் சிங்களவர்களுக்கு இணையாக, சிறுபான்மை தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியா அதைத் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் கட்சி மாறினார்


இலங்கை ஜனாதிபதியுடன் எஸ்.பி.திஸாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்று விலகி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திடம் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை எடுத்தாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப்பகிர்வை ஏற்றுக்கொள்ளாத ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஆதரிக்க தான் விரும்பவில்லை என்றும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா வெற்றிபெற்றால் அவருடன் இணைந்து சில காலங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இராணுவ ஆட்சியை உருவாக்க மக்கள் விடுதலை முன்னணி சூழ்ச்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எந்த தீர்மானத்தையும் அறிவிக்காதுள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


குறைந்த விலையிலான தண்ணீர் வடிகட்டி


புதிய நீர் வடிகட்டியை அறிமுகப்படுத்தும் ரத்தன் டாடா
இந்தியப் பன்னாட்டு நிறுவனமான டாடா குழுமம் குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடிய புதிய தண்ணீர் வடிகட்டும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களை குறிவைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டருக்கும் குறைவான இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி இயங்க மின்சாரமோ, தொடர்சியான தண்ணீர் விநியோகமோ தேவையில்லை.

இந்த சாதனத்தை தயாரிக்க 10 ஆண்டுகள் ஆனது. இந்த சாதனம் புதிய சந்தைகளை திறந்து விட்டிருப்பதாக டாடா கூறிகிறது.

உலகம் முழுதவதிலும் 90 கோடி பேர் சுத்தமான குடி நீர் கிடைக்காமல் உள்ளனர் என்றும் சுகாதார வசதி குறைவாக உள்ளதால், வயிற்றுப் போக்கு காரணமாக அதிக அளவிலானோர் இறக்கின்றனர் என்றும் ஐ நா கூறியுள்ளது.

Read more...

>> Saturday, December 5, 2009

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது: இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை அரசுக்கு சில ஆட்சேபங்கள் இருந்தாலும், அந்தச் சட்டத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றும், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறினார்..

தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதாக எம்.பி.க்கள் கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கிருஷ்ணா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்த நிதியை இலங்கை அரசு பயன்படுத்துவதைக் கண்காணிக்க வழிகாட்டு முறைகள் உள்ளதாகவும், ஐநா. மன்ற அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் மூலமாகவும் கண்காணித்து வருவதாகவும் அமைசச்ர் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

மேலும், எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டபடி, இலங்கைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் ஃபொன்சேகாவை சந்திக்கலாம்: இரா.சம்பந்தர்


அண்மையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்திருந்தார் இரா.சம்பந்தர்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் தாம் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்பதை பல கட்சிகள் அறிவித்துவிட்டாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது பற்றிய ஒரு நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த புதன் கிழமையன்று இலங்கை ஜனாதிபதியையும் பின்னர் ஐக்கிய தேசியக் கூட்டணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சந்தித்துப் பேசியுள்ளார்.

தேவைப்பட்டால் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்நிறுத்தப்படும் ஜெனரல் ஃபொன்சேகா அவர்களையும் தாங்கள் சந்திக்க வாய்ப்புண்டு என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்றும் சம்பந்தர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பின்போது தாம் தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசவில்லை என்றும், தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் பேசியதாகவும் சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


இலங்கையில் யுத்தத்தின் பின்னர் 2500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக புகார்கள் வந்துள்ளன



இலங்கையில் கடந்த மே மாதம் முடிவுக்குவந்த யுத்தத்தின் பின்னர் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டவர்கள், அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் இருந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

உறவினர் கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு என்ற அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த அமைப்பின் பிரதிநிதி மகேந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


உல்ஃபா அமைப்பினரை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது வங்கதேசம்



இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரை வங்கதேசம் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஆங்கிலத்தில் சுருக்கமாக உல்ஃபா என்றழைக்கப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அரபிந்த ராஜ்கோவாவை சென்ற வாரம் கைது செய்துள்ள வங்கதேச பாதுகாப்புப் படையினர் தற்போது அவரை இந்திய எல்லைக் காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர ராஜ்கோவா ஆர்வமாக உள்ளார் என்று தெரிகிறது. உல்ஃபா அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது, உல்ஃபா அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதோ என்ற ஊகங்களும் சந்தேகங்களும் எழ வழிவகுத்துள்ளது.

ஆனால் அஸ்ஸாமின் இறையாண்மை குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இல்லாதவரை அரசாங்கத்துடன் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இதுவரை கைதாகாமல் தப்பிவரும் உல்ஃபா அமைப்பின் இராணுவப் பிரிவு கடும்போக்குத் தலைவரான பரேஷ் பரூவா பிபிசிடம் தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத தொடக்கத்திலும் உல்ஃபா அமைப்பின் இரண்டு முக்கியப் பிரமுகர்களை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்திருந்தது.

வங்கதேசத்திலிருந்து செயல்படும் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் மற்றும் இந்தியப் பிரிவினைவாதிகள் மீது வங்கதேசத்தின் அவாமி லீக் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.



--------------------------------------------------------------------------------


பருவநிலை மாற்றத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை



பருவநிலை மாற்றத்தால், தெற்காசிய மக்களின்- அதிலும் குறிப்பாக தமிழர்களின் - பிரதான உணவு தானியமான நெற்பயிரின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் தற்போதைய நிலையில் சராசரியாக இரண்டரை முதல் ஐந்து டன் வரை நெல் விளைகிறது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக புவி வெப்படைந்துவருவதால், அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நெல் விளைச்சலில் பதினைந்து முதல் இருபது சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று வேளாண் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அத்தகைய ஆராய்ச்சியை செய்துவருகிறது.

Read more...

>> Thursday, December 3, 2009

கூடுதலான அமெரிக்க துருப்புக்களை எதிர்ப்போம்:தாலிபான்கள்


தாலிபான் போராளி ஒருவர்
ஆப்கானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படையினரை அனுப்புவது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவு, தங்களின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆப்கானில் உள்ள தாலிபான்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் போர் உக்திகள் வெற்றி பெறாது என்றும், இது வெளிநாட்டுத் துருப்புக்கள் மத்தியில் அதிக அளவில் உயிர் இழப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் தாலிபான்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.

தாலிபான்களால் வெல்ல முடியாது என்ற செய்தியை வலுவாக எடுத்துக் கூறவும், கிளர்சியை விட்டு கௌரவமான வழியில் வெளியேற அவர்களுக்கு ஒரு பாதையை அமைக்கவும் தான் கூடுதலாக கொடுக்கப்படும் வளங்களை பயன்படுத்த விரும்புவதாக ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நெட்டோ நேசப் படைகளின் தளபதியான ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


18 மாதங்களில் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்க முடியும் என்கிறார் ஆப்கானின் வெளியுறவு அமைச்சர்


ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படையினர்
சர்வதேச உதவியுடன், ஆப்கன் ராணுவப்படைகள் நாட்டின் பாதுகாப்புக்கு 18மாதங்களில் பொறுப்பேற்றுக்கொள்ளத் தொடங்க முடியும் என்று ஆப்கன் வெளியுறவு அமைச்சர் ரங்கின் டட்பார் ஸ்பண்டா கூறியுள்ளார்.

ஆயினும், அண்டை நாடான பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள், இந்த திட்டமிடப்பட்ட துருப்பு அதிகரிப்பு அதன் எல்லைகளுக்குள் ஒரு மோசமான விளைவையே ஏற்படுத்தும் என்ற தமது கவலையை மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, நேட்டோவின் தலைவர், ஆண்டர்ஸ் பாக் ராஸ்முசென், கூட்டணியின் உறுப்பு நாடுகளும் அதன் கூட்டாளிகளும் 2010ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 5000 கூடுதல் படையினரை அனுப்பப்போவதாகக் கூறியிருக்கிறார்.



--------------------------------------------------------------------------------


போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு


போராடும் ஆர்வலர்கள்
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு, இந்தியாவின் போபால் நகரில் இருந்த அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் பலர் இறந்தனர்.

இந்தச் சம்பவம் இடம் பெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான நிவாரணம் இன்னமும் கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்திய அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் இழப்பீட்டுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இது தொடர்பில் போபால் விஷவாயு கசிவுச் சமபவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் ஜென்னி டாலி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருவது ஏன்?


தங்கக் கட்டிகள்
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தங்கத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுமே தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என்று சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர் டாகட்ர் யூ ஷங்கர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடையே தங்கத்தின் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்கிற எண்ணமும் தங்கத்தின் தேவையை உயர்த்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதாலேயே அமெரிக்க டாலரின் வீழ்ச்சிக்கான காரணமாகவும் அமைந்துள்ளது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

இன்னும் பத்தாண்டுகளுக்கு டாலரின் மதிப்பு உயருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இதே வேளை சீனாவின் ஏற்றுமதி மிக அதிக அளவில் இருப்பதாகவும், அவர்களிடம் இருக்கும் இரண்டாயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கான கையிருப்பை இதுவரை அமெரிக்க அரசின் முதலீடுகளில் செய்து வந்ததாகவும், அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அந்த பணத்தில் தங்கம் வாங்க முன்வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுக்கிறார்.

டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயம் இன்னமும் உலகளவில் ஏற்றுக் கொள்ளாத நிலை இருப்பதாலும், சர்வதேச வர்த்தகம் இன்னமும் டாலரிலேயே செய்யப்பட்டு வருவதாலும் தங்கம் ஒரு பாதுகாப்பான வைப்பாக கருதப்படுகிறது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

Read more...

>> Tuesday, December 1, 2009

உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையையும் மீறி, இந்திய பொருளாதாரம் கடந்த காலாண்டுப் பகுதியில் சுமார் எட்டு சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது.

இந்தியாவில் தேவையையும், உற்பத்தியையும் ஊக்கப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் குறைந்த வட்டி வீதம் ஆகியவற்றால் ஏற்பட்ட ஊக்கத்தின் அடிப்படையில், செப்டம்பருடன் முடிந்த 3 மாத காலத்தில், இந்திய பொருளாதாரம் சுமார் 8 வீதத்தால் வளர்ச்சிகண்டுள்ளது.

உற்பத்தி 9 வீதத்துக்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அதேவேளை, வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமானங்கள் குறித்த திட்டங்கள் மீதான செலவீனங்கள் 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

உலக நிதித்துறை நெருக்கடியில் இருந்து தமது பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக பெரிய அரசாங்க நிதித்திட்டங்களில், இந்திய அரசாங்கம் கடுமையாக முதலிட்டுள்ளது.

ஒரு மூத்த ஆசிய வங்கியியல் ஆய்வாளரின் கருத்துப்படி இந்த முடிவுகள் பெரும் ஆச்சரியத்தைத் தருபவையாகும்.

இந்திய பொருளாதாரத்தின் வியக்க வைக்கும் வளர்ச்சியின் பின்னணிகளை அலசுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் சீனிவாசன். தமிழோசைக்கு அவர் வழங்கிய பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


கிளிநொச்சி நகரை ஒட்டி மீள்குடியேற்றம் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமப்பகுதிகளிலும் தற்போது, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக்கரையோரப் பிரதேசமாகிய பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்கள் பலவற்றில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இடம்பெயர்ந்த மக்கள் (ஆவணப்படம்)

மீளக்குடியமர்ந்துள்ள பகுதிகளில் பாடசாலைகள், ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த மாதம் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவ தற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அங்கு மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் போக்குவரத்து வசதிக்காக கிளிநொச்சி நகரில் இலங்கை போக்கு வரத்துச் சபையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறந்து பேரூந்து போக்குவரத்துச் சேவைகளை இன்னும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றி கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ள மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


எயிட்ஸ் சிகிச்சையில் புதிய பரிந்துரை

தற்போதைக்கு உலகில் 40 லட்சம் மக்கள் எயிட்ஸ் வைரசுக்கு எதிரான மருந்துகளை பெறுகிறார்கள். ஆனால், இன்னும் ஒரு 50 லட்சம் பேரைப் பொறுத்தவரை அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படுகின்ற போதிலும், இந்த மருந்து அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

எச்.ஐ.விக்கு எப்போது சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டால், மேலும் 30 தொடக்கம் 50 லட்சம் பேர் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இணைகிறார்கள் என்று அது பொருள் தருகிறது.


எச் ஐ வி மருந்துகளை ஆரம்ப நிலையில் எடுக்க பரிந்துரை

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களது நோய் எதிர்ப்பு தொகுதி, பலவீனமடைந்து அதற்கான சமிக்ஞைகள் தென்படத்தொடங்குவதற்கு முன்னதாக மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது.

புதிதாக பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தில் சிகிச்சையை ஆரம்பித்தால், இந்த நோயின் எதிர்ப்பில் இருந்து தாக்குப் பிடிப்பவர்களின் அளவு 70 வீதத்தால் அதிகரிக்கும் என்று மருத்துவ சஞ்சிகையான லான்சட் காண்பிக்கிறது.

இது சுகாதார பராமரிப்பு துறையின் செலவையும் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.

உலகில் எயிட்ஸ் மிகவும் மோசமாக தொற்றியுள்ள நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, அங்கு தற்போது சிகிச்சை தேவைப்படுபவர்களில் அரைவாசிக்கும் குறைவானவர்களே அதனைப் பெறுகிறார்கள்.

இந்த புதிய பரிந்துரைகளின் மூலம் மேலும் 10 லட்சம் தென்னாபிரிக்கர்கள் சிகிச்சைக்காக காத்திருப்போரின் பட்டியலில் இணைவார்கள் என்று சிகிச்சை கோரி செயற்படும் தன்னார்வக்குழுவைச் சேர்ந்த கத்தரின் தொம்லின்சன்.



--------------------------------------------------------------------------------


செரீனா வில்லியம்ஸுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடை


செரினா வில்லியம்ஸ்

உலக மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸுக்கு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கு பெற மூன்று ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தின் போது பெல்ஜியம் நாட்டின் கிம் கிளைஸ்டருக்கு ஆதரவான ஒரு முடிவை போட்டியின் ஒரு நடுவர் தெரிவித்ததற்காக, அவரை ஆடுகளத்திலேயே ஏசிய குற்றத்துக்காக இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதே போன்று ஒரு பெரிய தவறை மீண்டும் செய்வாராக இருந்தால் இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும்.

மேலும் அவருக்கு தற்போது 53,000 டாலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.



--------------------------------------------------------------------------------


கால்பந்து விளையாட்டில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது:செப் பிளாட்டர்

உலக அளவில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இடம்பெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, ஆடுகளத்தில் கூடுதலாக போட்டி அதிகாரிகள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் நடுவர்களை ஏமாற்றும் வேலைகள் செய்வதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை தேவைப்படுகிறது என்றும் பிஃபாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


செப் பிளாட்டர்

உலகக் கோப்பை போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது, அயர்லாந்து-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பிரான்ஸின் வீரர் தியரி ஆன்ரி பந்தை கைகளால் கையாண்டதன் காரணமாக அந்தப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இது ஆடுகளத்தில் கூடுதல் நடுவர்கள் தேவை என்பதை உணர்த்துகிறது என்று செப் பிளாட்டர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை கேப்டவுணில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அவசரக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.



--------------------------------------------------------------------------------

Read more...

>> Monday, November 30, 2009

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு

ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர் அமைப்பு.

இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேராயர் டூட்டு தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதிக்கு தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எல்டர்ஸ் அமைப்பின் தற்போதையத் தலைவர் பேராயர் டெஸ்மண்ட் டூடூ அவர்கள் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


வெற்றி பெற்றால் போர்குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம் - சரத் பொன்சேகா


சரத் பொன்சேகா

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அவரது மூன்று சகோதரர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி என்பது ஒரு குடும்பத்துக்கு பாத்தியப்பட்டது மட்டுமே என்று அர்த்தமல்ல என்றும், பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவம் உதவியதற்காக மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் போரில் கிடைத்த வெற்றி என்பது எந்த ஒரு சமூகத்துக்கும் எதிராக கிடைத்த வெற்றி கிடையாது என்றும் வர் கூறியுள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக அரசாங்கம் போதுமானதை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் போரின் போது இராணுவத்தால் போர் குற்றங்களை இழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்துவதற்கு தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதி தேர்தலின் போது வடகிழக்கு மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை - பப்ரெல் அமைப்பு


வாககளிப்பு(கோப்புப் படம்)

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலின்போது, விசேட ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பப்ரெல் எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர்கள் வாக்களிப்பின்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் தகுதியை அவர்கள் இழக்க நேரிடக்கூடும் என்றும் அந்தக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருக்கின

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகள் முக்கிய ஆவணங்கள் என்பவற்றை இழந்துள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கச் செல்வதும் சிக்கலான ஒரு விடயமாக இருக்கும் என்றும் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

Read more...

>> Friday, November 27, 2009

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க ஒப்புதல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடன்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி அவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளை, வரக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் இது குறித்த தமது கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவரான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


மும்பை தாக்குதலின் ஓராண்டு


மெழுகுவர்த்தி அஞ்சலி
மும்பை தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவு இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு மும்பை நகரில் பொலிஸாரின் அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது.

170 க்கும் அதிகமான மக்கள் பலியான இந்த தாக்குதல் சுமார் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 9 பேரை அப்போது இந்திய படையினர் தமது பதில் தாக்குதலில் கொன்றிருந்தார்கள். ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டிப்பது தொடர்பில் பாகிஸ்தான் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அமெரிக்காவில் கூறியிருக்கிறார்.

இந்த தாக்குதல் குறித்த ஆய்வுகள் மற்றும் இன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை நேயர்க்ள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


கடலூர் மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால் பரபரப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் பகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால், மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்களை, கடலோர காவற்படையினர் அடையாள அட்டை மற்றும் உரிமம் கேட்டு, அவை இல்லாதவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், கடலூர் மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

கடலோர காவற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாராமனும் மற்ற உயர் அதிகாரிகளும் தாழங்குடா பகுதி சென்று நேரில் விசாரித்தனர்

Read more...

>> Thursday, November 26, 2009

சர்வதேச வானொலி
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.

Enter your search terms Submit search form
Web sarvadesavaanoli.blogspot.com
dxersguide.blogspot.com


தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

வானொலி உலகம் - 25 வது வாரம் Vaanoli Ulagam 25th week


வாங்கோ! வாங்கோ!
DELHI, INDIA,இருந்து வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.ஒரு வரி பின்னூட்டம் இடலாமே!.
Powered by IP2Location.com

சர்வதேச வானொலி மாத இதழ் உங்கள் வீடு தேடி வர

ஆண்டு சந்தா ரூ. 100/-

பண விடை அனுப்ப வேண்டிய முகவரி:

தங்க. ஜெய்சக்திவேல்,

59, அன்னை சத்யா நகர்,

அரும்பாக்கம்,

சென்னை - 600 106.

பேச: +91 98413 66086

மி.அ: sarvadesavanoli@yahoo.com

சர்வதேச வானொலியின் முந்தைய இதழ்கள் Want to read the "Sarvadesa Vaanoli" Clik here

சர்வதேச வானொலியின் முதழ் இதழ் (Sarvadesa Vaanoli - First Issue) - June 1999( ஜூன் 1999)

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - July 1999 - ஜூலை 1999

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - January 2007 - ஜனவரி 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - February 2007 - பிப்ரவரி 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - August 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - September 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - October 2007


Live Traffic Feed
New Delhi, Delhi arrived from in.search.yahoo.com on "சர்வதேச வானொலி"
Colombo arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Toronto, Ontario left "சர்வதேச வானொலி" via vaanoliulagam.goo glepages.com
Tyler, Texas arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Kuala Lumpur, Wilayah Persekutuan left "சர்வதேச வானொலி" via 3.bp.blogspot.com
Madras, Tamil Nadu arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Allen, Texas arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Hamburg arrived from tamil.blogkut.com on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Sutton, Surrey left "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009" via 3.bp.blogspot.com
Saint Albans, Hertford arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Watch in Real-Time
Options>>
∙ Change your Location
∙ Ignore my browser
∙ Live Traffic Map
∙ Popular Pages Today





Recent Visitors








பிரபாகரன்: மாவீரர் தின உரை 2009
சீன வானொலி: 55 புதிய QSL வண்ண அட்டைகள்
ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்
கொரிய மொழி - முற்றிலும் இலவசமாக
பெங்களூர் ஹாம் திருவிழா 2009
வோல்ட் ரேடியோ - மாத இதழ்
Dxers Guide and B09 Booklet available for sale
வானொலியின் எதிர்காலம்
சர்வதேச வானொலி - அக்டோபர் & நவம்பர் 2009
வவுனியாவில் இலங்கை வானொலி

November 2006
January 2007
March 2007
April 2007
May 2007
June 2007
July 2007
August 2007
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
October 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
May 2009
June 2009
July 2009
August 2009
September 2009
October 2009
November 2009
சில பயனுள்ள இணைய தளங்கள்
Google News
Ardic DX Club
Sarvadesavanoli
Dxers Guide
Radio World
வானொலி உலகம்
World wide Tamil Radio List
Radio stations in Tamil Nadu
Broadcasting in India
AIR-Chennai By Jose Jacob
BBC Tamilosai
China Vanoli
CRI Tamil Neyar Kaditham
Veritas Tamilpani
Vathikan Vanoli
Anbin MAdal
Elangai Vanoli
K.S.Rajah
Elangai Vanoli Arivippalarkal
Oli 96.8
Anbudan Oli
Adventist Ulaga Vanoli
Minnal FM (Vanoli 6)
FEBA Vanoli
TWR TAmil
Ulagath Tamil Oasai
World Tamil News
யாழ் றேடியோ
தமிழ்ச்சோலை
தமிழ்க்குடில்
தமிழ் வானொலி
தென்றல்
மெரீனா
Oli 96.8
All about Marconi
National Institute of Amateur Radio
Ham Radio India
Latest Ham News
Gateway to SW Listeners
DX Atlas
Morse Runners
How to listen SW radio?
Understanding SW bands
Introduction to Shortwave
Radio stations in Pondicerry
AIR Station details
The free encyclopedia
E-Kalappai
Wikipedia Tamil
வானொலி உலகம்

வானொலி உலகம் - 25 ஆவது வாரம்



Click to join சர்வதேச வானொலி


















,izaj;js thndhypfs;

NehHNt jkpoUtp gz;giy

NehHNt jkpo; Kurk;

fyrk;;

jkpo; ntg; NwbNah

jkpo;f;Fby;

gp.gp.rp jkpNohir

cyfj; jkpoH nra;jp

jkpo; thndhyp

njd;wy;

nkuPdh

Njdpir v/g;.vk;

cyfj; jkpoH thndhyp

njd;wy; cyf thndhyp

cyfj; jkpoH thndhyp

rPd thndhyp epiyak; - jkpo;

nthpj;jh]; thndhyp

tj;jpf;fhd; thndhyp

thndhyp Neub xypgug;Gfs;

Gypfspd; Fuy;

,yz;ld; I.gp.rp jkpo;

fNdba jkpo; thndhyp (CTR)

INuhg;gpa jkpo; thndhyp

fdba jkpNohir

rp.vk;.MH gz;giy mjpHntz; 101.3 xypgug;G

#hpad; v/g;.vk;.

rHtNjr jkpo; thndhyp fdlh

cyfj; jkpo; thndhyp - fdlh

mT];jpNuypa jkpo; xypgug;Gf; $l;Lj;jhgdk;

jkpo; miy gpuhd;];

rf;jp v/g;.vk; ,yq;if

rpq;fg;G+H xyp

N[Hkd; jkpo; thndhyp

hp.vr;.MH thndhyp kNyrpah

nkhd;wpay; jkpo; xypgug;Gf; $l;Lj;jhgdk;

kNyrpa jkpo; thndhyp - 6

cyfj; jkpNohir

jkpo;j; njhiyf;fhl;rpfs;

hptpI ,iza xspgug;G

jhprdk; njhiyf;fhl;rp

jkpo; tz; njhiyf;fhl;rp

jkpod; njhiyf;fhl;rp

hptp I

jPgk;

rpfuk;

rf;jp njhiyf;fhl;rp















Wednesday, November 25, 2009
பிரபாகரன்: மாவீரர் தின உரை 2009

ஐ.பி.சி. தமிழ் வானொலியின் மாவீரர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்


25, 26, மற்றும் 27 நவம்பர் 2009 ஆகிய தினங்களில்
இந்திய நேரம் மதியம் 03.30 முதல் 06.30 வரை சிற்றலை 16 மீட்டர் 17560 அலை எண்களிலும்
இந்திய நேரம் மாலை 06.30 முதல் 07.30 வரை சிற்றலை 25 மீட்டர் 11510 அலை எண்களிலும் கேட்கலாம்

27 நவம்பர் 2009 மட்டும்
இந்திய நேரம் இரவு 07.30 முதல் 08.30 வரை சிற்றலை 25 மீட்டர் 11510 அலை எண்களிலும் கேட்கலாம்
இந்திய நேரம் இரவு 08.30 முதல் 11.30 வரை சிற்றலை 49 மீட்டர் 6225 அலை எண்களிலும் கேட்கலாம்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் லன்டனில் இருந்து நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது.
இதற்கான சிற்றலை ஒலிபரப்பிகள் ஜெர்மனியில் உள்ள Nauen எனும் இடத்தில் இருந்து செயல்படுகிறது.

வழமையான காலை ஒலிபரப்பினை தினமும் 05.30 - 0630 வரை 49 மீட்டர் 6045 அலை எண்களில் கேட்கலாம்.
(Source: WRN UT Nov 25, DX LISTENING DIGEST)
Labels: ஐ.பி.சி தமிழ் வானொலி, பிரபாகரன், மாவீரர் தின உரை - 2009


posted by வானொலி | 12:49 PM | 0 comments

Sunday, November 22, 2009
சீன வானொலி: 55 புதிய QSL வண்ண அட்டைகள்

சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் - சீனாவில் ஏராளமான சிறு குறு இனங்கள் உள்ளன. அவற்றை மையப்படுத்தி 55 புதிய QSL வண்ண அட்டைகளை தற்பொழுது சீன வானொலி தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. முதல் முறையாக ஒரே நேரத்தில் மிக அதிக வண்ண அட்டைகளை வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும். China Radio International, 16, Shijingshan Road, Beijing, China, Zip Code 100040, Email: crieng@cri.com.cn
Labels: China Radio International, QSL, வண்ண அட்டைகள்


posted by வானொலி | 11:31 PM | 0 comments

Wednesday, November 18, 2009
ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்


ஐ.பி.சி. தமிழ் தனது காலை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 4, 2009 முதல் 6045 கி.ஹெட்சில் ஒலிபரப்புவதை நிறுத்திக்கொண்டது என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாலையில் ஒலிபரப்பு தொடரும் என்று கூரியும், அது இடம்பெறவில்லை. இணையதளமும் செயல்படவில்லை. மேலதிக விபரங்கள் எதிர்பார்கப்படுகிறது
Labels: ஐ.பி.சி. தமிழ்


posted by வானொலி | 3:45 PM | 0 comments

Sunday, November 15, 2009
கொரிய மொழி - முற்றிலும் இலவசமாக

கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ் – தற்பொழுது தனது நேயர்களுக்கு கொரிய மொழியைக் கற்றுக்கொடுக்கிறது. அதற்காக தனது நேயர்களுக்கு 300 பக்கங்கள் கொண்ட புத்தகம் மற்றும் டி.வி.டி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக அனுப்பி வருகிறது. புத்தகம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Korea Broadcasting System, 150-790, International Broadcasting, #18 Yeouido-dong, Yeongdeungpo-gu, Seoul, Korea. Email: english@kbs.co.kr
Labels: Korea Broadcasting System, கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ்


posted by வானொலி | 11:30 PM | 1 comments

Thursday, November 12, 2009
பெங்களூர் ஹாம் திருவிழா 2009

கடந்த நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் பெங்களூரில் நடைபெற்ற Hamfest எனப்படும் ஹாம் திருவிழாவில் கலந்து கொண்டோம். அதில் வெளியிடப்பட்ட
ஹாம் திருவிழா மலர்

ஹாம் திருவிழாவை ஒட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் தபால் உரை

ஹாம் திருவிழா அடையாள அட்டை

ஹாம் திருவிழாவில் உணவு டோக்கன்

Some of the goodies which I bought there.
ஹாம் திருவிழாவில் விற்கப்பட்ட வண்ண அட்டை

ஹாம் திருவிழாவில் விற்கப்பட்ட மோர்ஸ் குறுந்தகடு by VU3SQY

Labels: Hamfest, ஹாம் திருவிழா


posted by வானொலி | 5:47 PM | 0 comments

Sunday, November 08, 2009
வோல்ட் ரேடியோ - மாத இதழ்

அமெரிக்கா: வோல்ட் ரேடியோ – ஹாம் வானொலி உபயோகிப்பாளர் களுக்காக பல்வேறு மாத இதழ்களை வெளியிட்டு வரும் பாப்புலர் கம்யுனிகேசன் தற்பொழுது –வோல்ட் ரேடியோ- எனும் தனது ஆங்கில மாத இதழை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகைச் செய்துள்ளனர். 84 பக்கங்கள் கொண்ட இந்த மாத இதழ் பல்வேறு பயனுள்ளத் தகவல்களை வழங்குகிறது. முகவரி: World Radio Online, Editorial Department, 25 Newbridge Road, Hicksville, NY 11801, Email: worldradioeditor@cq-amateur-radio.com
Labels: cq amateur radio, World Radio Online, வோல்ட் ரேடியோ


posted by வானொலி | 11:28 PM | 0 comments

Friday, November 06, 2009
Dxers Guide and B09 Booklet available for sale



Dear Dxers,

Now you will get the wonderful issues of Dxers Guide and B09 Booklet available for sale. Which contain the new B09 schedules and lot of Dx related information in a pack of Two books. Annual subscription is Rs. 80/- only. For more details contact ardicdxclub (at) yahoo.co.in
Labels: B09 Booklet, Dxers Guide


posted by வானொலி | 12:34 PM | 0 comments

Read more...

மும்பை தாக்குதல்:பாகிஸ்தானில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை


தாக்குதலுக்கு இலக்கான தாஜ்மஹால் ஹோட்டல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் இடம் பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் 7 பேர் மீது பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றில் அந்த நாட்டின் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் அந்தத் தாக்குதலை நடத்த சூத்திரதாரியாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்படும் ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் அடக்கம். அவருடன் சேர்த்து அனைவர் மீதும் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 7 பேரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று தெரிவித்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

மும்பை தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ள தாக்குதலாளியான அஜ்மல் கசாப் உட்பட நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத மற்ற 9 பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு


ஆஜ்மல் கசாப்
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான 7 பேரின் ஜாமீன் மனுவும் நீதிபதி அக்ரம் அவான் அவர்களால் நிராகரிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்தில் கடுமையான பாதுகாப்புகள் நிலவின, உள்ளேயும் வெளியேயும் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 5 தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை மாதம் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அது பிறகு ஒத்திப் போடப்பட்டது.

வழக்கு தொடர்பிலான ஆதாரங்களை சேகரிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் தரப்பில் அப்போது கூறப்பட்டது.

மும்பையில் கடந்த ஆண்டு இடம் பெற்ற தாக்குதல்களுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தைகளை இந்தியா இடைநிறுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை அமைதி பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகாது என்று கடந்த ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



--------------------------------------------------------------------------------


பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சியை இரட்டிப்பாக்க இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி


இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும்


இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்துக்கெதிரான தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கி, பயங்கரவாதத்துக்கெதிரான கூட்டுறவு முயற்சி ஒன்றைத் துவங்கவும் உறுதி பூண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தப்பின்னர், இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த புதிய கூட்டுறவு முயற்சி, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவதை விஸ்தரிப்பது, தகவல் பரிமாற்றம் மற்றும் திறனைக் கட்டியமைப்பது போன்றவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுற்றுப்புறத்தில் நடக்கும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி கவலை தெரிவித்த இந்த இரு தலைவர்களும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பைத் தரும் புகலிடங்கள் மற்றும் பதுங்குமிடங்கள் அழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கூறினர்.

ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு தரும் புகலிடங்களை அழிப்பதிலும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்பட்ட அக்கறை இருப்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பற்றிய, வழமை சாராத பிற துறைகளான, அமைதிக்காக்கும் பணி, மனித நேய மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்பகுதிபாதுகாப்பு மற்றும் கடல்வழிப்பாதைகளில் தொடர்பை பாதுகாத்தல் ஆகியவற்றிலும் பரஸ்பர சாதகத்துக்கான பாதுகாப்புக் கூட்டுறவு தற்போது நடத்தப்படும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளூடாகவே மேற்கொள்ளப்படும் என்று இந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு:ஒரு பார்வை


முன்னாள் பெண் சிறார் போராளிகள் சிலர்
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் விடுவித்ததாக கூறும் சிறார் போராளிகளின் மறு வாழ்வு நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக அவர்களில் ஒரு தொகுதியினரை கொழும்பு ரட்மலானா இந்து கல்லூரியில் சேர்த்துள்ளது.

இதுவரை இந்த முன்னாள் போராளிகள் அம்பேபூசா, வவுனியா போன்ற முகாம்களில் இருந்து வந்தனர். இலங்கை அரசு தன்னுடைய பாதுகாப்பில் 550 சிறார் போராளிகள் இருப்பதாக கூறுகிறது. இதில் 14 முதல் 18 வயதுடைய 273 பேர் ரத்மலான இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

அம்பேபூசா முகாமில் இருந்த மாணவர்களுக்கு சிங்கள மொழிக் கல்வி மட்டுமே கிடைத்து இங்கே மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாடம் நடத்தப்படுகிறது.


முன்னாள் ஆண் சிறார் போராளிகள் சிலர்
ஆனால் அவர்கள் இன்னமும் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பரையில் கல்லாமல் தனி வகுப்பரையில்தான் கல்வி கற்கின்றனர்.

எனினும் இந்த நிலைமை விரைவில் மாறும் என்றும் அவர்கள் விரையில் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கற்க வழி செய்யப்படும் என்கிறார் கல்லூரி முதல்வர் நடராஜா மன்மதராஜா.

இங்கேயிருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்திக்க தடையேதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பிலான பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


முகாம் மக்கள் விடுதலை:ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்பு


இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்கள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 11 ஆயிரம் பேர் வேறு பல முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.



--------------------------------------------------------------------------------


யாழ்ப்பாணத்துக்கு இந்தியத் தூதர் விஜயம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார்.

இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter