>> Monday, November 30, 2009

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு

ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர் அமைப்பு.

இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேராயர் டூட்டு தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதிக்கு தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எல்டர்ஸ் அமைப்பின் தற்போதையத் தலைவர் பேராயர் டெஸ்மண்ட் டூடூ அவர்கள் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


வெற்றி பெற்றால் போர்குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம் - சரத் பொன்சேகா


சரத் பொன்சேகா

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அவரது மூன்று சகோதரர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி என்பது ஒரு குடும்பத்துக்கு பாத்தியப்பட்டது மட்டுமே என்று அர்த்தமல்ல என்றும், பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவம் உதவியதற்காக மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் போரில் கிடைத்த வெற்றி என்பது எந்த ஒரு சமூகத்துக்கும் எதிராக கிடைத்த வெற்றி கிடையாது என்றும் வர் கூறியுள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக அரசாங்கம் போதுமானதை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் போரின் போது இராணுவத்தால் போர் குற்றங்களை இழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்துவதற்கு தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதி தேர்தலின் போது வடகிழக்கு மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை - பப்ரெல் அமைப்பு


வாககளிப்பு(கோப்புப் படம்)

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலின்போது, விசேட ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பப்ரெல் எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர்கள் வாக்களிப்பின்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் தகுதியை அவர்கள் இழக்க நேரிடக்கூடும் என்றும் அந்தக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருக்கின

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகள் முக்கிய ஆவணங்கள் என்பவற்றை இழந்துள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கச் செல்வதும் சிக்கலான ஒரு விடயமாக இருக்கும் என்றும் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

Read more...

>> Friday, November 27, 2009

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க ஒப்புதல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடன்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி அவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளை, வரக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் இது குறித்த தமது கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவரான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


மும்பை தாக்குதலின் ஓராண்டு


மெழுகுவர்த்தி அஞ்சலி
மும்பை தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவு இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு மும்பை நகரில் பொலிஸாரின் அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது.

170 க்கும் அதிகமான மக்கள் பலியான இந்த தாக்குதல் சுமார் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 9 பேரை அப்போது இந்திய படையினர் தமது பதில் தாக்குதலில் கொன்றிருந்தார்கள். ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டிப்பது தொடர்பில் பாகிஸ்தான் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அமெரிக்காவில் கூறியிருக்கிறார்.

இந்த தாக்குதல் குறித்த ஆய்வுகள் மற்றும் இன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை நேயர்க்ள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


கடலூர் மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால் பரபரப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் பகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால், மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்களை, கடலோர காவற்படையினர் அடையாள அட்டை மற்றும் உரிமம் கேட்டு, அவை இல்லாதவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், கடலூர் மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

கடலோர காவற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாராமனும் மற்ற உயர் அதிகாரிகளும் தாழங்குடா பகுதி சென்று நேரில் விசாரித்தனர்

Read more...

>> Thursday, November 26, 2009

சர்வதேச வானொலி
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.

Enter your search terms Submit search form
Web sarvadesavaanoli.blogspot.com
dxersguide.blogspot.com


தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

வானொலி உலகம் - 25 வது வாரம் Vaanoli Ulagam 25th week


வாங்கோ! வாங்கோ!
DELHI, INDIA,இருந்து வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.ஒரு வரி பின்னூட்டம் இடலாமே!.
Powered by IP2Location.com

சர்வதேச வானொலி மாத இதழ் உங்கள் வீடு தேடி வர

ஆண்டு சந்தா ரூ. 100/-

பண விடை அனுப்ப வேண்டிய முகவரி:

தங்க. ஜெய்சக்திவேல்,

59, அன்னை சத்யா நகர்,

அரும்பாக்கம்,

சென்னை - 600 106.

பேச: +91 98413 66086

மி.அ: sarvadesavanoli@yahoo.com

சர்வதேச வானொலியின் முந்தைய இதழ்கள் Want to read the "Sarvadesa Vaanoli" Clik here

சர்வதேச வானொலியின் முதழ் இதழ் (Sarvadesa Vaanoli - First Issue) - June 1999( ஜூன் 1999)

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - July 1999 - ஜூலை 1999

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - January 2007 - ஜனவரி 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - February 2007 - பிப்ரவரி 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - August 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - September 2007

சர்வதேச வானொலி (Sarvadesa Vaanoli) - October 2007


Live Traffic Feed
New Delhi, Delhi arrived from in.search.yahoo.com on "சர்வதேச வானொலி"
Colombo arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Toronto, Ontario left "சர்வதேச வானொலி" via vaanoliulagam.goo glepages.com
Tyler, Texas arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Kuala Lumpur, Wilayah Persekutuan left "சர்வதேச வானொலி" via 3.bp.blogspot.com
Madras, Tamil Nadu arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Allen, Texas arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Hamburg arrived from tamil.blogkut.com on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Sutton, Surrey left "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009" via 3.bp.blogspot.com
Saint Albans, Hertford arrived on "சர்வதேச வானொலி: பிரபா஠?ரன்: மாவீரர் தின உரை 2009"
Watch in Real-Time
Options>>
∙ Change your Location
∙ Ignore my browser
∙ Live Traffic Map
∙ Popular Pages Today





Recent Visitors








பிரபாகரன்: மாவீரர் தின உரை 2009
சீன வானொலி: 55 புதிய QSL வண்ண அட்டைகள்
ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்
கொரிய மொழி - முற்றிலும் இலவசமாக
பெங்களூர் ஹாம் திருவிழா 2009
வோல்ட் ரேடியோ - மாத இதழ்
Dxers Guide and B09 Booklet available for sale
வானொலியின் எதிர்காலம்
சர்வதேச வானொலி - அக்டோபர் & நவம்பர் 2009
வவுனியாவில் இலங்கை வானொலி

November 2006
January 2007
March 2007
April 2007
May 2007
June 2007
July 2007
August 2007
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
October 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
May 2009
June 2009
July 2009
August 2009
September 2009
October 2009
November 2009
சில பயனுள்ள இணைய தளங்கள்
Google News
Ardic DX Club
Sarvadesavanoli
Dxers Guide
Radio World
வானொலி உலகம்
World wide Tamil Radio List
Radio stations in Tamil Nadu
Broadcasting in India
AIR-Chennai By Jose Jacob
BBC Tamilosai
China Vanoli
CRI Tamil Neyar Kaditham
Veritas Tamilpani
Vathikan Vanoli
Anbin MAdal
Elangai Vanoli
K.S.Rajah
Elangai Vanoli Arivippalarkal
Oli 96.8
Anbudan Oli
Adventist Ulaga Vanoli
Minnal FM (Vanoli 6)
FEBA Vanoli
TWR TAmil
Ulagath Tamil Oasai
World Tamil News
யாழ் றேடியோ
தமிழ்ச்சோலை
தமிழ்க்குடில்
தமிழ் வானொலி
தென்றல்
மெரீனா
Oli 96.8
All about Marconi
National Institute of Amateur Radio
Ham Radio India
Latest Ham News
Gateway to SW Listeners
DX Atlas
Morse Runners
How to listen SW radio?
Understanding SW bands
Introduction to Shortwave
Radio stations in Pondicerry
AIR Station details
The free encyclopedia
E-Kalappai
Wikipedia Tamil
வானொலி உலகம்

வானொலி உலகம் - 25 ஆவது வாரம்



Click to join சர்வதேச வானொலி


















,izaj;js thndhypfs;

NehHNt jkpoUtp gz;giy

NehHNt jkpo; Kurk;

fyrk;;

jkpo; ntg; NwbNah

jkpo;f;Fby;

gp.gp.rp jkpNohir

cyfj; jkpoH nra;jp

jkpo; thndhyp

njd;wy;

nkuPdh

Njdpir v/g;.vk;

cyfj; jkpoH thndhyp

njd;wy; cyf thndhyp

cyfj; jkpoH thndhyp

rPd thndhyp epiyak; - jkpo;

nthpj;jh]; thndhyp

tj;jpf;fhd; thndhyp

thndhyp Neub xypgug;Gfs;

Gypfspd; Fuy;

,yz;ld; I.gp.rp jkpo;

fNdba jkpo; thndhyp (CTR)

INuhg;gpa jkpo; thndhyp

fdba jkpNohir

rp.vk;.MH gz;giy mjpHntz; 101.3 xypgug;G

#hpad; v/g;.vk;.

rHtNjr jkpo; thndhyp fdlh

cyfj; jkpo; thndhyp - fdlh

mT];jpNuypa jkpo; xypgug;Gf; $l;Lj;jhgdk;

jkpo; miy gpuhd;];

rf;jp v/g;.vk; ,yq;if

rpq;fg;G+H xyp

N[Hkd; jkpo; thndhyp

hp.vr;.MH thndhyp kNyrpah

nkhd;wpay; jkpo; xypgug;Gf; $l;Lj;jhgdk;

kNyrpa jkpo; thndhyp - 6

cyfj; jkpNohir

jkpo;j; njhiyf;fhl;rpfs;

hptpI ,iza xspgug;G

jhprdk; njhiyf;fhl;rp

jkpo; tz; njhiyf;fhl;rp

jkpod; njhiyf;fhl;rp

hptp I

jPgk;

rpfuk;

rf;jp njhiyf;fhl;rp















Wednesday, November 25, 2009
பிரபாகரன்: மாவீரர் தின உரை 2009

ஐ.பி.சி. தமிழ் வானொலியின் மாவீரர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்


25, 26, மற்றும் 27 நவம்பர் 2009 ஆகிய தினங்களில்
இந்திய நேரம் மதியம் 03.30 முதல் 06.30 வரை சிற்றலை 16 மீட்டர் 17560 அலை எண்களிலும்
இந்திய நேரம் மாலை 06.30 முதல் 07.30 வரை சிற்றலை 25 மீட்டர் 11510 அலை எண்களிலும் கேட்கலாம்

27 நவம்பர் 2009 மட்டும்
இந்திய நேரம் இரவு 07.30 முதல் 08.30 வரை சிற்றலை 25 மீட்டர் 11510 அலை எண்களிலும் கேட்கலாம்
இந்திய நேரம் இரவு 08.30 முதல் 11.30 வரை சிற்றலை 49 மீட்டர் 6225 அலை எண்களிலும் கேட்கலாம்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் லன்டனில் இருந்து நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது.
இதற்கான சிற்றலை ஒலிபரப்பிகள் ஜெர்மனியில் உள்ள Nauen எனும் இடத்தில் இருந்து செயல்படுகிறது.

வழமையான காலை ஒலிபரப்பினை தினமும் 05.30 - 0630 வரை 49 மீட்டர் 6045 அலை எண்களில் கேட்கலாம்.
(Source: WRN UT Nov 25, DX LISTENING DIGEST)
Labels: ஐ.பி.சி தமிழ் வானொலி, பிரபாகரன், மாவீரர் தின உரை - 2009


posted by வானொலி | 12:49 PM | 0 comments

Sunday, November 22, 2009
சீன வானொலி: 55 புதிய QSL வண்ண அட்டைகள்

சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் - சீனாவில் ஏராளமான சிறு குறு இனங்கள் உள்ளன. அவற்றை மையப்படுத்தி 55 புதிய QSL வண்ண அட்டைகளை தற்பொழுது சீன வானொலி தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. முதல் முறையாக ஒரே நேரத்தில் மிக அதிக வண்ண அட்டைகளை வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும். China Radio International, 16, Shijingshan Road, Beijing, China, Zip Code 100040, Email: crieng@cri.com.cn
Labels: China Radio International, QSL, வண்ண அட்டைகள்


posted by வானொலி | 11:31 PM | 0 comments

Wednesday, November 18, 2009
ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்


ஐ.பி.சி. தமிழ் தனது காலை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 4, 2009 முதல் 6045 கி.ஹெட்சில் ஒலிபரப்புவதை நிறுத்திக்கொண்டது என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாலையில் ஒலிபரப்பு தொடரும் என்று கூரியும், அது இடம்பெறவில்லை. இணையதளமும் செயல்படவில்லை. மேலதிக விபரங்கள் எதிர்பார்கப்படுகிறது
Labels: ஐ.பி.சி. தமிழ்


posted by வானொலி | 3:45 PM | 0 comments

Sunday, November 15, 2009
கொரிய மொழி - முற்றிலும் இலவசமாக

கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ் – தற்பொழுது தனது நேயர்களுக்கு கொரிய மொழியைக் கற்றுக்கொடுக்கிறது. அதற்காக தனது நேயர்களுக்கு 300 பக்கங்கள் கொண்ட புத்தகம் மற்றும் டி.வி.டி ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக அனுப்பி வருகிறது. புத்தகம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: Korea Broadcasting System, 150-790, International Broadcasting, #18 Yeouido-dong, Yeongdeungpo-gu, Seoul, Korea. Email: english@kbs.co.kr
Labels: Korea Broadcasting System, கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ்


posted by வானொலி | 11:30 PM | 1 comments

Thursday, November 12, 2009
பெங்களூர் ஹாம் திருவிழா 2009

கடந்த நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் பெங்களூரில் நடைபெற்ற Hamfest எனப்படும் ஹாம் திருவிழாவில் கலந்து கொண்டோம். அதில் வெளியிடப்பட்ட
ஹாம் திருவிழா மலர்

ஹாம் திருவிழாவை ஒட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் தபால் உரை

ஹாம் திருவிழா அடையாள அட்டை

ஹாம் திருவிழாவில் உணவு டோக்கன்

Some of the goodies which I bought there.
ஹாம் திருவிழாவில் விற்கப்பட்ட வண்ண அட்டை

ஹாம் திருவிழாவில் விற்கப்பட்ட மோர்ஸ் குறுந்தகடு by VU3SQY

Labels: Hamfest, ஹாம் திருவிழா


posted by வானொலி | 5:47 PM | 0 comments

Sunday, November 08, 2009
வோல்ட் ரேடியோ - மாத இதழ்

அமெரிக்கா: வோல்ட் ரேடியோ – ஹாம் வானொலி உபயோகிப்பாளர் களுக்காக பல்வேறு மாத இதழ்களை வெளியிட்டு வரும் பாப்புலர் கம்யுனிகேசன் தற்பொழுது –வோல்ட் ரேடியோ- எனும் தனது ஆங்கில மாத இதழை முற்றிலும் இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகைச் செய்துள்ளனர். 84 பக்கங்கள் கொண்ட இந்த மாத இதழ் பல்வேறு பயனுள்ளத் தகவல்களை வழங்குகிறது. முகவரி: World Radio Online, Editorial Department, 25 Newbridge Road, Hicksville, NY 11801, Email: worldradioeditor@cq-amateur-radio.com
Labels: cq amateur radio, World Radio Online, வோல்ட் ரேடியோ


posted by வானொலி | 11:28 PM | 0 comments

Friday, November 06, 2009
Dxers Guide and B09 Booklet available for sale



Dear Dxers,

Now you will get the wonderful issues of Dxers Guide and B09 Booklet available for sale. Which contain the new B09 schedules and lot of Dx related information in a pack of Two books. Annual subscription is Rs. 80/- only. For more details contact ardicdxclub (at) yahoo.co.in
Labels: B09 Booklet, Dxers Guide


posted by வானொலி | 12:34 PM | 0 comments

Read more...

மும்பை தாக்குதல்:பாகிஸ்தானில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை


தாக்குதலுக்கு இலக்கான தாஜ்மஹால் ஹோட்டல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் இடம் பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் 7 பேர் மீது பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றில் அந்த நாட்டின் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் அந்தத் தாக்குதலை நடத்த சூத்திரதாரியாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்படும் ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் அடக்கம். அவருடன் சேர்த்து அனைவர் மீதும் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 7 பேரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று தெரிவித்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

மும்பை தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ள தாக்குதலாளியான அஜ்மல் கசாப் உட்பட நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத மற்ற 9 பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு


ஆஜ்மல் கசாப்
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான 7 பேரின் ஜாமீன் மனுவும் நீதிபதி அக்ரம் அவான் அவர்களால் நிராகரிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்தில் கடுமையான பாதுகாப்புகள் நிலவின, உள்ளேயும் வெளியேயும் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 5 தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை மாதம் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அது பிறகு ஒத்திப் போடப்பட்டது.

வழக்கு தொடர்பிலான ஆதாரங்களை சேகரிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் தரப்பில் அப்போது கூறப்பட்டது.

மும்பையில் கடந்த ஆண்டு இடம் பெற்ற தாக்குதல்களுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தைகளை இந்தியா இடைநிறுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை அமைதி பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகாது என்று கடந்த ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



--------------------------------------------------------------------------------


பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சியை இரட்டிப்பாக்க இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி


இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும்


இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்துக்கெதிரான தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கி, பயங்கரவாதத்துக்கெதிரான கூட்டுறவு முயற்சி ஒன்றைத் துவங்கவும் உறுதி பூண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தப்பின்னர், இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த புதிய கூட்டுறவு முயற்சி, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவதை விஸ்தரிப்பது, தகவல் பரிமாற்றம் மற்றும் திறனைக் கட்டியமைப்பது போன்றவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுற்றுப்புறத்தில் நடக்கும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி கவலை தெரிவித்த இந்த இரு தலைவர்களும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பைத் தரும் புகலிடங்கள் மற்றும் பதுங்குமிடங்கள் அழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கூறினர்.

ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு தரும் புகலிடங்களை அழிப்பதிலும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்பட்ட அக்கறை இருப்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பற்றிய, வழமை சாராத பிற துறைகளான, அமைதிக்காக்கும் பணி, மனித நேய மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்பகுதிபாதுகாப்பு மற்றும் கடல்வழிப்பாதைகளில் தொடர்பை பாதுகாத்தல் ஆகியவற்றிலும் பரஸ்பர சாதகத்துக்கான பாதுகாப்புக் கூட்டுறவு தற்போது நடத்தப்படும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளூடாகவே மேற்கொள்ளப்படும் என்று இந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு:ஒரு பார்வை


முன்னாள் பெண் சிறார் போராளிகள் சிலர்
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் விடுவித்ததாக கூறும் சிறார் போராளிகளின் மறு வாழ்வு நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக அவர்களில் ஒரு தொகுதியினரை கொழும்பு ரட்மலானா இந்து கல்லூரியில் சேர்த்துள்ளது.

இதுவரை இந்த முன்னாள் போராளிகள் அம்பேபூசா, வவுனியா போன்ற முகாம்களில் இருந்து வந்தனர். இலங்கை அரசு தன்னுடைய பாதுகாப்பில் 550 சிறார் போராளிகள் இருப்பதாக கூறுகிறது. இதில் 14 முதல் 18 வயதுடைய 273 பேர் ரத்மலான இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

அம்பேபூசா முகாமில் இருந்த மாணவர்களுக்கு சிங்கள மொழிக் கல்வி மட்டுமே கிடைத்து இங்கே மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாடம் நடத்தப்படுகிறது.


முன்னாள் ஆண் சிறார் போராளிகள் சிலர்
ஆனால் அவர்கள் இன்னமும் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பரையில் கல்லாமல் தனி வகுப்பரையில்தான் கல்வி கற்கின்றனர்.

எனினும் இந்த நிலைமை விரைவில் மாறும் என்றும் அவர்கள் விரையில் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கற்க வழி செய்யப்படும் என்கிறார் கல்லூரி முதல்வர் நடராஜா மன்மதராஜா.

இங்கேயிருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்திக்க தடையேதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பிலான பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


முகாம் மக்கள் விடுதலை:ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்பு


இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்கள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 11 ஆயிரம் பேர் வேறு பல முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.



--------------------------------------------------------------------------------


யாழ்ப்பாணத்துக்கு இந்தியத் தூதர் விஜயம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார்.

இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.

Read more...

>> Wednesday, November 25, 2009

பொன்சேகாவை வேட்பாளராக முன்னிறுத்துகிறது ஜெ வி பி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் முன்மொழிந்துள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. இதை பிற கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.



--------------------------------------------------------------------------------


பாதுகாப்பு கோரி பொன்சேகா மனு

ஒய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

தனது பாதுகாப்புக்காக 600 இராணுவ வீரர்களும் 10 வாகனங்களும் 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறு முன்னாள் இராணுவத்தளபதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாபதிக்கு 2 ஆயிரம் இராணுவ வீரர்களும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 இராணுவ வீரர்களும், தற்போதைய இராணுவ தளபதிக்கு 600 இராணுவ வீரர்களும். முன்னாள் கடற்படைதளபதி வசந்த கரன்னாகொடவுக்கு 120 இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மேலும் தங்குவதற்கு இடமளிக்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறும் கோரியுள்ளார்

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பைவிட குறைந்த பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 62 இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களில் இருபது பேர் சுழற்சி முறையில் சேவையிலிருந்து மாறும் பட்சத்தில் தமது பாதுகாப்புக்ககாக 25 இராணுவ வீரர்களே இருப்பது போதுமானதாக இல்லையென்றும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக 600 இற்கும் அதிகமான இராணுவ வீரர்களை கொண்டு போதூன பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு கட்டளையிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



--------------------------------------------------------------------------------


பாபர் மசூதி இடிப்பு விவகாரம் - விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல்


பாபர் மசூதி இடிக்கப்படும் போது எடுத்த படம்

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் , அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் அளித்த அறிக்கை, இன்று, செவ்வாய்க்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தில் அரசால் வைக்கப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் துணைத்தலைவர் வேதாந்தம், இவ்வளவு காலம் கடந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, நீதியை மறுக்கும் செயல் என்றார். அதே போல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே ஊடகங்களில் இந்த அறிக்கை கசியவிடப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வாஜ்பாய் போன்ற இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத தலைவர்களை இந்த அறிக்கை குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என்றார் வேதாந்தம்.

கோவில் கட்டுவதுதான் சங்க பரிவார் அமைப்புகளின் நோக்கமே தவிர மசூதியை இடிப்பது அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆயினும், அயோத்தியில் ராமர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் கட்டும் திட்டங்களை தங்களது அமைப்புகள் கைவிடாது என்றும், ஆனால் இந்த லட்சியங்களை எட்டுவதில் வன்முறைக்கு இடம் இருக்காது என்றும் வேதாந்தம் தெரிவித்தார்.

"அறிக்கை ஏமாற்றமளிக்கிறது"-- ஜவாகிருல்லா

அரசின் இந்த நடவடிக்கை எடுத்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றார் தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜவாகிருல்லா.

சங்க பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 68 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் கமிஷன் தெரிவித்திருப்பது, இந்த விஷயம் முன்பே தெரிந்ததுதான் என்றாலும், வரவேற்கத்தகுந்தது என்றும் ஜவாகிருல்லா தெரிவித்தார்.

ஆனாலும், இந்த விசாரணைக்கமிஷன் அறிக்கை மீது அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களால் சரியாகத் தீர்வு காணமுடியாத பிரச்சினயாகிவிட்ட இதற்கு, ஹிந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜவாகிருல்லா, இந்த விஷயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென்றால், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த நில உரிமை வழக்கு விரைவில் முடிக்கப்பட்ட அதில் கிடைக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.

Read more...

>> Tuesday, November 24, 2009

இலங்கையில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களை இன்னும் சில மாதங்களுக்குள் முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுசெய்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தற்பொதைய ஆறுவருட பதவிக்காலம் 2012 நவம்பரில்தான் நிறைவுபெறுகிறது என்றாலும், மக்களிடம் இருந்து புதியதோர் ஆணையைப் பெற ராஜபக்ஷ விரும்புவதாக இலங்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெற்ற இராணுவ வெற்றியின் பலனைப் பெறுவதற்காக ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்புகிறார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் தேர்தல் நடக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு தலைமையேற்று வெற்றித் தேடித்தந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனரல் சரத் ஃபொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடலாம் என்று ஊகங்ககள் நிலவும் நிலையில், தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.



--------------------------------------------------------------------------------


அயோத்தி மசூதி இடிப்பு: விசாரணை ஆவணம் கசிந்தது தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் அமளி


எல்.கே. அத்வானி
அயோத்தியில் 17 வருடங்களுக்கு முன்னர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களை சம்பந்தப்படுத்திக் குற்றஞ்சாட்டும் ஆவணம் ஒன்று கசிந்தது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்செயல்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.

அயோத்தியின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த மூல அறிக்கை ஒன்று ஜூன் மாதத்தில் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்டது.

ஆனால் அதன் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்திய ஊடகங்களுக்கு கசிந்த அறிக்கையின் படி பாரதியஜனதாக் கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரது பெயரை இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.



--------------------------------------------------------------------------------


ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை மற்றும் ஆப்கானிய அகதிகள் இடையிலான மோதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்


கிறிஸ்துமஸ் தீவைக் காட்டும் வரைபடம்
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு குடிவரவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட ஓர் அடிதடிச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்கள் மற்றும் ஆப்கானியர்களாக கிட்டத்தட்ட 150 பேர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

மரக்கிளைகளாலும், தும்புத்தடிகளாலும், பிலியர்ட்ஸ் ஆடும் குச்சிகளாலும் போட்டிக் குழுக்கள் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டன.

37 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவர்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட மூவர் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்துக்கு மேலதிக சிகிச்சைக்காக வான் மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டனர்.

நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரை மணிநேரம் பிடித்துள்ளது.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


புதிய மீன்பிடி விதிகளுக்கு எதிராக தமிழகத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.



இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டிருக்கும் மீன்பிடி விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை மசோதா, மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது குறித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், தமிழக முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த மசோதா மீனவர் நலனுக்கு எதிராக அமையக்கூடும் என்று முதல்வர் கருணாநிதி அச்சம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களைக் கலந்தாலோசித்து உரிய மாற்றங்களைச் செய்த பின்னரே இந்த மசோதா முன்னெடுக்கப்பட வேண்டும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதனை அ.தி.மு.க. எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நிலையை இப்புதிய சட்டம் மேலும் மோசமாக்கும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Read more...

>> Monday, November 23, 2009

Read more...

>> Saturday, November 21, 2009

இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களிடையே ஸ்விட்சர்லாந்தில் கூட்டம்

இலங்கையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி இணக்கப்பாடு காண்பதற்காக இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கூடியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்ந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர் தகவல் நடுவம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சிறுபான்மையினரைப் பாதிக்கும் பல்வேறு விடயங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டைக் காண்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தமிழோசையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


இராணுவ வெற்றியைக் குறிக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு தொடர்பில் புதிய சர்ச்சை


புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கு முன் பெறப்பட்ட இராணுவ வெற்றியை குறிக்கும் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகான பலவண்ணங்களில் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதன் ஒரு பக்கத்தில், பாதுகாப்புப் படையினர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் அதிபர் ராஜபக்ஷ அவர்கள், வெற்றியை குறிக்கும் விதமாக கையை உயர்த்திக்காட்டும் படம் அச்சிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட ரூபா நோட்டு ஒன்று வெளியிடப்பட்டமை வெட்கம் கெட்ட செயல் என்று முக்கிய எதிர்கட்சி அரசியல்வாதியான மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

உயிருடன் இருக்கும் அரசியல் தலைவர் ஒருவரின் படம் ரூபாய் நோட்டில் அச்சிடப்படுவது அசாதாரணமான ஒரு நிகழ்வு என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

ஆனால் சமரவீராவின் இந்த குற்றச்சாட்டுக்கள் பொறாமையின் விளைவாக சொல்லப்படுபவை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் காப்ரால் கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


நேபாள மிருக பலி திருவிழா: முன்னாள் கனவுக் கன்னி கண்டனம்


இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன
நேபாளத்தில் விரைவில் நடக்கவுள்ள இந்து திருவிழா ஒன்றின்போது பல்லாயிரக்கணக்கான விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை நேபாள அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸின் முன்னாள் சினிமா நட்சத்திரமும் மிருக வதைத் தடுப்பு ஆர்வலருமான பிரிஜீத் பார்தோ வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற காதி மாய் துர்க்கை அம்மன் திருவிழாவிற்காக நேபாளத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் சில இடங்களிலிருந்தும் கூடுகின்ற பக்தர்கள், 5 லட்சம் வரையிலான கால்நடைகளையும் விலங்குகளையும் பலி கொடுக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இந்த மிருக பலி சடங்கை எதிர்த்து மிருக உரிமைகள் மற்றும் புத்த மத குழுக்கள் ஏற்கனவே அழுத்தம் தந்துவரும் நிலையில், இந்த திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். துர்க்கை அம்மனின் ஒரு வடிவமான காதி மாய் என்ற பெண் தெய்வத்தை திருப்திப்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்படுகின்றன.

மிருகங்களை பலி கொடுத்தல் என்பது, தீங்குகள் நீங்கி வளம் பெருக உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் இது காட்டுமிராண்டித்தமான, காலத்துக்கு ஒவ்வாத செயல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.



--------------------------------------------------------------------------------


30 ஆயிரம் ரன் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் டெண்டுல்கர்


சச்சின் டெண்டுல்கர்
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த டெண்டுல்கர் உலகிலேயே முப்பதினாயிரம் ரன்களை பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அகமதாபாத் டெஸ்ட் ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் 426 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி அதனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 412 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி அதனது முதலவாது இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 760 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Friday, November 20, 2009

ஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி? 'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர் தமது திருமந்திரத்தில். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்' என்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றும் சொல்கிறது நம் பழமொழி. நமது உடலை நாம் பாதுகாக்காமல் அடுத்தவரா பாதுகாக்க முடியும்? உடலைப் பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன? நன்கு மூக்குப் பிடிக்க விதவிதமாகச் சாப்பிட்டுவிட்டு,
நாற்காலியில் அமர்ந்துகொண்டு துரும்பைக்கூட அசைக்காமல், நான் என் உடம்பை நன்கு பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன் என்றா சொல்லவேண்டும்? இல்லை.

பயன்படுத்தாத இயந்திரமே துருப்பிடித்து வீணாகிவிடுகையில் மனித உடம்பு உழைப்பு இல்லை என்றால் என்ன ஆகும்? உடம்பு நன்றாக இருக்கவேண்டும், நோய்நொடியின்றி வாழவேண்டுமென்றால் நாம் உடலுக்கு சரியான சத்தான உணவும் கொடுக்கவேண்டும், சரியாக உடற்பயிற்சியும் செய்யவேண்டும். இது எல்லாருக்கும் தெரிந்த தகவல்தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா? உடற்பயிற்சி
நமக்கு நல்லது என்று தெரியும்தான். உடற்பயிற்சி நமக்கு எந்தெந்த விதத்தில், எவ்வளவு தூரம் நன்மை புரிகிறது என்று கொஞ்சம் விரிவாகவே தெரிந்துகொள்வோமே!!

உடனடி விளைவு - ஆழ்ந்த தூக்கம்: இன்றைய உலகில் தூக்கமின்மை எனப்படும் நோய் அதிகரித்து வருகிறது. இப்பொழுதெல்லாம் நமது உடலுழைப்பு குறைந்து விட்டது. நம் முன்னோர்கள் பெரும்பாலும் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எங்கே செல்லவேண்டுமென்றாலும் நடந்துதான் சென்றனர். பெண்களும் அம்மி அல்லது ஆட்டுரலில் அரைத்தல், நெல் குற்றுதல், தண்ணீர் எடுத்து வருதல், வீடு முழுவதும்
பெருக்கித் துடைத்தல் என்ற பெரும்பாலான வேலைகளைச் செய்து வந்தனர். ஆனால் இன்றோ எல்லாம் இயந்திர மயம். பக்கத்துத் தெருவிற்குக் கூட நாம் வண்டியில் செல்கிறோம். அதே சமயம் நமது மூளை அதிக அயர்ச்சியடையும் அளவு வேலை செய்கிறோம். குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள், பொருண்மியம் தொடர்பான நிறுவனங்கள் இவற்றில் பணி புரிபவர்கள் நாற்காலியை விட்டு எழக்கூட முடியாமல் மிகுந்த
மும்மரமாக உள்ளனர். ஆனால் இவர்கள் மூளைக்குக் கொடுக்கும் வேலையோ மிக மிக அதிகம். எனவே இரவில் இவர்களால் உறங்க முடிவதில்லை. இவர்கள் குறைந்த பட்சம் 20 முதல் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்கென ஒதுக்குவார்களே ஆனால், இரவில் உடனடியான, ஆழ்ந்த உறக்கம் பெறுவது உறுதி.

ஊற்றெடுக்கும் உற்சாகம்: உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்பவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாவதில்லை எனவும், அதிக உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்கின்றனர் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமல்ல, இவர்கள் பதட்டமடைவதில்லை, எத்தகைய சூழலையும் அமைதியாகவும் திறம்படவும் கையாள்கின்றனர் என்பதும் இந்த ஆய்வுகளின் முடிவு. மேலும், தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள்
உடலிலும் மனதிலும் தோன்றும் நல்லவிதமான மாற்றங்கள் அவர்களுடைய சுய மதிப்பீடு உயரவும் வழிவகை செய்கிறது.

வலுவான எலும்புகளும், வலியில்லா வாழ்வும்: உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்பொழுது, அனைத்து எலும்புகளும் பலம் பெறுகின்றன. இதனால், மூட்டுவலி, முதுகுவலி முதலியவை நம்மை அண்டுவது கூட இல்லை. தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை, குறிப்பாக நடைப்பயிற்சி மற்றும் மெதுவான ஓட்டம் முதலியவற்றைச் செய்பவர்களது எலும்புகள் வழக்கத்தைவிட அதிக அளவு அடர்த்தியாவதாகவும்,
இதனால், வயதான காலத்தில் வரும் எலும்புத் தேய்வு என்னும் பிரச்னை இவர்களுக்கு ஏற்படுவதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக மாதவிடாயின் காரணமாக அவதிப்படும் பெண்கள், தொடர்ந்து உடற்பயிற்சிகளைச் செய்வதால், அந்தச் சமயத்தில் ஏற்படும் இடுப்பு மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

எதையும் தாங்கும் இதயம் : இதயநோய் பொதுவாக கொழுப்பு அதிகம் உடலில் உடையவர்களையே தாக்குகிறது. ஆனால், நம்மில் பலர் அறியாதது ஒன்று உண்டு. அது கொழுப்பில் இரண்டு வகையுண்டு என்பது. நல்ல கொழுப்பு என்பது HDL எனவும், கெட்டகொழுப்பு LDL எனவும் அழைக்கப் படுகிறது. மிதமான உடற்பயிற்சி செய்பவர்கள் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது எனவும் கெட்ட கொழுப்பு குறைகிறது எனவும் தெரிய
வந்துள்ளது. இந்த HDLஇன் பணி இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதாகும். மேலும் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்பவர்களது உடலில் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தக் கூடிய LDL எனும் கெட்ட கொழுப்பு படிவது தடுக்கப் படுகிறது.

நீளும் வாழ்நாள்: உங்கள் வாழ்நாளை (நோயற்ற வாழ்நாளை) நீடித்துக்கொள்ள நீங்கள் தினமும் உடலை வருத்தி ஏராளமான பயிற்சிகள் செய்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. மாதத்தில் பத்து நாட்கள் அரைமணி நேரம் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தவர்கள், உடற்பயிற்சி ஏதும் செய்யாதவர்களை விட அதிக நாள் வாழ்வதாக/ வாழ்ந்ததாக கடந்த பதினேழு வருடங்களாக மேற்கொள்ளப் பட்டு வந்த ஒரு
புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்தப் பலன் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

உடற்பயிற்சி செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப் படுகிறது. வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியானது 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பையில் தோன்றும் புற்றுநோய் முதலியவை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதம்
வரை குறைவதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வந்துள்ளது. அவ்வளவுதானா? வாரம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பயிற்சி செய்பவர்களது உடலில் சிறுநீரகக் கல் அல்லது பித்தப்பைக் கல் முதலியவை உருவாவது கூட இருபது சதவீதம் குறைவாம். உடல் எடை கட்டுப்படுகிறது. சக்தி கூடுகிறது. தோற்றம் பொலிவடைகிறது.

Read more...

இலங்கையில் ஐ.நா. அகதிகள் நிறுவனத் தலைவர்

இலங்கையின் வடக்கே அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களில் பாதிப் பேர் தற்போது முகாம்களை விட்டுச் சென்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணிகளுக்கான தலைமை அதிகாரி ஜான் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

இந்த முகாம்களுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ள ஜான் ஹோம்ஸ் இது விடயம் தொடர்பாக இலங்கை அரசு அளித்து வரும் விபரங்களை உறுதிப்படுத்தினார்.

ஒரு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம் பேருக்கும் குறைவானர்கள் தான் அங்கு எஞ்சியிருப்பதாக ஜான் ஹோம்ஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பாதுகாப்புடன் மீளத் திரும்ப வேண்டும் என்பதையும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


கரும்பு கொள்முதல் விலையை மாற்றியமைத்த இந்திய அரசின் சட்டத்துக்கு எதிர்ப்பு




இந்திய மத்திய அரசு கரும்புக்கு நியாய ஆதரவு விலை என்று சுமார் 1200 ரூபாயை அறிவித்து அண்மையில் பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக தலைநகர் டில்லியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாரிக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இது குறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் தமிழகப் பிரிவின் துணைத்தலைவர் கே.வி.ராஜ்குமார் தமிழோசையில் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் நிகழ்ச்சியில் கேட்கலாம்.

கரும்பு விலை நிர்ணயம் தொடர்பில் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவிக்கும் கருத்துகளையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


வங்கதேசத் முன்னாள் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு காரணமானவர்களின் மேல்முறையீடு நிராகரிப்பு


ஷேக் முஜிபுர் ரஹ்மான்
வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினர் பலரும் 1975ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஐந்து பேர், தங்கள் மீதான கீழ்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செய்திருந்த மேல்முறையீடு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உணர்ச்சி பொங்கக் கண்கலங்கினார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்தப் புதல்வியான ஷேக் ஹசீனாதான், தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டபோது உயிர் தப்பியிருந்த ஒரே நபர் ஆவார்.

தனது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் வேறு இருபது பேரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டனைக்குள்ளாவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த நாள் முதலே ஷேக் ஹசீனா தீர்மானமாக இருந்துவந்தார்.

படுகொலைக்குக் காரணமான அப்போது இளம் இராணுவ அதிகாரிகளாக இருந்த நபர்களுக்கு வங்கதேசத்தின் முந்தைய அரசாங்கங்கள் அரண்களாக இருந்து அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாய் இருந்தன.

1996ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா முதல் தடவையாக பிரதமராக வந்த பின்னர்தான் இந்நபர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களாகக் கருதப்படும் வேறு ஆறு பேர் இன்னும் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர்.

ஆனால் கைதுசெய்யப்பட்டு வங்கதேசச் சிறைகளில் உள்ளவர்கள் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.

குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்யாத பட்சத்தில், ஒரு மாதத்துக்குள்ளாகவேகூட இவர்கள் தூக்கிலிடப்படலாம்.



--------------------------------------------------------------------------------


டெஸ்ட் கிரிக்கெட்: ஆறாம் விக்கெட்டுக்கான ரன் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை


மஹேல ஜெயவர்த்தன - பிரசன்னா ஜெயவர்த்தன ஜோடி
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹேல ஜெயவர்த்தன-பிரசன்னா ஜெயவர்த்தன ஜோடி மட்டைவீச்சில் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் இலங்கை அணி ஆடிவரும் டெஸ்ட் ஆட்டத்தில் இந்த ஜோடி குவித்துள்ள 351 ரன்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் ஆறாவது விக்கெட்டுக்காக குவிக்கப்பட்ட மிக அதிக ரன்கள் ஆகும்.

72 ஆண்டுகளுக்கு முன் 1937ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனும் ஜேக் ஃபிங்கிள்டன் இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருந்த 346 ரன்கள்தான் இதற்கு முன் ஆறாம் விக்கெட்டுக்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்துவந்தது.

மேலும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ள 760 ரன்கள்தான் இந்திய மண்ணில் நடந்துள்ள அதிகபட்ச இன்னிங்ஸ் ரன்குவிப்பு ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களுக்கான சாதனையைப் பெற்றிருப்பதும் இலங்கை அணிதான். 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 952 ரன்களைக் குவித்திருந்தது.

Read more...

>> Monday, November 16, 2009

மக்கள் வணக்கம்!
பொழுதைத் திருடும் தொலைக்காட்சியல்ல இது... தமிழின் அனைத்து அடையாளங்களையும், தமிழனின் அடையாளங்களையும் மறுமீட்டெடுத்து, அறிவால், இரசனையால், சிந்தனையால், பொருளாதாரத்தால், வாழ்க்கை முறைகளின் முதிர்ச்சியால்... உலக உயரத்தில் ஓர் இனத்தை உட்கார வைக்கும் முயற்சி.. மக்கள் தொலைக்காட்சி-இது தமிழ் கூறும் நல்லூடகம்!

Monday, November 9, 2009
பத்து நிமிடக்கதைகள் குறும்படப்போட்டி


கதை இருக்கிறது. கரு இருக்கிறது. அதை உருவாக்குவதற்க்கான தொழில் நுட்ப வசதியும் இருக்கிறது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இளம் இயக்குனரா நீங்கள்? இதோ உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திஇருக்கிறது நமது மக்கள் தொலைக்காட்சி. பத்து நிமிடத்திற்குள் ஒரு படத்தை எடுக்க முடியுமா ? முடியும் என்றால் இன்றே சிந்தனைகளை முடுக்கிவிடுங்கள் . கதைக்கான கரு எதுவாகவும் இருக்கலாம் . அது உங்கள் விருப்பம் . நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களை பார்த்து மதிப்பிட பிரபல இயக்குனர்கள் தயாராக இருக்கிறார்கள் . அவர்கள் மட்டுமல்ல ஒளிபரப்பாகும் படங்களைப்பார்த்து அதனை தரப்படுத்த பார்வையாளர்களும் தயாராக இருக்கிறார்கள். பிறது என்ன . சிறந்த குறும்படங்களுக்கான பரிசுபெறும் பட்டியலில் உங்கள் படங்களும் இடம்பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது . சிறந்த படங்களுக்கு நிறைவான பரிசுகள் காத்திருக்கின்றன. எனவே காலத்தை கடத்தாமல் இன்றே களத்தில் இறங்குங்கள். பத்து நிமிடத்திற்குள் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பரிசை தட்டிச்செல்லுங்கள்.

உங்கள் குறும்படம் கீழே தரப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் .

1. கதைக்கான கரு எதுவாகவும் இருக்கலாம்.

2 . குறும்படம் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .

3 இறுதி படைப்பு டி வி காம் DVCAMவடிவில் இருத்தல் வேண்டும் .

4.தொலைக்காட்சிக்கு அனுப்பும் படைப்பு திருப்பி அனுப்பப்படமாட்டாது . எனவே தாங்கள் ஒரு படியை வைத்து கொண்டு அனுப்புதல் வேண்டும் .

5.தங்கள் படைப்புகளை தணிக்கை செய்யும் உரிமை தொலைக்காட்சிக்கு உண்டு .

6.உங்கள் படைப்பு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 20-12 2009

தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
பத்து நிமிடக்கதைகள் - குறும்படப்போட்டி ,
மக்கள் தொலைக்காட்சி ,
12-16 சுப்பாராவ் நிழற்சாலை முதல் தெரு ,
கல்லுரிச் சாலை ,
சென்னை -600006 .
தங்கள் முயற்சி வெற்றி பெற மக்கள் தொலைக்காட்சி வாழ்த்துகிறது .












Posted by மக்கள் குழாம் at 10:22 PM 0 comments
Sunday, September 6, 2009
மக்கள் தொலைக்காட்சி நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ....,


Posted by மக்கள் குழாம் at 11:02 PM 2 comments
Thursday, May 14, 2009
மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல்
இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை ஒளிபரப்பியதால் மக்கள் தொலைக்காட்சியை தகர்க்கப்போவதாக
மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் இனப்படுகொலையை விளக்கும்
படக்காட்சிகளை உடனே நிறுத்துமாறு நள்ளிரவில் காவல்துறையினர் வற்புறுத்தினர்.

இலங்கைத் தமிழர்களின் அவலநிலை குறித்த குறுந்தகடுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இலங்கைத்தமிழர்களின் உண்மை நிலை
குறித்த காட்சிகள் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சிறிது நேரத்திலேயே தொலைபேசியிலும், நேரிலும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஜாபர் ஜாலி , திருவல்லிக்கேணி
இணை ஆணையர் கணேச மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் அவலம் குறித்த காட்சிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தினர். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியே இலங்கைத்தமிழர் அவலநிலையை ஒளிபரப்பி வருவதாக மக்கள் தொலைக்காட்சி செய்திப்பிரிவினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் இலங்கைத் தமிழர் அவலநிலை குறித்த ஒளிபரப்பை உடனே நிறுத்தாவிட்டால் அலுவலகத்திற்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.
இலங்கைத் தமிழர்களின் அவலக் காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியவுடன் சென்னை நகரிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்தொடர்வண்டி இயக்கம் அரை மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. பலமணி நேரம் சென்னை நகரமே இருளில் மூழ்கியது. பின்னர் மின்சாரம் வந்தபோதும் மக்கள் தொலைக்காட்சி வரவில்லையே என ஏராளமான அழைப்புகள் அலுவலகத்திற்கு வந்தன.
Posted by மக்கள் குழாம் at 4:41 AM 8 comments
Saturday, March 21, 2009
பேலத் ஆப் சொலிசர்


Posted by மக்கள் குழாம் at 4:09 AM 6 comments
Wednesday, March 4, 2009
மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்




மார்ச் 8 - மகளிர் நாள் அன்று மக்கள் தொலைக்காட்சி பெண்களை மையமாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்குகிறது.




காலை பெண்கள் நாகசுரம் வாசிக்க இசையோடு தொடங்குகிறது மக்கள் தொலைக்காட்சியின் மகளிர் நாள் நிகழ்ச்சிகள். பெண்களுக்கு தமிழில் வந்து கொண்டிருக்கும் அவள் விகடன், சினேகிதி, பெண்ணே நீ, மங்கையர் மலர் முதலான பெண்கள் பத்திரிக்கைகளை ஆய்வு பார்வையோடு நோக்கும் பெண்கள் இதழ்கள் ஒரு பார்வை, பெண்களின் பெருமைகளை பேசும் பெண்கள் கவியரங்கம் 'பெண்மை போற்றுதும்', மகளிர் நாள் சிறப்பையும் மகளிர் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் நேரலை நிகழ்ச்சி, தங்கள் சொந்த முயர்சியால் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற பெண்களின் வாழ்கையை பதிவு செய்யும் பெண்ணால் முடியும் , குழந்தை பெறாத பெண்களை இந்த சமூகம் என்ன பாடுபடுதுகின்றது என்பதை சித்தரிக்கும் ஈரானிய திரைப்படம் லைலா,


பெண்கள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்லூரி கொண்டாட்டம்.




துணை நடிகைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்யும் கறுப்பு வெள்ளை என்று பல நிகழ்ச்சிகள் மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகின்றன.




ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் இருக்கலாம் .
Posted by மக்கள் குழாம் at 11:14 PM 3 comments
Friday, February 20, 2009
காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்குரைஞர்களை ஓட ஓட விரட்டி காவல்துறையினர் தாக்கினர். இந்நிகழ்வை மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சேதுராமன் , ஜோதிமணி ஆகியோர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் . செய்தியாளர்கள் என்று அடையாள அட்டையை காண்பித்த பிறகும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த செய்தியாளர்கள் இருவரும் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .


காவல் துறையினரின் இந்த வெறித்தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மக்கள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன . ஒளிப்பதிவாளர்கள் மீதும் கண்முடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது . மேலும் காவல்துறையினரின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்குரைஞர்களும் படுகாயம் அடைந்தனர் .


Posted by மக்கள் குழாம் at 3:02 AM 8 comments
Posted by மக்கள் குழாம் at 1:43 AM 0 comments
Older Posts Subscribe to: Posts (Atom) Makkal TV
http://makkal.tv/
Blog Archive
▼ 2009 (8)
▼ November (1)
பத்து நிமிடக்கதைகள் குறும்படப்போட்டி
► September (1)
மக்கள் தொலைக்காட்சி நான்காம் ஆண்டில் அடி எடுத்து வ...
► May (1)
மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல்
► March (2)
பேலத் ஆப் சொலிசர்
மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
► February (3)
காவல்துறையினர் நடத்திய வெறித்தனமான தாக்குதல்
மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடை
► 2008 (9)
► December (1)
ஈழம் - நேற்றும் இன்றும் .டிசம்பர் 15 ,2008 முதல் ....
► September (6)
மூன்றாம் ஆண்டு சிறப்பு மலர் - 2008
தலைவா - ஆகஸ்ட் 22 முதல் ..,
மணிச்செய்திகள் - ஆகஸ்ட் 22 முதல் ...,
முத்தமிழ் மணத்த மூன்றாம் ஆண்டு விழா.....,
மூன்றாம் ஆண்டு விழா
► August (2)
முத்தமிழே மூச்சாக...தொடங்குகிறது மூன்றாமாண்டு!
முதல் பூ...
About Me

மக்கள் குழாம்
View my complete profile

Read more...

இலங்கை தேர்தல் குறித்து பொருத்த நேரத்தில் அறிவிக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பொருத்தமான தருணத்தில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்த தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் ஞாயிறு மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாத தமது அரசாங்கம் இராணுவத்தையும் நாட்டையும் பிளவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்காது எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்டுள்ள ஆளும் பிரதான கட்சியின் இந்த மாநாட்டில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருடகாலம் இந்த வாரத்துடன் பூர்த்தியடையும் நிலையில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வேளையிலும் ஜனாதிபதி தேர்தலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



--------------------------------------------------------------------------------


இலங்கை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அரச நிலங்கள் அபகரிக்கப்படுவதாக புகார்


மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அரச நிலங்களை அத்து மீறி அபகரிப்பது தொடர்பாக வக்கியல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிசாரால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்துகின்றார்

இது தொடர்பாக அப்பிரதேசத்திற்கு பொறுப்பான சிவில் அதிகாரியான பட்டிப்பளை பிரதேச செயலாளர் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் அரச காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக தான் ஜனாதிபதியிடம் புகார் செய்ததையடுத்து இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகம் அரசாங்க அதிபர்களிடம் கோரியுள்ளது என்றும், மேற்படி விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட பகுதி பிரதேச செயலாளர்களிடம் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


மீள்குடியேற்றபட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து தரவில்லை - தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தர்


இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே போருக்கு பிறகு மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களுக்கு தேவையான வாழ்வாதார வசதிகளை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான இரா சம்பந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

முகாம்களை விட்டு வெளியே வரும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகவும், குறிப்பாக மக்களுக்கு வீடுகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணங்களில் வலுக்கட்டாயமாக வெளி ஆட்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Read more...

>> Friday, November 13, 2009

ஜெனரல் சரத் பொன்சேகா இராஜினாமா

இலங்கையின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.

தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தான் வழங்கிவிட்டதாக அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

இந்த மாத இறுதியுடன் தான் பதவி விலகப்போவதாக தெரிவித்த பொன்சேகா அவர்கள், தனது இராஜினாமாவுக்கான பல காரணங்களை, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், தற்போதைக்கு அவற்றை வெளியிட முடியாது என்றும் கூறினார்.

இந்த வருட முற்பகுதியில் முடிவுக்கு வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர் இவராவார்.


சக படையதிகாரிகளுடன் சரத் பொன்சேகா(ஆவணப்படம்)
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத் தலைமையகத்தை விட்டு வெளியேறும் பாதையில் கரும்புலித் தாக்குதலில் உயிர்தப்பிய ஜெனரல் பொன்சேகா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தினார். இராணுவ ரீதியாக புலிகளை முறியடிக்கவே முடியாது என்ற கருத்தை பொய்யாக்கினார்.

சில மாதங்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக இருந்து வெறுமனே அலங்கார பதவியாக மாத்திரம் கருதப்படும் தற்போதைய பதவிக்கு அவர் பதவி உயர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.



சமீபத்தில் ஒரு நிகழ்சியில் பேசுகையில் இலங்கையில் புலிகளுக்கு எதிரான வெற்றியில் இராணுவம் ஆற்றிய பங்களிப்பை அதிகாரத்தில் இருப்பவர்கள் மறந்து வருகின்றனர் என்ற அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார். விடுதலைப் புலிகளை ஒழித்ததை தனது பெரிய சாதனையாக அவர் கூறினார்.

அடுத்த வருடம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


'இறுதிக்கட்டத்தில் துணுக்காய் மீள்குடியேற்றம்'- முல்லை அரச அதிபர்


ஆஸ்திரேலியாவின் விசேட தூதுவரை வரவேற்கும் அதிகாரிகள்
இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.

இது வரையில் இந்தப் பகுதியில் 6000 பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

அதேவேளை, துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் போக்குவரத்து, விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரிசிறி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேசத்தின் விவசாய அபிவிருத்திக்கென 14 மில்லியன் ரூபாவும், இந்தப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 19 பாடசாலைகளைப் புனரமைத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக 39 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுனர் சந்திரசிறி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையில் இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலிய விசேட தூதுவர் ஜோன் மெக்கார்த்தி அவர்கள் நேற்று துணுக்காய் பிரதேசத்திற்குச் சென்று அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளி்ன் தளபதி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன ஆகியோரை ஆஸ்திரேலியாவின் விசேட தூதுவர் சந்தித்து, அங்கு இடம்பெற்று வருகின்ற அபிவிருத்தி பணிகள் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் என்பன குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


இலங்கை அகதி முகாம்களுக்கு தமிழக அரசு 100 கோடி ஒதுக்கவுள்ளதாக அறிவிப்பு


தமிழகத்தில் இலங்கை அகதிகள்
தமிழக அரசு மாநிலத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக இன்று அறிவித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே முதல்வர் கருணாநிதி அகதி முகாம்களின் நிலைமையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது அமைச்சர்களை முகாம்களைப் பார்வையிட்டு வருமாறு பணித்திருந்தார். அவ்வமைச்சர்களின் அறிக்கைகளை விவாதிப்பதற்காகவே இன்று அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டியிருந்தார்.

பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முகாம்களிலுள்ள 5922 குடியிருப்புக்களை செப்பனிடவும், சாலை, கழிப்பிடம், குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, முகாம்வாசிகள் அனைவருக்கும் தமிழகத்திலுள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படுவதுபோல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more...

>> Thursday, November 12, 2009

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இன்று, புதன்கிழமை, காலை நடந்தஒரு வைபவத்த்தில் இந்த நேரடி சேவை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினசரி மூன்று பேருந்துகள் , ஏ-9 வீதியூடாக இயக்கப்படுகின்றன என்று இலங்கைப் போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பணிமனை பொதுமேலாளர் கணேசபிள்ளை தமிழோசையிடம் தெரிவித்தார். இவற்றில் இரண்டு அரைச்சொகுசு பேருந்துகள், மற்றொன்று சாதாரண பேருந்து.


யாழ் பேருந்து நிலையம் ( ஆவணப்படம்)

யாழ்ப்பாணத்துக்கும் நாட்டின் தென்பகுதிகளுக்கும் இடையே தரைவழிப் போக்குவரத்து, யுத்த காலத்தில் தடைப்பட்டிருந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டபோது, இதில் பயணிக்கும் பயணிகள் , வவுனியா அருகே உள்ள மதவாச்சி சோதனைச்சாவடி வரையிலும் ஒரு பேருந்தில் சென்று, பிறகு அங்கிருந்து சோதனைச்சாவடியைத் தாண்டி , வேறு ஒரு பேருந்தில் அல்லது இரயில் வண்டிகள் மூலமாக தங்களது பயணத்தைத் தொடர வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்த நிலை இப்போது தொடங்கப்பட்டுள்ள நேரடிப் போக்குவரத்து மூலம் மாறி, பயணிகள் நாட்டின் வடக்கிலிருந்து கொழும்புக்கு தடையில்லாமல் நேரடியாக பயணிக்கக் கூடிய வசதி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்ல விரும்பும் பயணிகள், வழமை போல அவர்களது பகுதிகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பேருந்துகளில் செல்ல முடியும் என்று கணேசபிள்ளை தெரிவித்தார்.

அதே போல, யாழ்ப்பாண மக்கள் மட்டுமே இந்தப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும், கொழும்பிலிருந்து மக்கள் யாழ்ப்பாணம் செல்ல இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது முடியாது என்றும் அவர் கூறினார்.

இதே போல யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு விமானம் அல்லது கப்பல் மூலம் செல்பவர்கள் மீண்டும் அவர்கள் பயணித்த அதே வழியிலேயே ( அதாவது விமானத்திலோ அல்லது கப்பல் மூலமாகவோதான்) திரும்ப வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கணேச பிள்ளை தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------


'யாழ்ப்பாணத்துக்கு வன்னிப்போரில் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் முடிவடைந்தது'

இலங்கையில் நடந்து முடிந்த போரில் இடம்பெயர்ந்து , முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்களில், யாழ் குடா நாட்டைச் சேர்ந்தவர்கள் சுமார் 48000 பேர், அங்கு மீண்டும் அனுப்பப்படுவது முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் 7ம் தேதியுடன் இந்த மீள்குடியேற்றம் முடிவடைந்ததாக யாழ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஆயினும், இந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட நிதி உதவி தரப்படுவதில் இன்னும் சிக்கல்கள் நிலவுவதாகத் தெரிகிறது. பல குடும்பங்களுக்கு தரப்படவேண்டிய நிதி உதவியில் ஒருபகுதியே முன்பணமாகத் தரப்பட்டுள்ளது என்றும் பல குடும்பங்களுக்கு இன்னும் எதுவுமே தரப்படவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக யாழ் குடா நாட்டுக்கு திரும்பி அனுப்பப் பட்டவர்களில் பலர் வறுமையில் வாடுவதாகவும், இரண்டு தற்கொலை சம்பவங்கள் கூட நடந்துள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதே போல, யாழ் குடா நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்ட மாணவர்கள் பலருக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதுவது சிரமமாக இருக்கும் என்பதால் டிசம்பரில் நடக்கவிருக்கும் இந்தத் தேர்வை, பிப்ரவரிக்கு ஒத்திவைக்குமாறு, யாழ்ப்பாண தன்னார்வ குழுக்களின் ஒன்றியம் கூறியுள்ளது.



--------------------------------------------------------------------------------


வன்னி முகாம்களில் உள்ள மக்களை சந்திக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி


'முகாம்களுக்குச் செல்ல எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி'-ரிஷாத்

இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்களை சந்திக்கும் முகமாக எதிர்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட மீள்குடியேற்ற அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள 32 பேர் அங்கு செலவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்தக் குழுவில் வன்னிப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அவர்கள் எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அங்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறுகிறார்.

எதிர்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக வவுனியா முகாம்களுக்கு சென்று வர அனுமதி கோரினால் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்று அவர்கள் அங்கு சென்று வருவதற்கு வழி செய்யப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் தெரிவிக்கிறார்.

மீள்குடியேற்ற அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் அங்கு சென்று வந்த பிறகு அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை அரசு ஆக்கபூர்வமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் கூறுகிறார்.



--------------------------------------------------------------------------------


புரதச்சத்து குறைந்த குழந்தைகள் தெற்காசியாவில்தான் அதிகம் என்கிறது யுனிசெப்




உலகம் முழுவதும் புரதச் சத்துக் குறைவாக உள்ள, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள், அதாவது, 83 மில்லியன் குழந்தைகள், தெற்காசியாவில் உள்ளதாக, இன்று வெளியிடப்பட்ட யுனிசெஃப் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சத்துக்குறைவாக உள்ள குழந்தைகள் அதிகமாக, 24 நாடுகளில் உள்ளனர். அதில் அதிகபட்ச குழந்தைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகள் தெற்காசியாவில் உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவைதான் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அதாவது, இந்த நாடுகளில், 40 சதத்துக்கும் அதிகமான குழந்தைகள் அவ்வாறு உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில், 59 சதம் அல்லது 2.9 மில்லியன், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் 49 சதம் அல்லது 1.75 மில்லியன், இந்தியாவில் 48 சதம் அல்லது 61 மில்லியன், வங்கதேசத்தில் 7.2 மில்லியன், பாகிஸ்தானில் 9.9 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புரதச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களாகவும் உள்ளதாக யுனிசெட் அமைப்பின் செயல் இயக்குநர் ஆன் எம்.வெமனென் தெரிவித்துள்ளார்.

தாயின் கர்ப்பத்திலிருந்து, ஒரு குழந்தையின் இரண்டு ஆண்டுகள் வரை, புரதச்சத்து மிகவும் அவசியம். இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் சத்துப் பற்றாக்குறை, அதன் ஆயுட்காலம் முழுவதும் நோயை எதிர்க்கும் திறன் குறைந்துவிடுவதுடன், சமூக மற்றும் மன ரீதியிலான திறமைகள் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என அறிக்கை கூறுகிறது.

தெற்காசியாவைப் பொருத்தவரை, பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், குழந்தைகள் புரதச்சத்துக் குறைபாடுடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக, யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்துள்ளார்.

கர்ப்பவதிகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புரதச்சத்துள்ள உணவு வகைகளை வழங்குவது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள டேனியல் டூலே, இரண்டு வயதுக்கு மேட்பட்ட குழந்தைகள் மீது தேவைக்கு அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது என்றும், அதனால் தேவையான பலன் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புரதச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் கல்வி கட்கும் திறன் குறைந்தவர்களாகவும், மெதுவாக செயல்படக்கூடியவர்களாகவும், வயிற்றுப் போக்கு, அம்மை, நிமோனியா, மலேரியா, எச்ஐவி எய்ட்ஸ் போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உடையவர்களாகவும் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தை இறப்பு விகிதத்தை பெருமளவு குறைப்பதுடன், வளரும் நாடுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை 12 முதல் 15 சதம் வரை குறைக்க முடியும் என்றும் ஆய்வு ெதரிவிக்கிறது.

தெற்காசியா முழுவதும் பின்பற்றப்படும் ஆபத்தான கலாசார நடைமுறை, குழந்தைத் திருமணம். அதனால், பெண்கள் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பிரசவம் எளிதாக இருக்க வேண்டும் என்று கூறி, கர்ப்ப காலத்தில் குறைவாக உண்ணுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனால், எடை குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. அந்தக் குழந்தைகள் உயிருடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பதில்லை. மூன்றில் ஒன்றுக்கும் குறைவான பெண்கள்தான், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள். சிலர் மூன்று நாட்கள் கூட எடுத்துக் கொள்கிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தெற்காசியாவில், உறுதியான தலைமை தேவை என்று யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்துள்ளார். புரதச்சத்துள்ள உணவு வழங்குவதில் முதலீடுகளைச் செய்யாமல், பொருளாதார வளர்ச்சியால் மட்டும் நிலைத்து நிற்கக்கூடிய மாறுபாட்டை ஏற்படுத்திவிட முடியாது. தெற்காசியா முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் 83 மில்லியன் குழந்தைகளுக்காக, இந்த சுகாதார முன்னுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று டேனியல் டூலே வலியுறுத்தியுள்ளார்.

Read more...

>> Wednesday, November 11, 2009

துணுக்காயில் கல்வி உள்ளிட்ட பல சேவைகள் துவக்கம்

இலங்கையின் வன்னிப்பிரதேசமாகிய முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பதற்காக யோகபுரம் மகாவித்தியாலயம் செவ்வாய் கிழமை முதல் செயற்படத் தொடங்கியுள்ளது என்றும், நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று அந்தப் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தம்பிராஜா மேகநாதன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, துணுக்காய் பகுதியில் இரண்டு உப அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறும் வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வி.குமரகுரு அவர்கள், மக்கள் குடியேறியுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலும் அஞ்சல் அலவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன என தெரிவித்திருக்கின்றார்.

துணுக்காய் பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான காய்கறிகள், எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கென ஏற்கனவே நான்கு கிளைகளைத் திறந்து செயற்பட்டு வருவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தம்பிப்பிள்ளை பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


திருகோணமலையில் 2006 முதல் 109 பேர் காணமல் போயுள்ளனர்- ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்


கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பள்ளி மாணவி

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுகளில் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 109 பேர் காணாமல் போனதாகவும், 82 பேர் கடத்தப்பட்டதாகவும், இலங்கையில் காணாமல் போனவர்கள், மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையர், முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ண தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உண்மையறியும் நடவடிக்கைகளை நடத்திய பின்னர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

தனது விசாரணைகளின் போது காணாமல் போனவர்களில் இளம் மனைவிமாரே அதிகமாக சாட்சியம் அளிக்க வந்ததாகவும் அவர் கூறினார்.

அவர்களது நிலைமை மிகவும் சோகமானதாக இருந்ததாகவும், அவர்களில் பலர் வாழ வழியில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடத்தப்பட்டவர்களில் சிலரைக் கொண்டு சென்ற வெள்ளை நிற வான்கள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் ஊடாகவே எந்தவிதமான சோதனையும் இன்றியே சென்றதாக சாட்சியங்களில் சில குற்றஞ்சாட்டியதாகவும் மஹாநாம கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் -இடதுசாரிகளுக்கு பின்னடைவு


பிரதமர் மன்மோகன் சிங்குடன் சோனியா காந்தி

ஏழு மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. மேலும், உத்தரப் பிரதேசத்தில், மக்களவைத் தொகுதி ஒன்றிலும் காங்கிஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில், இடதுசாரிக் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில், பிரோஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், முன்னாள் நடிகரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராஜ் பாபர், சமாஜவாதி கட்சி வேட்பாளரும் அக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவையைப் பொருத்தவரை, உத்தரப் பிரதேசத்தில், 11 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 10 தொகுதிகளுக்கும், கேரளத்தில் மூன்று தொகுதிகளுக்கும், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா இரு தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் ஒரு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

கேரளத்தில், மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தக்கவைத்துக் கொண்டது..

மேற்கு வங்கத்தில், பத்தில் ஏழு தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் காங்கிரஸும், ஒன்றில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கூடக் கிடைக்காத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான ஃபார்வர்டு பிளாக்கிற்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இடைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறற்றுள்ளது.

தேர்தல் நடந்த 11 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை மாயாவதி கட்சி கைப்பற்றியுள்ளது. முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

Read more...

>> Tuesday, November 10, 2009

பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் பூர்த்தியாவதை ஜெர்மனி கொண்டாடியுள்ளது


ஜெர்மன் தலைவி அங்கேலா மெர்க்கெலுடன், முன்னாள் சோவியத் தலைவர் கோர்பசேவ் மற்றும் முன்னாள் போலந்து அதிபர் லெக் வலேசா

பெர்லின் சுவர் வீழ்ந்ததன் இருபது வருட நிறைவைக் குறிக்கும் வகையிலான வைபவத்தில் கலந்துகொண்ட ஜெர்மனிய ஆட்சித் தலைவரான அங்கேலா மெர்க்கல் அவர்கள், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை இணைக்கும் பாலம் ஒன்றின் மூலம் வைபவரீதியாக நடந்துவந்தார்.

இந்தப் பாலம்தான் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது முதன் முதலில் திறக்கப்பட்ட எல்லைக் கடவை மையம் ஆகும்.

முன்னாள் சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பசேவ், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக வெற்றிகரமாக சவால் விடுத்த போலந்து தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அதிபராக வந்தவருமான லெக் வலேஸா ஆகியோர் இந்த வைபவத்தில் மெர்க்கெலோடு நடந்து வந்தார்கள்.

ஜெர்மனியின் கிழக்குப் பகுதி போதிய பொருளாதார வளர்ச்சியைப் பெறாத நிலையில், ஜெர்மனியின் இணைவு இன்னமும் முழுமை பெறவில்லை என கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவரான மெர்க்கெல் கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்ற பிரச்சினையை சமாளிப்பதில் கூட்டாக செயல்படுவது என்பதற்கு இலங்கையும் ஆஸ்திரேலியாவும் உடன்பட்டுள்ளன.

கொழும்பு வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித்துக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை அகதிகள் அடங்கிய கப்பலொன்று ஆஸ்திரேலியா செல்லும் வழியில்இந்தோனேஷியாவில் கடந்த மாதம் வழிமறித்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் தீர்க்கப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் வருகின்றது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு நோக்கி வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


நீதிபதி தினகரனுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது


நீதிபதி பி.டி.தினகரன்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.டி.தினகரன், தமிழ்நாட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் அரசு நிலத்தை சட்டவிரோதாமாக கைப்பற்றியதாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருப்பதால் அவர் தமது பதவியில் நீடிக்கக்கூடாது என்று கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் சிலர், தினகரன் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிமன்றத்திற்குள் புகுந்து அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அவரது பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தாம் விசாரித்துக்கொண்டிருந்த வழக்கை பாதியில் இடைநிறுத்திவிட்டு, நீதிபதி தினகரன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை படம்பிடித்துக்கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட சில ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் நீதிபதி தினகரன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தான் எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் கைது


திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சென்னையை அடுத்த திருவள்ளூரில் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று திருவள்ளூரில் நில மீட்புப் போராட்டம் நடத்த முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வரதராஜன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மனதில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஞாயிறன்றே அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

போராட்டம் குறித்து விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலர் ஞாயிறு மாலையே கைதுசெய்யப்பட்டிருந்தனர்.



--------------------------------------------------------------------------------


காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்


திருநாவுக்கரசர்
பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியையும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

கடந்த 2002ல் திருநாவுக்கரசர் ஆரம்பித்திருந்த எம்.ஜி.ஆர்.-அண்ணா திமுக கட்சி பாரதீய ஜனதாவில் இணைந்திருந்தது.



^^

Read more...

>> Monday, November 9, 2009

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு புரட்சியாக வெடிக்கும்: சீமான்

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான்,

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே இன உணர்வுமிக்க நாங்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்தோம். அதன் விளைவாக தென் மாவட்டத்தில் தென்காசியையும், வடமாவட்டத்தில் ஈரோட்டிலும் வென்றோம்.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. மனிதநேயம் பேசும் மார்க்ஸிஸ்டுகளும் இதனை ஆதரிக்கவில்லை. திராவிடம் பேசி பேசி தமிழ் இன உணர்வை இழந்துவிட்டோம்.

கடந்த 2004 பாராளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி பிரதமர் ஆக தமிழகம் புதுவையில் இருந்து 40 க்கு 40 இடங்களை தந்தோம். ஆனால் அவர் கட்சியில் இருந்து வளர்ந்த சரத்பவார், சங்மா போன்றவர்கள் வெளிநாட்டவர் பிரதமர் ஆவதா? என எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து 40 எம்.பிக்களை வழங்கிய தமிழர்களுக்கு நீங்கள் தந்த பரிசு, அருகே உள்ள இலங்கையில் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து உதவினீர்கள். எல்லா நாட்டு விடுதலையும் ஆதரித்த இந்தியா தமிழ்ஈழ விடுதலையை மட்டும் பயங்கரவாதம் என்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவன் சமஉரிமை கொடுப்பானா? ராஜீவ்காந்தி அனுப்பிய அமைதிப்படை அங்கு சென்று சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடுவராகத்தானே செயல்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை மாறாக தமிழ் மக்களை சிங்கள ராணுவம் எதைச்செய்ததோ அதைவிட கொடுமையான காரியங்களில் ஈடுபட்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய ராணுவம் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் சுதந்திரத்தமிழ் ஈழம் குடியரசு அமைந்து 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் .

உலகின் பெரிய தேசிய இனமான தமிழ் இனத்திற்கு என தனி ஈழ நாடு கிடைக்க பிரபாகரன் பாடுபட்டு வந்தார். அதற்காக ஒரு லட்சம் தமிழ் ராணுவத்தை அமைத்திருந்தார். அதனை சிங்கள ராணுவம் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வலிமை மிக்க நாடுகளின் ராணுவ துணையோடு ஈழ ராணுவத்தை அழித்திருக்கிறார்கள் .

குஜராத்தில் நிலநடுக்கம். தன்வீட்டில் நடந்த அவலமாக கருதி உதவினோம், கார்க்கில் போராட்டத்தில் அதிக நிதி கொடுத்து உதவினோம் . இந்தியர் என்ற உணர்வில் தமிழர்களாகிய நாம் உயர்ந்து நிற்கிறோம். இந்திய நாட்டில் உள்ள அனைவரும் சகோதரர்கள் என்று கூறிக்கொள்கிறோம். கேரளாவில் முல்லைபெரியாற்றில் இருந்து மலையாளி தண்ணீர் தரமறுக்கிறான், காவிரியில் கன்னடன் தண்ணீர் தரமறுக்கிறான். பாலாற்றில் தெலுங்கன் தண்ணீர் தர மறுக்கிறான். இதுதான் இந்தியாவா?

ஆறரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை ஆளுகின்ற கட்சி இலங்கையில் ஒரு தேசிய இனம் அழிக்கப்படுவது கண்டு ஆதங்கப்படவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ், திமுக அதிமுக கட்சிகள் தமிழகத்தில் தமிழ் இன உணர்வை மழுங்க வைத்து விட்டது . தமிழகத்தில் தமிழ் ஈழ விடுதலையை பெற்றுத்தர உண்மையில் விரும்பியவர் மறைந்த எம்ஜியார்தான். அவர்தான் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருக்குப்பின் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக கட்சிகள் அந்த உணர்வோடு செயல்பட்டிருந்தால் ஈழத்தில் ஒரு தமிழன் கூட செத்திருக்க மாட்டான். மாவீரன் பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக போராட்டமாக வெடிக்கும் என்றார்.

Read more...

இலங்கை தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஈடுப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றதாகவும், இன்னும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறுபான்மை சமூகங்களின் சார்பில் குறைந்தபட்ச கொள்கை திட்டம் ஒன்றினை முன்வைத்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று சேர்ந்து செயற்படுவது சம்பந்தமான ஒரு முடிவை எட்டலாம் என்கிற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களால் வகுக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயற்திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவசர மீள்குடியேற்றம், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு சம்பந்தமான விடயங்கள் போன்றவை இடம்பெறும் என்றும் ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியும் அந்த குறைந்தபட்ச கொள்கை திட்டம் உருவாகும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் கூட்டணி சார்பில் யார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


இலங்கை செல்ல பல மாதங்களாக அனுமதி கிடைக்கவில்லை - ஐ.நா பிரதிநிதி


ஐ.நா

இலங்கைக்கு செல்ல பல மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான உத்தியோகபூர்வ பதில் கிடைக்க வில்லையென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான சிறப்பு பிரதிநிதி ப்ரான்க் லா ரூ கூறுகின்றார்.

இலங்கையில் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் நிலைமை குறித்து கண்டறியும் பொருட்டு விஜயமொன்றை மேற்கொள்ள தொடர்ந்து தான் முயற்சித்து வருதாக ப்ரான்க் லா ரூ தெரிவிக்கிறார்.

தமது வருகையை வரவேற்பதாக இலங்கை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ள போதிலும் தமக்கான அதிகாரபூர்வ பதில் கடிதத்தை அவர்கள் அனுப்பி வைக்காதிருப்பது குறித்து ஆச்சரியமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி பற்றிய மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


போருக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் துவக்கம்


திங்கட்கிழமை முதல் செயற்பாடுகள் ஆரம்பம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள யோகபுரம் மகாவித்தியாலயத்தில் திங்கட்கிழமை முதல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

ஞாயிற்றுக்கிழமை அந்தப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான மதிப்பீடு செய்த கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதேவேளை துணுக்காய் பிரதேசத்தில் திங்கட்கிழமை முதல் அஞ்சல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமா விஜயம்


திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லமா, இந்தியா சீனா எல்லையிலுள்ள அருணாச்சல பிரதேசத்திலிருக்கும் புத்த மடத்திற்கான விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த மடத்தை சுற்றியுள்ள இடங்கள் சீனாவுக்கு சொந்தமானது என்று உரிமை கோருகின்ற சீன அரசு தலாய் லாமாவின் இந்த விஜயத்தால் கொதிப்படைந்துள்ளது.

இமயமலைத் தொடரில் உயரமானதோர் மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒதுக்குப்புறமான புத்த மடம், இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962ல் சிறிது காலம் நடந்த யுத்தத்தின் ஒரு காரணமாகவும் இந்த எல்லைத் தகராறு அமைந்திருந்தது.

சீனாவின் நில ஒருமைப்பாட்டை குலைப்பதற்கான ஒரு முயற்சி இது என்று சீன அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. தலாய் லாமாவின் இந்தப் பயணம் இந்தியா சீனா இடையிலான உறவுகள் சேதப்பட காரணமாக அமையும் என்று கூறுகிறது.

ஆனால் தனது ஆன்மிக விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக உரையாற்றுவதற்காகவே தான் இங்கு சென்றிருப்பதாக தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். தனது பயணத்திற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்ற சீனாவின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

அருணாச்சல பிரதேசத்தில் அண்மையில் நடந்த தேர்தலுடைய பிரச்சார காலத்தில் இந்தியப் பிரதமர் அங்கே சென்றிருந்தபோதும் சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்தது என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.



--------------------------------------------------------------------------------


ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை வென்றது ஆஸ்திரேலியா


டக் போல்லிங்கர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஞாயிற்றுகிழமை குவஹாத்தில் நடைபெற்ற ஆறாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதன் மூலம் 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா 4 – 2 என்ற நிலையில் முன்ணணியில் இருக்கிறது, தொடரையும் வென்றுள்ளது.

7வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நவம்பர் 11 ஆம் தேதி அன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

Read more...

>> Saturday, November 7, 2009

மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைகளை அகற்ற இலங்கை அரசு புதிய செயல்திட்டம்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சாத்தியம் இருப்பதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை கையாள்வதில் இலங்கை அரசு தனது செயற்பாடுகளை மேம்படுத்த விரும்புவதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா அகியவற்றின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை இலங்கை அரசு கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன.

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்தபோதும் சரி, அது கடந்த மேமாதம் முடிவுக்கு வந்த பிறகும் சரி தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விமர்சனங்களை அந்நாட்டின் அரசாங்கம் கடுமையாக மறுத்தே வந்திருந்தது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு இலங்கைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் இலங்கைக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு காட்டிய இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர், இலங்கைக்குள் மனித உரிமை மீறல்கள் என்கிற பிரச்சினையே இல்லை என்று முன்னர் வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கத்துக்கு மாறாக அமைச்சர் சமரசிங்கவின் தற்போதைய கருத்து அமைந்துள்ளது.

மேம்படுத்தப்படவேண்டியவை என்று கருதப்படும் விடயங்கள் தொடர்பில் தாம் ஏற்கெனவே புலனாய்வு செய்து வருவதாகவும், அந்த விடயங்களை உள்ளடக்கிய தேசிய செயல்திட்டம் ஒன்று வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் விபரித்துள்ளார்.

சித்திரவதை, ஆட்கள் கடத்தல், சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆட்கொலைகள், பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு போன்ற பல விடயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த தேசிய செயல்திட்டத்தில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


மீளக் குடியமர்வதற்காக ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்


அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்வதற்காக ஆயிரம் பேர் இன்று அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பிரதேசங்களாகிய நாச்சிக்குடா, முழங்காவில், ஜெயபுரம் தெற்கு ஜெயபுரம் வடக்கு ஆகிய பகுதிகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு அறிவூட்டப்பட்டதன் பின்னர் இம்மக்கள் உடனடியாக அவர்களது சொந்தக் காணிகளுக்குச் சென்று குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றி வந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.



--------------------------------------------------------------------------------


இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்கியுள்ளது ஐ.நா.அகதிகள் நிறுவனம்


கண்ணிவெடி அகற்றும் இயந்திரம்
இலங்கையின் வடக்கே முன்னாள் யுத்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்துவதற்காக 5 புதிய இயந்திரங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஐ.நா. மன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் வழங்கும் புதிய இயந்திரங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என லண்டனிலுள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அயல் விவகார மூத்த அதிகாரி பீட்டர் க்ரெஸ்லர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதல்

பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் சகாய்ங் பிராந்தியத்தில் உள்ள நாகா பிரிவினைவாதிகளின் மையங்கள் மீது பர்மிய துருப்புக்கள் அதிரடித் தாக்குதலைத் துவக்கியிருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பிரிவினைவாதிகளைப் பிடிக்க, பர்மாவில் நாகா பிரிவினைவாதிகளின் மையத்து்ககு எதிர்பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மனியக்ஸா கிராமத்துக்கு எதிரே, என்.எஸ்.சி.என். எனப்படும் தேசிய நாகலாந்து சோஷலிஸ கவுன்சிலின் கப்லாங் பிரிவின் இரண்டாவது பட்டாலியனுக்கான தலைமையகம் அமைந்துள்ளது.

அந்த முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையில், பர்மியத் துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அதுபற்றி பர்மிய ராணுவ அதிகாரிகளோ ராஜாங்க அதிகாரிகளோ எந்தத் தகவல்களையும் தர விரும்பவில்லை.

ஆனால் நாகா முகாம்கள் மீது பர்மியத் துருப்புக்கள் தாக்குதல் நடத்துவதைக் காணமுடிந்ததாக மனியக்ஸா கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

Read more...

>> Thursday, November 5, 2009

ஜனாதிபதி ராஜபக்ஷ வன்னி விஜயம்



இலங்கை அரச படைகளினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப்பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமரச் சென்றுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.

அவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், கஸ்டமான காலம் முடிவடைந்து புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்காகப் பாடுபடும் அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் இந்த வன்னி விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


'சரத் பொன்சேகா அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டார்'


சரத் பொன்சேகா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல் இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினாலோ வேறு அரச நிறுவனத்தினாலோ அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விபரம் வழங்குவதற்காக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டிருந்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன.

தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கேள்விகள் கேட்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.



--------------------------------------------------------------------------------


இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்


வகுப்பறையில் சிலுவை
இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Read more...

சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

>> Tuesday, November 3, 2009

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ''ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்'' என்று கூறினார்.

இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், '' நான் அப்படி நினைக்கவில்லை'' என்று பதிலளித்தார்.



--------------------------------------------------------------------------------
தமிழக அகதி முகாம்களை மேம்படுத்த மாநில அரசு முடிவு

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்துவதென தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இம்முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாததன் காரணமாக அகதிகள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானதன் பின்னணியில், முகாம்களின் நிலை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அவசரக் கூட்டமொன்றை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார்.

அதேவேளை, ஏற்கனவே செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகளுக்காக அகதிகள் நன்றிக்கடன்பட்டவர்களென்று தெரிவித்த ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக நிறுவனர் சா.செ.சந்திரஹாசன், சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை வழங்குவது என்ற ஆலோசனை குறித்து தம் மக்களிடம் பேசிவருவதாகவும், அவர்களுடனான கலந்தாய்விற்கு பிறகே தங்களால் இறுதி முடிவு எதுவும் எடுக்கமுடியும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------
கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு விபத்து: 23 பேரைக் காணவில்லை

இந்து மகா சமுத்திரத்தின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் என்று நம்பப்படும், 17 பேர் அந்த வழியே திரவ வாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய பிராந்தியத்தைச் சேர்ந்த கொக்கோஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கும், இலஙங்கைக்கும் இடையே இருக்கின்றன.

உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான பணியில் ஆஸ்திரேலிய றோயல் ஃபிளயிங் டாக்டர் சேவையின் ஜெட் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தப் பிராந்தியத்தில் தற்போது வழமையாகிவருவதாக இந்த ஃபிளயிங் டாக்டர் சேவையைச் சேர்ந்த ஸ்டீபன் லாங் ஃபோர்ட் கூறியுள்ளார்.

எவரும் இலகுவில் செல்லாத இந்து மகா சமுத்திரத்தின் அந்தப் பகுதியில், இந்த சிறிய படகு மூழ்கத்தொடங்கிய போது இருளத்தொடங்கிவிட்டது.

அந்தப் படகில் வந்தவர்கள் பெரும்பாலும் அகதிகளாக தஞ்சம் கோரிச்சென்றவர்களாக இருக்கக் கூடும்.

சுமார் 17 பேர் வரை தாய்வான் நாட்டுக் கப்பலால் மீட்கப்பட்டாலும் ஏனைய பலரை இன்னமும் காணவில்லை.

தாம் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 30 படகுகளில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter