>> Wednesday, August 25, 2010


தொங்காரியா பழங்குடியினப் பெண்
மாபெரும் சுரங்கத் திட்டம் நிராகரிப்பு
பிரிட்டனின் வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் அலுமினியத்தின் தாதுப் பொருளான பாக்சைட்டை தோண்டுவதற்கான அனுமதியை வழங்க இந்தியாவின் சுற்றுச் சூழல் அமைச்சு மறுத்துள்ளது.

இந்த நிறுவனம் சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ள நியமகிரி மலைப் பகுதிகளில் வாழும் இரு ஆதிவாசி குழுக்கள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே பரிந்துறைத்திருந்தது.

இந்த பகுதியில் வாழும் தொங்காரிய இன மக்கள் இந்த மலையை தமது கடவுளாகவே போற்றி வணங்கி வருகின்றனர்.

இதே நிறுவனம் ஒரிசாவில் மேற்கொள்ளும் வேறு சில திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டுவருவதாக சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இந்தத் திட்டங்களில் சுற்றுச் சூழல் விதிகள் மீறப்பட்டமை தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மலைகளில் சுரங்கம் தோண்டப்படக் கூடாது என்று தொடர்ந்து போராடி வந்த சுற்றுச் சூழல் அமைப்புக்கள் அரசின் தற்போதைய முடிவை வரவேற்றுள்ளன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter