>> Tuesday, August 31, 2010


அரசியல் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாகப் போட்டியிட இச்சட்டத் திருத்தம் வழிகோலும்

இலங்கையில் ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது ஆட்சிக்காலத்துக்கும் தொடருவதற்கு வழி செய்யும் அரசியலமைப்புத் திருத்ததுக்கான பிரேரணைக்கு இலங்கை அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

அந்தப் பிரேரணை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது நீங்கிவிட்ட நிலையில், ஒரு வாரகாலத்தில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலங்களுக்கான கட்டுப்பாடு நீங்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், 2016 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் போட்டியிட முடியும்.

17ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter