>> Monday, August 23, 2010


ஜூலியா கில்லார்ட்
ஆட்சியமைக்கும் முயற்சியில் பிரதமர் ஜூலியா
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து தொழிற்கட்சி வேட்பாளர் கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொழிற்கட்சியோ அல்லது அதனை எதிர்த்து போட்டியிட்ட லிபரல் தேசியவாத கூட்டுக்கட்சியோ ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெற்றுகொள்ள தவறியுள்ளன.

ஆட்சியமைக்க 76 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், தொழிற்கட்சி 72 ஆசனங்களையும் லிபரல் தேசியவாதக் கூட்டுக்கட்சி 73 ஆசனங்களையும் கைப்பற்றும் என அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி எதிர்வு கூறியுள்ளது.

இதுவரை எண்ணப்பட்டுள்ள 78 வீதமான வாக்குகளின்படி, தொழிற்கட்சி ஏற்கனவே 72 ஆசனங்களையும் லிபரல் கூட்டுக்கட்சி 70 ஆசனங்களையும் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

இந்த பின்னணியில், நிலையான அரசாங்கமொன்றை அமைக்கவே எதிர்பார்ப்பதாக தொழிற்கட்சி வேட்பாளர் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார்.

ஆனால் தொழிற்கட்சி ஆட்சிக்கான தகுதியை இழந்துவிட்டதாக லிபரல் கட்சித் தலைவர் ட்டோனி அப்போர்ட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து வெளியேற்றிய பின்னர் திடீர் தேர்தலொன்றுக்கு அறிவிப்பு விடுத்தமையே ஜூலியா கில்லார்ட்டை கடுமையாக பாதித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter