>> Saturday, December 21, 2013

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள்': ஜனாதிபதி மகிந்த



'வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திலும் ஜனநாயகத்திலும் முக்கிய தருணத்தில் இந்த வரவுசெலவுத் திட்டம் வந்துள்ளது'
இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக, வெளிநாடுகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2014-ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார்.
வரவுசெலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 155 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் 60 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.
'மாகாணசபை நிர்வாகம் இல்லாதிருந்த வடக்கு மாகாணத்திலும் மாகாணசபை ஒன்றை நிறுவி, பொருளாதார அபிவிருத்தியிலும் ஜனநாயகத்திலும் எமது நாடு முக்கிய தருணத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் இந்த வரவுசெலவுத் திட்ட விவாதம் நடக்கிறது' என்றார் மகிந்த ராஜபக்ஷ.

தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு

ஆளுங்கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான இனப்பிரச்சனை தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன
வடக்கு மாகாணசபையில் அரச சேவைகளை பலப்படுத்தவும் மும்மொழி செயற்திட்டத்தை விரிவுபடுத்தவும் வீட்டு வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
'நான் தலைவர் ஆர். சம்பந்தனிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையிடமும் நல்லிணக்கத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் எமது நாட்டுக்கே உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்' என்றார் இலங்கை ஜனாதிபதி.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் நடந்துவந்த இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன.
இடையில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்துவருகிறது.
ஆனால், அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுத்திட்டம் கிடைக்கவாய்ப்பில்லை என்று கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் இடம்பெற மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Thursday, December 19, 2013

Read more...

தேவயானி கைது --- மன்மோஹன் சிங் கண்டனம்


தேவயானி கைதுக்கெதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள்
நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கண்டனம் செய்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சரியானது இல்லை என்றும் ஏற்புக்கு உரியது இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது நேரடியான பதிலை அளிக்க மறுத்துவிட்டார். அவ்வாறு தேவயாணி நியமிக்கப் பட்டிருந்தால் ஐ.நா.விடம் அங்கீகார பதிவு செய்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் அவருக்கு ராஜதந்திர விதிவிலக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.இதனிடையே, தேவயானி கோபர்கடேயை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் தூதரகத்தில் பிரதிநிதியாக நியமித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் எதிரொலி

நாடாளுமன்றத்தில் தேவயானி விவகாரம் எதிரொலி

என்.ரவி பேட்டி


இதனிடையே,தேவயானி கைது விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
மாநிலங்களவையில் இவ்விவகாரத்தால் ஏற்பட்ட கூச்சலால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மாநிலங்களவையில் இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்திய அரசின் குரல் அமெரிக்காவில் ஒலித்திருக்கும் என நம்புவதாக கூறியதோடு, நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்ப்பார்கவில்லை என்றார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெயிட்லி பேசுகையில் வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில் இந்தியா மென்மையாக நடந்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.
திமுக உறுப்பினர் கனிமொழி பேசுகையில் ஒரு இந்திய பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடுரம் வருத்ததிற்கு உரியது என்றும், வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலத்தை இந்தியா எட்டியுள்ளதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி தேவயானி
இந்நிலையில் இந்திய பெண் அதிகாரி தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதாலயே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் மத்திய அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறி விட்டதாக தெரிவத்தார்.

புகார் கொடுத்தவரின் கணவர் அமெரிக்கா சென்றார்

இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக் காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை செய்ததன் மூலம்,இந்தக் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகக் கருதுவதாகவும இந்திய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'அமெரிக்கா திட்டமிட்டு செய்திருக்கிறது'

இந்திய ராஜிய அலுவலர்கள் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய,பணியாளர்களை அமர்த்திக்கொள்ள இந்திய அரசு ஒரு தொகையை அவர்களது சம்பளத்திலேயே சேர்த்து தருகிறது என்றும், அதிலிருந்துதான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என்.ரவி கூறினார்.
பணிபெண்கள் ஊதியம் உள்நாட்டு சட்டங்கள்பாற்பட்டே அமைந்திருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு தரப்படும் ரொக்க சம்பளம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர்களுக்கு வழங்கப்படும், இலவச வீட்டுவசதி, இலவச உணவு, மின்சாரம், தண்ணீர் செலவு போன்றவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் பொதுவாக சுமுகமாக இருக்கும் இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு தற்காலிக விரிசலை ஏற்படுத்தும் என்றும், ஆனால் போகப்போக இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார். ஆனாலும், இந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயத்தின் வடு அழியாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா இந்த சம்பவத்தில் , புகார் கொடுத்த பெண்ணின் கணவருக்கு விசா வழங்கி, அவர் டிசம்பர் 10ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரே, டிசம்பர் 11ம்தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, அமெரிக்கா இதைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது என்றார் ரவி.

Read more...

தேவயானி கைது சர்ச்சை : ஜான் கெர்ரி வருத்தம்

தேவயானி சர்ச்சை
நியுயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட சர்ச்சையில், அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனுடன் புதன்கிழமை தொலைபேசியில் பேசிய அவர், இந்த "துரதிருஷ்டவசமான சம்பவம், இந்திய அமெரிக்க உறவுகளைப் பாதிக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.

"தேவயானி கண்ணியமாகவே நடத்தப்பட்டார்" --அமெரிக்க அரச வழக்கறிஞர்
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ராஜீய அலுவலர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க ராஜிய அலுவலர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் அதே மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படவேண்டும் என்பதே ஜான் கெர்ரியின் எதிர்பார்ப்பு என்று , அமெரிக்க வெளியுறவுச் செயலகப் பேச்சாளர் மேரி ஹார்ப் கூறினார்.
தேவயானியைக் கைது செய்ய உத்தரவிட்ட ப்ரீத் பராரா
இதனிடையே, தேவயானி கோபர்கடேயைக் கைது செய்ய உத்தரவிட்ட , அமெரிக்க நீதித்துறை அரச வழக்கறிஞர், ப்ரீத் பராரா விடுத்த ஒரு அறிக்கையில், கைது செய்யப்படும் அமெரிக்கப் பிரஜைகள் நடத்தப்படுவதை விட அதிகமான மரியாதைகள் தேவயானிக்கு தரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
" தேவயானி ஒரு பெண் காவலரால், தனி அறையில் சோதனையிடப்பட்டார், ஆனால் இது எல்லாக் குற்றம் சாட்டப்பவர்களுக்கும் செய்யப்படும் அதே முறைதான் , அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி" என்றார் ப்ரீத் பராரா.
ஒரு இந்தியர் நடத்தப்பட்ட விதம் என்று கூறப்படும் இது குறித்து எழுந்திருக்கும் கோபாவேசம் மற்றொரு இந்தியரும், ( பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ்) அவரது கணவரும் நடத்தப்பட்ட விதம்
குறித்து எழவில்லை என்பது வியப்பாக இருக்கிறது என்றும் ப்ரீத் பராரா குறிப்பிட்டார்.
இதனிடையே, தேவயானிக்கு இருக்கும் ராஜிய பாதுகாப்பை மேலும் அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் பிரதிநிதியாக நியமித்தது.
ஆனால் இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த ஒரு வேண்டுகோளும் இது வரை வரவில்லை என்று அமைச்சகப் பேச்சாளர் மேரி ஹார்ப் கூறினார்.

Read more...

rpe;jid rpw;gpfs;
நடத்தும் குறுங்கவிதை போட்டி 
கவிதை அனுப்ப வேண்டிய முகவரி 
விசயமங்கலம் குணசீலன் 
விசயமங்கலம் 638056 ஈரோடு மாவட்டம் கடைசி நாள் 30.12.2013
மின் அஞ்சல்

pgunalib@gmail.com 


Read more...

>> Wednesday, December 18, 2013

dd

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter