>> Monday, August 30, 2010



குகைக் கரடிகள் அழிய மனிதனே காரணமானான்



உறை யுகத்து குகைக்கரடி-கற்பனை ஓவியம்
குகைக் கரடிகள் அழிந்து போனமைக்கு மனிதன் தான் காரணம் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உணவுக்காக அல்லாமல் கரடிகளின் வசிப்பிடமான குகைகளை ஆதி மனிதன் அபகரித்ததை தொடர்ந்து அந்தக் கரடிகள் மறைந்து விட்டதாக ஜெர்மனியில் இருக்கின்ற மேக்ஸ் பிளான்க் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டதட்ட 500 கிலோ எடையுடன் இருந்த இந்த குகை கரடிகள் 25000 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டன. இதற்கு காரணம் ஆதி மனிதன் என இப்போது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மனிதனின் ஜனத்தொகை பெருக பெருக, கரடிகள் அழியும் எண்ணிக்கையும் அதிகரித்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


ஐரோப்பிய குகைகளில் காணப்பட்ட உறையுக கரடியின் மண்டையோடு
ஐரோப்பிய குகைகளில் காணப்பட்ட உறையுக கரடியின் மண்டையோடு
கரடிகளின் இடத்தை மனிதன் அத்துமீறி ஆக்கிரமிக்க ஆரம்பித்ததை தொடர்ந்து வசிக்க இடம் இல்லாமல் தவித்து போன கரடிகள் இறந்து விட்டன.

ஐரோப்பாவில் உள்ள பல குகைகளில் உறையுகத்து கரடிகளின் எலும்புகள் கிடைத்துள்ளன.

மனிதன் மட்டுமன்றி காலநிலை மாற்றங்களால் கரடிகளுக்கு சரியான உணவு பொருட்கள் கிடைக்காமல் போனதாலும் அவை மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

எனினும் குகைகளில் வாழ்ந்த கரடிகளை விரட்டி விட்டு அங்கே குடியமர்ந்து கொண்ட மனிதனால் தான் கரடிகளின் மறைவு உறுதியானதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter