>> Tuesday, August 31, 2010


தர்மபுரி பஸ் எரிப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு



தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பில் அ இ அ தி மு க கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கான மரண தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

2000ஆம் ஆண்டு தர்மபுரியில் அ தி மு க வினர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது தீ வைக்கப்பட்ட ஒரு பேருந்தில் மூன்று கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானது இந்த வழக்கு.

கீழ் நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை 2007 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.சௌஹான் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பை மேன்முறையீட்டில் உறுதி செய்திசெய்துள்ளது.

இந்த வழக்கில் வேறு இருபத்து ஐந்து பேருக்கு 2 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கியிருந்த இச்சம்பவத்தில் கோயமுத்தூரில் உள்ள தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது ஒரு வழக்கில் குற்றத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அக்கட்சித் தொண்டர்கள் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது, 45 மாணவ மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள் சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்து ஆர்பாட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டிருந்தது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter