>> Monday, May 24, 2010


வன்னியில் மக்களைச் சந்திக்கும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முகாம் செல்ல த.தே.கூ.வுக்கு அனுமதி மறுப்பு





இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வவுனியா முகாம்களைப் பார்வையிட அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
வவுனியா முகாம்கள் பகுதிக்கு சனிக்கிழமை காலை சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முகாம்களுக்குள் நுழைந்து அங்கு தங்கியுள்ள மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தமிழோசையிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை முகாம்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலரிடம் இருந்து தமக்கு அறிவுறுத்தல் வந்துள்ளதாகத் தெரிவித்து முகாம்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தாங்கள் முகாம்களைப் பார்வையிடுவதைத் தடுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே வவுனியா முகாம்களைப் பார்வையிடுவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன், தாங்கள் வவுனியா செல்வதில் எவ்விதப் பிரச்சினையும் இருக்காது என லலித் வீரதுங்க தங்களிடம் வாய்மொழியாக உறுதியளித்திருந்ததாகத் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாகிய தாங்கள் இடம்பெயர்ந்த மக்களைச் சந்திக்க அரசாங்கம் அனுமதி மறுப்பது சரியல்ல என்று அவர் விமர்சித்தார்.

அரசாங்கம் விளக்கம்

முகாம்களுக்கு செல்வது தொடர்பில் ஏற்கனவே ஒரு நடைமுறை இருப்பதாகவும், அதை பின்பற்றி யார் வேண்டுமானாலும் முகாமுக்கு செல்லலாம் என்றும் ஊடக அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல தமிழோசையிடம் தெரிவித்தார்.

முகாம்களுக்குப் போகும் முன் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றியிருக்க மாட்டார்கள் என்று தான் கருதுவதாகக் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று செல்வார்கள் என்று அனுமானத்தின் அடிப்படையில்தான், "அங்கு சென்றால் பிரச்சனை இருக்காது" என்று ஜானாதிபதியின் செயலர் கூறியிருக்காலம் என்றும் கெஹ்லியா தெரிவித்தார்.

Read more...

>> Friday, May 21, 2010


சர்ச்சைகுரிய பாபர் மசூதி

பாபர் மசூதி-முக்கிய தீர்ப்பு



பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளிக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது தொடர்பாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 21 பேர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது.

பாரதீய ஜனதா உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புக்களைச் சேர்ந்த கரசேவகர்கள் கூடியிருந்த நேரத்தில், பாபர் மசூதியை இடிக்க அவர்களைத் தூண்டினார்கள் என்பது உள்பட அந்தத் தலைவர்கள் மீது சிபிஐ எனப்படு்ம மத்திய புலனாய்வுத்துறை பல வழக்குகளைத் தொடர்ந்தது.

ஆனால், அவர்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, சிபிஐ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு மீது, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு வழங்கியது.

குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

சிறப்பு நீதிமன்றம் பின்பற்றிய சட்ட நடைமுறைகள் உள்பட எந்த அம்சத்தின் மீதும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிபதி அலோக் குமார் தெரிவித்தார்.

விசாரணை முறைகள் தொடர்பாக எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், 2001-ம் ஆண்டு மே 4-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிடுவதற்கு உயர்நீதிமன்றத்துக்கு எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல், சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

Read more...


இலங்கை இராணுவத்தினர்

முறிகண்டியில் இராணுவ முகாம்?



இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக இலங்கை அரசின் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதியில் "அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் இதுவரை சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில், இராணுவத்துக்கு காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"முகாம்களுக்கே காணிகள்"

முறிகண்டிப் பகுதியில் இராணுவ முகாம்கள் அமைபப்தற்காகவே இந்தக் காணிகள் எடுக்கப்படுகின்ற என்று தனக்கு வந்த தகவல்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.


தனியார் காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது


அமைச்சர் முரளிதரன்

இந்த விடயம் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கூறும் துணை அமைச்சர், எதிர் வரும் திங்கட்கிழமை தானும் மூத்த அமைச்சரான மில்ராய் ஃபெர்ணாண்டோவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

"அபிவிருத்திகளுக்காக தனியார் காணிகளை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது" என்றாலும், இராணுவத் தேவைகளுக்காக அவ்வாறு எடுப்பது ஏற்றுக் கொள்ள் முடியாதது என்றும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

அரசின் இப்படியான நடவடிக்கைகளுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

Read more...


ஜெனரல் சரத் ஃபொன்சேகா

"போர் குற்றங்கள் இல்லை"- ஃபொன்சேகா


ஜெனரல் சரத் ஃபொன்சேகா
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது அரச தரப்பு போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகா மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

அரச தரப்பில் போர் குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்பதை தான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரை தானே திட்டமிட்டு, நடத்தி, மேற்பார்வை செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

புலிகளுடனான போரை தாங்கள் எப்படி நடத்தினோம் என்பது குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கினார் ஜெனரல் சரத் ஃபொன்சேகா.

வழக்கமான பாணியில் இல்லாமல், மாறுபட்ட வகையில் இந்தப் போர் நடத்தப்பட்டதாகக் கூறும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா, போரின் முழுக்கட்டுபாடும் தன்னிடம் இருந்ததாகவும், கட்டளைளை நேரடியாக தானே பிறப்பித்ததாகவும் மேலும் தெரிவிக்கிறார்.

அப்படியான சூழலில் போர் குற்றங்கள் ஏதும் இடம் பெற்றதாக தான் அறியவில்லை என்றும் வலியுறுத்துகிறார். எனினும் அப்படியாக ஏதாவது தனது பார்வைக்கு வந்தால் அதன் தான் மறைக்கவோ அல்லது மறுக்கவோ மாட்டேன் என்றும் குறிப்பிடுகிறார்.

பல குற்றசாட்டுகள் "பொத்தாம் பொதுவானவை"

அண்மையில் இண்டனர் நேஷணல் கிரைஸஸ் குரூப், சில குறிப்பிட்ட சம்பவங்களில் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுகே நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று கூறியுள்ளதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

போர் இடம் பெற்ற காலத்திலும் இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்தன என்றும், இது போன்றவை எல்லாம் "வெறும் அறிக்கைகளாகவும், கருத்துக்களாகவுமே இருக்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.


போர் குற்றங்கள் போன்ற ஒரு செயலை சகித்துக் கொள்ளவும் மாட்டேன், ஆதரிக்கவும் மாட்டேன்




அரச படைகள் பொதுமக்களை தாக்கும் நோக்கிலோ, அல்லது கொல்லும் நோக்கிலோ ஷெல் வீச்சுக்கள் எதையும் நடத்தவில்லை என்பதை தன்னால் திட்டவிட்டமாக கூறமுடியும் எனவும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி செய்தியாளர்களிடம் கூறினார்.

இலங்கை இராணுவமே மூன்று லட்சம் பொதுமக்களை காப்பாற்றியது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும் ஏதாவது குறிப்பிட்ட சம்பவம் சுட்டிக்காட்டப்படுமானால் அது குறித்து விசாரிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் ஜெனரல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read more...

>> Thursday, May 20, 2010



இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று அரசால் சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை இன்னமும் இழுபறியாகவே உள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக அரசை எதிர்த்து போராடிய "விடுதலைப் புலிகள் சரணடைவதை விட சாவது மேல் என்பதை தங்களின் முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தனர்".

எனினும் போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான விடுதலைப் புலிகள் அரச படையினரிடம் சரணடைந்தனர்.

மக்களோடு கலந்து அகதிகள் முகாம்களுக்கு வந்த விடுதலைப் புலிகள் பலரும் அரசால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு மிக்க இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு மிக்க முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு செல்ல சர்வதேச நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.


விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்
இப்படியாக அரசின் தடுப்பில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் வந்து சந்திக்க அரசு அனுமதியளித்துள்ள போதிலும், தம்மை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை ஏற்படக் கூடும் என்கிற கருத்தும் சிலரிடம் இருகின்றது.

ஆனால் அப்படியான தொல்லைகள் ஏதும் உறவினர்களுக்கு ஏற்படாது என்று மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகளோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் பலர் தற்போது அகதிகள் முகாம்களிலும் மீள் குடியேற்றம் நடைபெறும் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் இருப்போரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குவாண்டனமோ வளைகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறையில் நடந்தது போன்ற வன்கொடுமைகள் இங்கு நடப்பதாகவும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் இவை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த விடயத்தில் அரசு ஒளிவுமறைவற்ற தன்மையைப் பேணவில்லை என்று குற்றம்சாட்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவர்கள் முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறது.

Read more...


போர் முடிந்து ஓராண்டாகியும் மக்கள் முகாம்களில் உள்ளனர்

போர் முடிந்தும் இனஉறவுகள் மேம்படவில்லை

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், அங்கு அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.





இந்நிலையில் பல ஆண்டுகளாக சமூகங்களுக்கு இடையே சீர்குலைந்து போயிருந்த இன உறவுகளை சீரமைக்கின்ற பணி இன்னும் இலங்கையில் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்று ஆய்வாளரும் இலங்கை விடயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவருமான டி பி எஸ் ஜெயராஜ் கூறுகிறார்.


டி பி எஸ் ஜெயராஜ் பேட்டி

போர் ஏற்படுத்திய பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் கூட இன்னமும் திருப்தியளிக்கும் வகையில் செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இன உறவுகளை சீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

நாட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்கிற பாகுபாடு இனி இல்லை என்று ஜனாதிபதி கூறுவது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள அடிப்படை இனப்பிரச்சினையின் முரண்பாடுகளையும் அதன் மூலக்கூறுகளையும் புரிந்து கொள்ளாமல் ஒரு மேலோட்டமான பார்வையே அரசு தரப்பில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது என்றும் ஜெயராஜ் கருத்து வெளியிடுகிறார்.

அபிவிருத்திகள் மூலம் இனப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்கிற கருத்து அரசிடம் இருப்பது போலத் தோன்றுகிறது என்றும் கூறும் அவர், இனப்பிரச்சினை என்பது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை என்றும் அது தற்போது முடிந்து விட்டது என்கிற கருத்தும் ஆளும் தரப்பில் நிலவுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

“அடிப்படை பிரச்சினை அரசியல் பிரச்சினை இரண்டுமே முக்கியம்தான்” என்று கூறும் ஆய்வாளர் ஜெயராஜ், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களையும் பிணியையும் தீர்ப்பதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

மீள்குடியேற்றம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததும், திருப்தியளிக்கும் வகையிலும் இல்லாததும் இதற்கு உதாரணம் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.


இனப்பிரச்சினை தொடர்பில் அரசு வைத்திருக்கும் கண்ணோட்டம், சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் வைத்திருக்கும் கண்ணோட்டத்துக்கு முரணாகத்தான் இருக்கிறது




இலங்கையில் ஒற்றையாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே என்ற வலுவான கருத்தில் அரச தரப்பும், சமஷ்டி மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விட்டுவிட்டு புதிய அணுகுமுறை வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் உறுதியாக இருக்கும் நிலையில், இரண்டுக்கும் இடையே இருதரப்பையும் மீண்டும் சந்திக்க வைத்து ஒரு பொது நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கு ஒரு புறசக்தி தேவைப்படுகிறது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

அந்தப் புறசக்தியின் ஈடுபாடு ஏற்படுகிற வரையில் அரசியல் தீர்வு விடயத்தில் இழுபறி நிலைமையே தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.

Read more...



"இழுபறியில்" முன்னாள் போராளிகள் /விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்


போர் காலத்தில் விடுதலைப் புலிகள்
இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று அரசால் சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை இன்னமும் இழுபறியாகவே உள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக அரசை எதிர்த்து போராடிய "விடுதலைப் புலிகள் சரணடைவதை விட சாவது மேல் என்பதை தங்களின் முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தனர்".

எனினும் போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான விடுதலைப் புலிகள் அரச படையினரிடம் சரணடைந்தனர்.

மக்களோடு கலந்து அகதிகள் முகாம்களுக்கு வந்த விடுதலைப் புலிகள் பலரும் அரசால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு மிக்க இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு மிக்க முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு செல்ல சர்வதேச நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.



இப்படியாக அரசின் தடுப்பில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் வந்து சந்திக்க அரசு அனுமதியளித்துள்ள போதிலும், தம்மை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை ஏற்படக் கூடும் என்கிற கருத்தும் சிலரிடம் இருகின்றது.

ஆனால் அப்படியான தொல்லைகள் ஏதும் உறவினர்களுக்கு ஏற்படாது என்று மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகளோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் பலர் தற்போது அகதிகள் முகாம்களிலும் மீள் குடியேற்றம் நடைபெறும் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் இருப்போரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குவாண்டனமோ வளைகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறையில் நடந்தது போன்ற வன்கொடுமைகள் இங்கு நடப்பதாகவும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் இவை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த விடயத்தில் அரசு ஒளிவுமறைவற்ற தன்மையைப் பேணவில்லை என்று குற்றம்சாட்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவர்கள் முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறது.





"இழுபறியில்" முன்னாள் போராளிகள்


போர் காலத்தில் விடுதலைப் புலிகள்
இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று அரசால் சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை இன்னமும் இழுபறியாகவே உள்ளது.
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக அரசை எதிர்த்து போராடிய "விடுதலைப் புலிகள் சரணடைவதை விட சாவது மேல் என்பதை தங்களின் முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தனர்".

எனினும் போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான விடுதலைப் புலிகள் அரச படையினரிடம் சரணடைந்தனர்.

மக்களோடு கலந்து அகதிகள் முகாம்களுக்கு வந்த விடுதலைப் புலிகள் பலரும் அரசால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு மிக்க இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு மிக்க முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு செல்ல சர்வதேச நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.


விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்
இப்படியாக அரசின் தடுப்பில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் வந்து சந்திக்க அரசு அனுமதியளித்துள்ள போதிலும், தம்மை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை ஏற்படக் கூடும் என்கிற கருத்தும் சிலரிடம் இருகின்றது.

ஆனால் அப்படியான தொல்லைகள் ஏதும் உறவினர்களுக்கு ஏற்படாது என்று மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகளோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் பலர் தற்போது அகதிகள் முகாம்களிலும் மீள் குடியேற்றம் நடைபெறும் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் இருப்போரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குவாண்டனமோ வளைகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறையில் நடந்தது போன்ற வன்கொடுமைகள் இங்கு நடப்பதாகவும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் இவை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த விடயத்தில் அரசு ஒளிவுமறைவற்ற தன்மையைப் பேணவில்லை என்று குற்றம்சாட்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவர்கள் முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறது.

Read more...


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சின்னம்


முகாம்களுக்கு செல்ல வேண்டும்-ஐசிஆர்சி



இலங்கையில் தாம் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டிய தேவை இன்னமும் உள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் நலன்புரி நிலையங்களுக்கும், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடங்களுக்கும் சென்றுவர தங்களுக்கு அனுமதி வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் கெல்லன்பர்கர் கோரியுள்ளார்

இந்த இரண்டு கோரிக்கைகளுமே "அங்குள்ள மக்களின் பாதுகாப்பை கருதியே" என்றும் அவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளுடனான போர் உக்கிரமாக நடைபெற்று வந்த இறுதி நேரத்திலும் அதற்கு பிறகும் சில சதுரகிலோமீட்டர் பரப்பளவே கொண்ட குறுகிய நிலப்பரப்பில் இருந்து பணியாற்றிய ஒரே நிறுவனம் தமது அமைப்புதான் என்பதனையும் ஜேக்கப் கெல்லன்பர்கர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையைப் பொறுத்த வரையில், அங்கு தாங்கள் மேலும் பணியாற்ற வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார்.

அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3000 மக்களை தொடர்ந்து தமது அமைப்பு சென்று பார்வையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...


லண்டனிலுள்ள இலங்கையின் துணைத்தூதர் அம்சா

இலங்கையின் மீது போர் குற்றச்சாட்டு


விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது அரச படையினர் போர் குற்றங்களை புரிந்ததாக சானல் 4 தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம்,இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி மாதங்களில், ராணுவத்தினர், சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களையும் சுட்டுக்கொல்லுமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு உத்தரவு வந்தது என்று பெயர் குறிப்பிடப்படாத ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி, பரபரப்பை ஏற்படுத்தியது.

சானல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மேற்கோள் காட்டப்பட்ட இந்த ராணுவ அதிகாரியின் உண்மையான குரல் ஒலிபரப்பப்பபடவில்லை, அவரது உருவமும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் அவரது குரலுக்கு பதிலாக வேறு ஒரு குரல் ஒலிக்கவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறும் இந்த ராணுவ அதிகாரி, தங்களுக்கு போரின் இறுதிக்கட்டங்களில், சரணடையும் எந்த ஒரு புலிகள் இயக்க பிரமுகர்கள் அல்லது உறுப்பினர்களை வைத்துக்கொள்வது பிரச்சனையாக இருக்கும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்றுவிடுமாறு கட்டளைகள் இருந்ததாகக் கூறினார்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரனின் இளைய மகன், 13 வயது பாலச்சந்திரன், அவரது மெய்க்காப்பாளர்களுடன் இலங்கை படைகளிடம் சரணடைந்தபோது, அவரது தந்தை எங்கே என்று விசாரிக்கப்பட்ட பின்னர், சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் இந்த ராணுவ அதிகாரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கடந்த ஆண்டு போரின் இறுதிக்கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலவும் ஒளிபரப்பப்பட்டன. இந்த புகைப்படங்களில் பொதுமக்கள் குண்டுத்தாக்குதலில் சிக்கி துன்புறுவது, கொல்லப்படுவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றன.

இந்த சானல் 4 தொலைக்காட்சிதான், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில். நிர்வாணப்படுத்தப்பட்ட, நிராயுதபாணியான நபர்கள் சிலர், பின்னால் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்தினர் போல் தோன்றும் சீருடை அணிந்த படையினரால் துப்பாக்கியால் நெருக்கமான தூரத்தில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது.

ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் பெற்று வசிக்கும் பத்திரிகையாளர்கள் அமைப்பால் விநியோகிக்கப்பட்ட இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை இலங்கை அரசு போலியான ஒன்று என்று மறுத்தாலும், ஐ.நா மன்ற சிறப்பு தூதர் பிலிப் ஆல்ஸ்டனால் இது உண்மையான வீடியோதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை



சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர்தான, இந்தக் குற்றச்சாட்டு குறித்து லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திடம் கருத்து கேட்டது என்று துணைத் தூதர் அம்சா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த ஒளிநாடாவை தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொண்டிருந்தால், அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்து கருத்து கூறியிருக்க முடியும் என்றும், ஆனால் அப்படியான அவகாசம் தங்களுக்கு வழங்கப்ப்பட்வில்லை என்பதை அம்சா சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், போர் காலத்தின் இறுதி நாட்களின் விடுதலைப் புலிகளால் தமிழ் பொது மக்கள் மனிதக் கேடையங்களாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய துணைத்தூதர் அம்சா, அவர்களிடமிருந்து மக்களிடமிருந்து விடுவிக்கவே அரச படைகள் மனித நேயப் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறினார்.

எனினும் இது போன்ற குற்றசசாட்டுக்களையும் விசாரிக்கவே ஜனாதிபதியால் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

>> Wednesday, May 19, 2010


ஒராண்டு முடிந்தும் "உதிக்காத வசந்தம்"


உதவி கிடைக்காமல் உள்ள உடல் ஊனமுற்றோர்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள்.
வைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன.

யுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

போரின்போது அவயவங்களை இழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்த விபரங்களைத் திரட்டுவதற்குத் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

உடலால் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்கள், உறவினர்களது வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும், அரச மற்றும் தொண்டு நிறுவன புனர்வாழ்வு நிலையங்களிலும், மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களிலும் பரந்து வாழ்வதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

உடல் உறுப்புக்களை இழந்துள்ளவர்கள் தமது வாழ்க்கையைத் தொடர்வதற்கு வசதியாக அவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தலும், உளசமூக, பொருளாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக உளவளத்துணையாரான பி.ஏ.சி. ஆனந்தராஜா கூறுகின்றார்.

இதற்கு அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.

Read more...

>> Tuesday, May 18, 2010


கிரிக்கெட்டில் அரசியல்?


ஜெயசூரியா அணியில் நீடிப்பதில் அரசியல் அழுத்தம் தரப்படுவதை அணித் தலைவர் சங்ககார எதிர்ப்பதாக கூறப்படுகிறது
இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் சனத் ஜெயசூரியா தொடர்ந்து விளையாடி வருவது அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் நடந்துவரும் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி அரை இறுதி ஆட்டத்தில் தோற்றுள்ள நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா மாபெரும் நட்சத்திர அந்தஸ்துடன் விளையாடிவந்தவர் என்றாலும், அவர் சிறப்பாக விளையாடிய காலம் முடிந்துவிட்டது, ஆனால் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் அணியில் நீடிக்கிறார் என்று பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.

நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தேசிய அணியில் இடம்பெற்று சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது இதற்கு முன் உலகில் நடந்ததில்லை.

இலங்கை ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகப் அண்மையத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனத் ஜெயசூரியா கிட்டத்தட்ட 41 வயது ஆகியும் தனது விளையாட்டு வாழ்க்கையை நீடித்துக்கொண்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்துவருகின்ற இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி அரையிறுதி வரை வந்திருந்தது.

ஆனால் ஜெயசூரியாவோ ஆடிய ஆறு ஆட்டங்களில் மொத்தமாகவே பதினைந்து ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதுவும் இலங்கை கடைசியாக விளையாடிய நான்கு ஆட்டங்களில் அவர்தான் துவக்க ஆட்டக்காரர் என்றாலும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வுக் குழுவினர் தெரிவு செய்யும் வீரர்களுக்கு நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

சனத் ஜெயசூரியா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என இலங்கையின் ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அதேநேரம் சனத் ஜெயசூரியா அணியில் நீடிப்பதற்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Read more...


மாவோயிஸ்ட் தாக்குதல்


தாக்குதல் நடந்த இடத்தைக் காட்டும் வரைபடம்
இந்தியாவில் பயணிகள் பேருந்து ஒன்றில் மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கண்ணி வெடித் தாக்குதலில் பொலிசார், பொதுமக்கள் என குறைந்தது முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 11 பேர் பொலிசார் என்று தெரிகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகள் அரசாங்கப் படைகள் இடையில் கடும் சண்டைகள் நடந்துவருகின்ற இடம் இது.

இதே பகுதியில் ஒரு மாதத்துக்கு சற்று முன்னர் இந்திய ரிசர்வ் பொலிசார் மீது மாவோயிவாதிகள் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

Read more...






''பன்னாட்டு விசாரணை தேவை''


மோதலில் கொல்லப்பட்டவர்கள்
ஒலி வடிவில் விரிவான அறிக்கை

லூயிஸ் ஆர்பர் செவ்வி

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் போது நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றி இலங்கை அரசு உண்மையான ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாததால், அது குறித்து ஒரு பன்னாட்டு விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு, இண்டர்னேஷனல் க்ரைசிஸ் குரூப், என்ற அமைப்பு கோரியிருக்கிறது.

போர் நடந்து முடிந்த ஓராண்டு நிறைவடையும் நிலையில், இன்று திங்களன்று, இந்த அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி ஐந்து மாத கால கட்டத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் முதியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருக்கிறது.

போர் தொடர்பான சர்வதேச சட்டங்கள் இலங்கை அரசாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தாலும் மீறப்பட்டதாகக் கூறும் இந்த அறிக்கை, பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் அனுபவித்த துயரங்களின் அளவு ஆகியவைகளை வைத்து பார்க்கும் போது இதற்கு தக்க ஒரு பதில் தரப்படவேண்டும் என்று இந்தக் குழுவின் தலைவரும் முன்னாள் ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியிருக்கிறார்.


மோதலில் காயமடைந்த மக்கள்
அரசு மற்றும் புலிகள் ஆகிய இரு தரப்பினருமே பல ஆண்டுகளாக நடந்த இந்த மோதலில் சர்வதேச மனித நேய சட்டங்களை மீறியிருந்தாலும், போரின் இறுதி மாதங்களில் இந்த மீறல்கள் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன, மேலும் மீறல்களின் தன்மை மிகவும் ஆபத்தானவையாக இருந்தது என்று அது கூறுகிறது.

அரச படையினர், மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சர்வதேச சட்டத்தை மீறி, சிவிலியன்களை தாக்குவது, மருத்துவமனைகளைத் தாக்குவது மற்றும் மனித நேய நடவடிக்கைகள் நடக்கும் இடங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்த குழு கூறுகிறது.

குறிப்பாக ''நோ பையர் சோன்'' எனப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீதே, மீண்டும் மீண்டும் நடந்த தாக்குதல்கள் குறித்து இந்த அமைப்பு சேகரித்துள்ள சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்த குற்றங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளில் இருக்கும் குறிப்பிட்ட சில தனி நபர்களால் இழைக்கப்பட்டன என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன என்று அந்தக் குழு கூறுகிறது.



இந்தப் பகுதிகளில் கனரக குண்டு தாக்குதலை அரச படைகள் நடத்துவதற்கு, விடுதலைப்புலிகள் தூண்டினர் என்று கருதுவதற்கு இடமில்லை என்று கூறும் இந்த அறிக்கை, விடுதலைப்புலிகள் இந்த இலக்குகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததாலும், அந்த இலக்குகளுக்குள்ளேயே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாலும், அவர்கள் இந்தக் கனரக குண்டுத் தாக்குதல்களைத் தூண்டியிருப்பார்கள் என்று கருத முடியவில்லை என்று கூறியிருக்கிறது.

''மேலும் இந்த பொதுமக்களை இந்த தாக்குதல்களற்ற பகுதிகளுக்கு செல்லுமாறு கட்டளையிட்டதே அரசுதான், அரசுக்கு அவர்கள் இருந்த இடங்கள் தெரியும், இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் சிவிலியன்கள் என்று தெரியும், அவர்களுக்கு ஐ.நா அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களும் வந்துகொண்டிருந்தன, செய்கோள் படங்கள் அரசிடம் இருந்தன, நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் பல மாதங்களாகவே தொடர்ந்து சிவிலியன்கள் மீது ஷெல்லடித்தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று பல முறை சொல்லப்பட்டும், படையினர் தொடர்ந்து அதே பாணியில் தாக்குதல்களை நடத்தி, சிவிலியன்கள் தாக்கப்படவில்லை என்று கூறி வந்தனர்'' என்று இந்த அறிக்கை கூறுகிறது.


இடம்பெயர் முகாம்களில் மக்கள்
இந்த சம்பவங்களுக்கு பொறுப்பான இந்த தனி நபர்களின் நடத்தை விசாரிக்கப்படவேண்டும் என்று கூறும் இந்த அமைப்பு, மேலும், தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் மனித நேய நடவடிக்கைகள் நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், போன்றவை, மானுட குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டு அதற்கு யாரும் தனி நபர்கள் பொறுப்பா போன்ற கேள்விகளும் எழுவதாகக் கூறுகிறது.

இது குறித்த குற்றச்சாட்டுகள் மீது அரசின் கருத்தைப் பெற ஐ.சி.ஜி முயன்றும் அரசு பதிலளிக்கவில்லை என்று குழு கூறுகிறது

விடுதலைப்புலிகளும் போர்ப் பகுதியிலிருந்து தப்பி வெளியேற முயன்ற பொதுமக்களை தடுத்து, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களைக் கொன்று அல்லது காயப்படுத்தியதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறார்கள் என்று இந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.



சர்வதேச சமூகத்தில் பெரும்பகுதி நாடுகள், இந்த போர் நடந்து கொண்டிருந்த போது, நடைபெற்ற மீறல்களைக் கண்டும் காணாமல் இருந்தன என்று கூறும் இந்த அமைப்பு, பல நாடுகள், போரின் போது, போர் குறித்த சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது மற்றும் அதன் காரணமாக எழுந்த பெரும் மானுடத்துயரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரவேற்றன என்றும் கூறுகிறது.

Read more...

>> Monday, May 17, 2010


ரோபோ நடத்திவைத்த திருமணம்


திருமணம் செய்துவைத்த ரோபோ
ரோபோ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இயந்திர மனிதனால் உலகில் முதல் தடவையாக ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த விநோத திருமணத்தை மந்திரங்கள் சொல்லி நடத்திவைத்தது, மினுக்கும் கண்களும், பிளாஸ்டிக் குதிரைவால் கொண்டையும் போட்டிருந்த ஐ ஃபேரி என்ற இயந்திர யுவதி.

ஜப்பானில் அதிவேகமாக வளர்ந்துவரும் ரோபோ உற்பத்தித் தொழில்துறை மூலம் இந்த ஜோடி ஒருவரோடு ஒருவர் பழக நேர்ந்திருந்தது.

இவர்களுக்கு திருமணம் செய்த ஐ ஃபேரி ரோபோவை உருவாக்கியது மணப்பெண் சடோகோ ஷிபாடா வேலைபார்க்கின்ற நிறுவனம் ஆகும்.

"மனிதர்களுடைய அன்றாட வாழ்வின் பல விஷயங்களில் ரோபோக்களுக்கு இடமிருக்க வேண்டும் என்று எப்போதுமே நம்பிவந்துள்ளவள் நான். இந்த அழகான இயந்திர யுவதி என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்." என்கிறார் மணப்பெண்.

புதிய கணவர் டொமோஹிரோ ஷிபாடா ஒரு பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதன் பாடத்துறையில் பாடம் நடத்துகிறார்.

"முதலிலே இருவரும் பழக ஆரம்பிதததற்கு இந்த ரோபோக்கள்தான் காரணம். எனவே ரோபோவை வைத்து திருமணம் செய்துகொள்ள நாங்கள் முடிவெடுத்தோம்." என்கிறார் இந்த மாப்பிள்ளை.

Read more...


அரசியலில் நடிகை குஷ்பு


தமிழ் திரைப்பட நடிகை குஷ்பு
தமிழ் திரைப்பட நடிகை குஷ்பு அரசியலில் பிரவேசம் செய்திருக்கிறார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
வட இந்தியாவைச் சேர்ந்த குஷ்வு, தமிழ்நாட்டுக்கு வந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தின.

அவருக்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. பல ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்புவுக்கு, சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் தீர்வு கிடைத்தது. அவருக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



அதன்பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, அடுத்த கட்டமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

தான் காங்கிரஸுக்கு நெருக்கமானவர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குஷ்பு. அதனால் அவர் அந்தக் கட்சியில்தான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரை வரவேற்பதாக தமிழகத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வெளிப்படையாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில், குஷ்பு இன்று மாலை சென்னையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, முறைப்படி திமுகவில் இணைந்து கொண்டார்.

அவர் கட்சியில் இணைந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்த கருணாநிதி, ``பெண்களின் முன்னேற்றத்துக்கும் முற்போக்குக் கருத்துக்களுக்காகவும் வாதாடக் கூடிய ஆற்றல் படைத்தவர் குஷ்பு’’ என்றார்.

திமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்குப் பொருத்தமான கட்சி திமுக என்றும், ஏற்கனவே அந்தக் கட்சியில் பெண்கள் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Read more...

மின்னணுக் கழிவு: தமிழகம் புதிய செயல்திட்டம்


இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் ஏராளமாக சேர்ந்துவருகின்றன
மின்னணு கழிவுப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் வருவதைத் தடுக்கும் நோக்கிலான தனியான செயல்திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது.
இந்திய மாநிலம் ஒன்று இவ்விஷயத்தில் தனி கொள்கையையும் செயல் திட்டத்தையும் வகுத்திருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

எலக்டிரானிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான இந்தக் கொள்கையை தமிழக அரசு வரைவதில் தமிழ் நாடு மின்னணுவியல் கழகமான எல்காட் முக்கியப் பங்காற்றியுள்ளது.

மின்னணுக் கழிவு சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில் இருந்து பிரதிநிதிகளைப் பெற்று அமைக்கப்பட்ட விசேடக் குழு இந்த புதிய கொள்கையை வரைந்துள்ளது.

தேசியக் கொள்கைக்கும் செயல்திட்டத்துக்கும் பொருந்தும் வகையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக எல்காட் கூறுகிறது.

இந்தியாவில் சமீபகாலமாக பெருமளவில் மின்னணுக் கழிவுகள் சேர்ந்து வருகின்றன. ரீசைக்கிலிங் எனப்படும் மறுசுழறி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான எலக்டிரானிக் குப்பைகள் இந்தியாவை வந்து சேர்கின்றன.

"மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ள தொண்ணூறு சதவீதமானோர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறாதவர்கள் என்பதால், அதில் ஒழுங்கு வழிமுறைகளை ஏற்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதை இந்த புதிய செயல்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது." என தமிழோசையிடம் பேசிய எல்காட் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபு கூறினார்.

மின்னணுக் கழிவை சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய வகையில் அகற்றுவது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் சந்தோஷ் பாபு குறிப்பிட்டார்.

Read more...

மின்னணுக் கழிவு: தமிழகம் புதிய செயல்திட்டம்


இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் ஏராளமாக சேர்ந்துவருகின்றன
மின்னணு கழிவுப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பங்கம் வருவதைத் தடுக்கும் நோக்கிலான தனியான செயல்திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது.
இந்திய மாநிலம் ஒன்று இவ்விஷயத்தில் தனி கொள்கையையும் செயல் திட்டத்தையும் வகுத்திருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

எலக்டிரானிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான இந்தக் கொள்கையை தமிழக அரசு வரைவதில் தமிழ் நாடு மின்னணுவியல் கழகமான எல்காட் முக்கியப் பங்காற்றியுள்ளது.

மின்னணுக் கழிவு சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில் இருந்து பிரதிநிதிகளைப் பெற்று அமைக்கப்பட்ட விசேடக் குழு இந்த புதிய கொள்கையை வரைந்துள்ளது.

தேசியக் கொள்கைக்கும் செயல்திட்டத்துக்கும் பொருந்தும் வகையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக எல்காட் கூறுகிறது.

இந்தியாவில் சமீபகாலமாக பெருமளவில் மின்னணுக் கழிவுகள் சேர்ந்து வருகின்றன. ரீசைக்கிலிங் எனப்படும் மறுசுழறி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான எலக்டிரானிக் குப்பைகள் இந்தியாவை வந்து சேர்கின்றன.

"மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ள தொண்ணூறு சதவீதமானோர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதி பெறாதவர்கள் என்பதால், அதில் ஒழுங்கு வழிமுறைகளை ஏற்படுத்த முடியாதிருந்தது. ஆனால் அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதை இந்த புதிய செயல்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது." என தமிழோசையிடம் பேசிய எல்காட் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபு கூறினார்.

மின்னணுக் கழிவை சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய வகையில் அகற்றுவது என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் சந்தோஷ் பாபு குறிப்பிட்டார்.

Read more...

'கூட்டு முயற்சி'



இலங்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுடனும் சமூக அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
அப்படியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த இருகட்சிகளும் வந்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும்கூட இருதரப்பும் பேசிவருவதாகவும், அவர்களிடமும் இது தொடர்பில் சாதகமான நிலைப்பாடு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

“அரசாங்கம் அவசர அவசரமாக கொண்டுவரும் அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்துக்குள், சிறுபான்மையினருடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வது” என்பதை மையப்படுத்தியே இந்த இருதரப்புக்கும் இடையேயான கூட்டம் நடைபெற்றது என்றும் நிசாம் காரியப்பர் கூறுகிறார்.


நாட்டில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசுடன் பேசும்போது, அரசாங்கத்தின் மீது நிச்சயமாக ஒரு அழுத்தம் ஏற்படும்.


நிசாம் காரியப்பர்

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வேண்டும் எனும் நோக்கில், அரசியல் யாப்பில் அது சம்பந்தமான தடையை நீக்க திருத்தங்களைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

அப்படியான சந்தர்ப்பத்தில், சிறுபான்மை கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தால், அதை பயன்படுத்திக் கொண்டு தங்களது உரிமைகள் தொடர்பான விடயங்களையும் வென்றெடுக்க முடியும் என்பது குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியதாகவும் நிசாம் காரியப்பர் தெரிவிக்கிறார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசியது போலவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச முன்வந்தால் அதை தமது கட்சி வரவேற்கும் எனவும் அவர் கூறுகிறார்.

Read more...

உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து


ஆஸ்திரேலிய விக்கெட் விழுந்ததை கொண்டாடும் இங்கிலாந்து அணியினர்
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபது இருபது உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு தோன்றியவிடமாக இங்கிலாந்து இருந்தாலும், இது வரை அந்த நாடு, பல நாடுகள் பங்கேற்கும் எந்த ஒரு முக்கிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வென்றதில்லை.

மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாசில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இருபது இருபது உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இருபது ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து அணி இந்த இலக்கை 17 ஒவர்களிலேயே எவ்வித சிக்கலும் இன்றி எட்டியது.

Read more...

>> Friday, May 14, 2010


தங்க பிஸ்கட்டுகள்

காசு போட்டால் தங்கம் வரும்



உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில்
காசு போட்டால் பல்வேறு பொருட்களை கொடுக்கும் வெண்டிங் மெஷிண்கள் இருக்கின்றன.
குடிதண்ணீர் முதல் சூடான காஃபி வரை ஏராளமான பொருட்கள் இந்த காசு போட்டால் பொருட்களை கொடுக்கும் இயந்திரங்கள் மூலம் பெறப்படுகின்றன.

ஆனால் “காசு போட்டால் தங்கம் கொடுக்கும்” ஒரு இயந்திரம் உலகில் முதல் முறையாக செயற்படத் தொடங்கியுள்ளது.

அபு தாபியிலுள்ள ஒரு முன்னணி ஹோட்டலிலேயே இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆடம்பரமும், அதிகமான தேவைகளும், செல்வச் செழிப்பும் இருக்கும் வளைகுடா நாடுகளில் இப்படியான ஒரு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்களின் பாணியில் அபு தாபியின் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் இருக்கும் இந்த “காசு போட்டால் தங்கம் கொடுக்கும் இயந்திரம்” வடிவமைக்கப்பட்டு செயற்படுகிறது.

தங்கத்தின் விலையை தினசரி கவனித்து அதற்கு ஏற்ற வகையில் எவ்வளவு பணத்துக்கு எவ்வளவு தங்கம் என்கிற ரீதியில் கணக்கிட்டு இந்த இயந்திரம் செயற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் ஒன்று, ஐந்து, மற்றும் பத்து கிராம் தங்கக் காசுகளையும், பிஸ்கட்டுகளையும் அளிக்கிறது.

ஜெர்மன் நாட்டின் தொழிற் முனைவரான தாமஸ் கீஸ்லர் அவர்களின் எண்ணத்தில் உதித்த இயந்திரம் இது.

இந்த இயந்திரத்தின் துவக்க விழாவும் சரியாக திட்டமிட்டே செயற்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று தங்கத்தின் விலை இது வரை இல்லாத அளவுக்கு, ஒரு கிராம் 45 டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

இந்த இயந்திரத்தில் பணத்தைப் போட்டு தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த நிமிடத்தில் உலக அளவில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அந்த விலையும் கிடைக்கும் என்றும் கீஸ்லர் கூறுகிறார்.

Read more...

மலேசிய மனித உரிமைகள்


மலேசியாவில் சட்டவிரோத குடிவரவுத் தொழிலாளர்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலுக்கு ஏகமனதாக தெரிவாகும் 4 ஆசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
அவர்கள் இவ்வாறு அந்தக் கவுன்சிலுக்கு இரண்டாவது முறையாக தெரிவாகின்றனர். ஆனால், இவ்வாறு தெரிவாவதற்கு முன்னதாக மலேசியா தனது மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

அங்கிருக்கும் அடக்குமுறைச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அவை கூறுகின்றன.

ஆட்கடத்தலுக்கான அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டதை அடுத்து தனது மனித உரிமைகள் குறித்த அந்தஸ்தை மேம்படுத்த மலேசியா மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது.

குடிவரவு தொழிலாளர்களுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கவும், ஆட்கடத்தலை தடுக்கவுமான தனது திட்டங்களை, வரவுள்ள தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னதாகவே மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், மலேசியா முதல் தடவையாக மனித உரிமைகள் கவுன்சிலில் இடத்தை பிடிப்பதற்கு 2006 இல் முயற்சித்த போது பல முக்கியமான உறுதிமொழிகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றில் எதனையும் அது நிறைவேற்றவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

விசாரணை இன்றி எவரையும் தடுத்து வைக்க வழி செய்யும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை மனித உரிமைக் குழுக்கள் கேட்கின்றன.

மலேசியாவின் தொழிலாளர் சக்தியில் கணிசமான பங்களிப்பைச் செய்யும் சட்டவிரோதமாக குடியேறும் தொழிலாளர்களை மலேசியா நடத்தும் விதம் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.

அவர்களுக்கு நாட்டில் போதுமான தங்கும் அனுமதி இல்லாத காரணத்தால் அவர்கள் துஸ்பிரயோகத்துக்கும், சுரண்டலுக்கும் இலகுவில் ஆளாகும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

அந்த சட்டவிரோத குடியேறி தொழிலாளர்கள் போதுமான தங்கும் அனுமதியற்று பிடிபட்டால், அபராதம், சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி என்பனபோன்ற குற்றவியல் தண்டனைகளுக்கு அவர்கள் உள்ளாக நேரிடும்.

Read more...


ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும் சிறுதாவூர் மாளிகை


சிறுதாவூர் வீடு தலித் நிலத்தில்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள் பங்குதாரர்களாக உள்ள பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் சென்னையை அடுத்த சிறுதாவூரில் தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட அரசு நிலத்தில் பங்களா எழுப்பியிருக்கிறது என நீதிபதி சிவசுப்பிரமணியம் கமிஷன் கூறியிருக்கிறது.
ஆனால் அது ஆக்கிரமிப்பல்ல, முறைகேடாக வாங்கப்பட்ட நிலம் என்கிறது கமிஷன்.

சிறுதாவூரில் உள்ள பங்களாவில்தான் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வெடுக்கச் செல்வார். அப்பகுதி அரசு நிலங்களையும் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட நிலங்களையும் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவின் குடும்பத்தினரும் ஆக்கிரமித்திருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டி, அந்நிலங்களை மீட்குமாறு வற்புறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

அப்புகார்கள் குறித்து விசாரிக்கவென ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தலைமையில் கமிஷன் ஒன்றை தமிழக அரசு நியமித்தது. மூன்றாண்டு விசாரணைக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது அறிக்கையினை அது சமர்ப்பித்தது.

813 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கை இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சிறுதாவூரில் 1967ம் ஆண்டில் 20 தலித் குடும்பங்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. அக்குடும்பங்கள் அவ்வாறு பெறப்பட்ட நிலங்களை 25 ஆண்டுகளுக்கு எவருக்கும் விற்கக்கூடாது என்பதே விதி. ஆனால் 1983லேயே அந்நிலங்கள் விற்கப்பட்டுவிட்டன.

அத்தலித் மக்களிடமிருந்து வாங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்திலும், மேலும் அரசின் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்தும், சித்ரா என்பவருக்குச் சொந்தமான பரணி ரிசார்ட்ஸ் நிறுவனம் பங்களா கட்டியுள்ளது.

இந்த பங்களா ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதல்ல. ஆனால் பரணி ரிசார்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த நிலங்களை 2005 ஆம் ஆண்டு வாங்கியதாக அந்த நிறுவனம் கூறுவது பொய், 1994லிருந்தே அந்நிலங்களின் பெரும்பகுதி ரிசார்ட்ஸ் வசமே இருந்திருக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது. 2005ல் இறுதியாக வாங்கி முடித்தபோது பல்வேறு விதிகள் மீறப்பட்டிருகின்றன, பத்திரப்பதிவிற்காகவென்றே தூத்துக்குடியிலிருந்து சில நாட்களிலேயே ஓய்வுபெறவிருந்த் ஒரு தாசில்தார் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு அதிவேகமாக பதிவு நடந்தேறியிருக்கிறது என்கிறது கமிஷன்.

Read more...

>> Thursday, May 13, 2010




இணையத்தில் பாம்க்புக்கடி சிக்கிச்சை விபரங்கள்

உலகளவில் பாம்புக் கடியால் பலர் இறந்து வரும் நிலையில், அப்படியான இறப்புகளளை குறைக்கும் நோக்கிலும், பாம்புக் கடியின் விஷத்தால் கை கால்கள் பாதிக்கப்பட்டு செயற்பட முடியாத நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலும் உலக சுகாதார நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இணையச்சுட்டி


விஷப் பாம்புகள் குறித்த ஐ நா வின் இணைய தளம் அறிமுகம்



ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 25 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சுமார் 2,500 பேர் இறக்கவும் நேரிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

கடுமையான விஷம் கொண்ட பல பாம்புகள் மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும்.

ஆனால் எல்லா பாம்புகளுக்கும் ஒரே மாதிரியான விஷமுறிவு மருந்துகள் செயற்படாது.

இந்த மாதிரியான சிக்கலான நேரங்களில், பாம்புக் கடிகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.

பல நேரங்களில் இந்த இணையதளம் உயிர்காக்கவும் உதவும்.

இந்த இணையதளத்தில் உலகிலுள்ள அனைத்து விஷப் பாம்புகள் குறித்த தகவல்களும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளது.

சரியான விஷமுறிவு மருந்து மரணத்தை தடுக்கும்

எந்தப் பாம்புகள் எந்த நாட்டில் இருக்கின்றன, அவை கடித்தால் என்ன வகையான விஷமுறிவு மருந்துகள் தேவைப்படும் என்பது தொடர்பான அறிவுரைகளும் அந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.


எந்தப் பாம்பையும் பார்த்தவுடன் அது விஷமுடையதா என்பதை அறிவது கடினம்



பாம்புக்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக சரியான விஷமுறிவு மருந்துகளை எடுத்துக் கொண்டால், அப்படியான கடிகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலக் பாதிப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு அரசுகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அந்த பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில், தமது நாடுகளின் எந்த வகையான விஷ பாம்புகள் இருக்கின்றன, அவற்றுக்கு என்ன வகையான விஷமுறிவு வகைகள் தேவை என்பதை அறிந்து அந்நாட்டு அரசுகள் அந்த மருந்துகளை போதிய அளவில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் பல பாகங்களில் பாம்புக் கடியால் ஏற்படும் பிரச்சினைகள் சுகாதாரத்துறையால் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

பல நாடுகளில் தரமற்ற மற்றும் சரியான நோய் எதிர்ப்பு மருந்துகள் இல்லாது இருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் அதன் செயற்திறனை நம்பாத நிலையும் உள்ளது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.

புள்ளி விபரங்கள் இல்லை

பல நாடுகளில் பாம்புக்கடிகள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.


பல்வகை விஷப் பாம்புகள்



இதன் காரணமாக தேவையான அளவுக்கு விஷமுறிவு மருந்துகளை அந்தந்த நாடுகள் திட்டமிட்டு வாங்கமுடியாத நிலை ஏற்படுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பல சந்தர்ப்பங்களில் விஷமுறிவு மருந்துகளை தயாரிப்பவர்கள் அதன் விலையை ஏற்றுவதற்கும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் மருந்து தயாரிப்பையே அந்த நிறுவனங்கள் நிறுத்தியும் விடுகின்றன.

இந்தப் பிரச்சினைகளால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கான விஷமுறிவு மருந்துகளின் விநியோகத்தையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பாம்புக் கடியால் பெரிதும் ஆளாவது கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளும் பெண்களும் சிறார்களுமே என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

இப்படியான மக்களுக்கு இணைய வசதியோ, அல்லது கௌரவமான மருத்துவ வசதிகளோ, அல்லது அவர்களை காப்பாற்றும் விஷமுறிவு மருந்துகளோ கிடைக்காத நிலையுமே உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

Read more...


Global distribution of venomous snakes
Venomous snakes occur throughout many regions of the world and are a threat to public health, especially in the rural tropics where they are most abundant. Out of more than 3000 species of snakes in the world, some 600 are venomous and over 200 are considered to be medically important.
A database and image library has been created by WHO to enable users to easily identify the most important venomous snakes in their country, territory or area; see the distributions of each species; and find information about antivenom products for treating envenoming caused by their bites. The database is accessible from the Database search option in the left hand site navigation menu.
In assessing the relative risk of each species, two major categories have been considered within the WHO Guidelines on production, control and regulation of snake antivenom immunoglobulins.
CATEGORY 1: Highest medical importance

Definition: Highly venomous snakes that are common or widespread and cause numerous snakebites, resulting in high levels of morbidity, disability or mortality. CATEGORY 2: Secondary medical importance

Definition: Highly venomous snakes capable of causing morbidity, disability or death, for which exact epidemiological or clinical data may be lacking; and/or are less frequently implicated (due to their activity cycles, behavior, habitat preferences or occurrence in areas remote to large human populations).



The venomous snakes species listed as Category 1 are considered to cause the greatest burden of injury, disability and/or mortality attributable to snakebites in various countries, territories and other areas around the world. Species listed under this category within a country, territory or area should be considered as being of highest priority for antivenom production.
The distribution of snakes shown in the maps included in this website and their categorization are based on data available in published reference texts and scientific journals (see the WHO Guidelines above for a detailed bibliography) in addition to records held in museum collection databases, and information obtained from consultation with zoologists and other experts from many countries around the world. As more information becomes available, new species may be added to these lists, and/or some species, currently defined within Category 1 or Category 2 re-ranked.

E-mail scams | Employment | FAQs | Feedback| Other UN sites | Privacy | RSS feeds
©World Health Organization 2010. All rights reserved

Read more...


விஸ்வநாதன் ஆனந்த்

ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன்



இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
பல்கேரியாவின் வேஸலின் டோபலோவை அவர் வென்றுள்ளார். 12 சுற்றுகள் இடம் பெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம் ஆனந்த் மீண்டும் சாம்பியனாகி உள்ளார்.

இந்தப் போட்டிகளில் மூன்றில் ஆனந்தும், இரண்டில் டோபலோவும் வென்றனர். ஏழு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. இறுதியில் 6.5 க்கு 5.5 என்கிற புள்ளிகள் வீதத்தில் ஆனந்த் வென்றுள்ளார்.

இரண்டு மில்லியன் யூரோக்கள் பரிசுத் தொகையை ஆனந்தும், டோபலோவும் சமமாக பகிர்ந்து கொள்வார்கள்.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த் அதிரடியாக ஆடி இந்த வெற்றியை பெற்றார் என சதுரங்க விளையாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வெற்றிக் கொண்டு உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்.

இதுவரை நான்கு முறை உலக பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

Read more...




தொழிற்கட்சியின் சின்னம் ரோஜா மலர்

தொழிற்கட்சியின் தலைமைப்பதவி யாருக்கு?



பிரிட்டனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை ஆளும் கட்சியாக இருந்த தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளது.
பிரதமராக இருந்த கார்டன் பிரவுன் அக்கட்சியின் தலைவராகவும் இருந்தார். நேற்று மாலை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தபோது கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் தான் உடனடியாக விலகுவதாக அவர் அறிவித்தார்.

இதையடுத்து ஹாரியட் ஹார்மன் அம்மையார் தற்காலிகத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தொழிற்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த போட்டியில் தான் இல்லை என்று உள்துறையின் முன்னாள் செயலர் ஆலன் ஜான்சன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தொழிற்கட்சியின் உள்ளே தவிர்க்க முடியாத ஏமாற்றமும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இருந்தபோதிலும் எல்லாம் முடிந்து விட்டது என்கிற ஒரு நிம்மதியும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.

13 ஆண்டுகள் பதவியிலிருந்த கட்சிக்குள் மீண்டும் ஒரு ஒருங்கிணைப்பு, மறுசிந்தனை மற்றும் புதிய உத்வேகம் தேவை என்கிற எண்ணமும் எழுந்துள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தொழிற்கட்சி முற்றிலுமாக அழித்தொழிக்கப்படவில்லை, அது மீண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்றும், கடுமையான வெட்டுக்களை கொண்டு வர நிர்பந்திக்கப்பட்டுள்ள கூட்டணி ஆட்சியை சுலபமாக எதிர்க்க முடியும் என்கிற கருத்தும் கட்சிக்குள் இருக்கின்றது.

இளைய தலைமுறைக்கு வாய்ப்பு


டேவிட் மிலிபாண்ட்
இந்நிலையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளவயதினர் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டின் என்கிற கருத்தும் கட்சிக்குள் உறுதியாக இருக்கின்றது.

இதன் அடிப்படையில் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டி எட் பால்ஸ் மற்றும் டேவிட் மிலிபாண்ட் ஆகியோரிடையே இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

ஆனால் டேவிட் மிலிபாண்ட்டின் இளைய சகோதரரான எட் மிலிபாண்ட், ஆண்டி பர்ண்ஹாம் மற்றும் ஜான் க்ரூதாஸ் ஆகியோரும் தலைமைப் பதவிக்கு போட்டியாளராக பார்க்கப்படுகிறார்கள்.

சிக்கலான தேர்தல்


பிரவுனுடன் எட் பால்ஸ்
எனினும் தற்போதைய நிலையில், இடைக்கால தலைவராக ஹாரியட் ஹார்மேன் தொழிற்கட்சியின் தலைவராக பொறுப்பேற்கிறார். அடுத்ததாக கட்சியின் தேசிய செயற்குழு கூடி தலைமைப் பதவிக்கான தேர்தல் குறித்த ஒரு அட்டவணையை அடுத்த வாரம் வரைவார்கள். அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் ஒரு சிக்கலான விடயம். ஏனென்றால் வாக்களிக்கும் உறுப்பினர்கள் பல்தரப்பைச் சேர்ந்தவர்கள்.

வாக்கு என்பது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே பிரிந்து கிடக்கிறது. இப்படியான சூழலில் தேர்தல் முடிவடைவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.

Read more...


பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரன்

புதிய ஆட்சியில் புதிய உறவு



ஐக்கிய ராஜியத்தின் புதிய பிரதமர் டேவிட் கேமரன், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதும் முதலில் பயணம் செய்த நாடு இந்தியா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இந்தியா வந்தபோது, அது வெற்றிப் பயணமாக வர்ணிக்கப்பட்டது.
அந்தப் பயணத்தின்போது, டேவின் கேமரன் பேசுகையில், உலகின் புவி ஈர்ப்பு விசை, ஐரோப்பா மற்றும் அட்லான்டிக்கில் இருந்து ஆசியாவை நோக்கிச் செல்லும் நிலையில், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் ஆகிய இரு நாடுகளும் புதிய உறவை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

இப்போது, இரு நாடுகளிலும் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள், புதிய பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவுடன் நெருக்கமான உறவை வளர்க்கும் என்றும், குறிப்பாக பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஐக்கிய ராஜ்யமும் ஒன்று. அதேநேரத்தில், ஐக்கிய ராஜ்யத்தில் முதலீடு செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலான அரசு, முக்கியப் பிரச்சினைகளில், அதாவது பருவநிலை மாற்றம், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை போன்றவற்றில் இந்தியாவுக்கு மிகக்குறைவான அழுத்தமே கொடுக்கும் என்று இந்தியாவிலுள்ள நோக்கர்கள் கருதுகிறார்கள்.

உறவில் நெருடல்


மன்கோகன் சிங்
அதே நேரத்தில், அவுட்சோர்ஸிங் என அழைக்கப்படும், பணிகளை வேறு நாடுகளுக்கு மாற்றுதல், குடியேற்றம் ஆகிய அம்சங்களில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக இந்தியாவில் பல கவலைகள் உள்ளன.

கன்சர்வேடிவ் கட்சியின்படி, குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால், இந்திய தொழில்முறை நிபுணர்களும், மாணவர்களும் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறபடுகிறது.

மேலும், ஓய்வூதிய நிதியைப் பராமரித்தல் தொடர்பாக ஐக்கிய ராஜியத்தின் ஓய்வூதிய நிதி மேம்பாட்டுத் துறைக்கும் இந்திய தொழில் நிறுவனமான டாடாவுக்கும் ஏற்பட்டுள்ள 9 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப் போவதாகவும் கன்சர்வேடிவ் கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், டேவிட் கேமரனை வாழ்த்தி விரைவில் இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இருநாட்டுப் பிரதமர்களும் சுமார் 10 நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இருதரப்புப் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, உலகப் பொருளாதார சூழ்நிலை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, டேவிட் கேமரன் அலுவலகம் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more...

>> Wednesday, May 12, 2010



மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா


வவூனியா முகாம்
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

கூடுதல் உதவி


வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்

மேலும், இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா அளித்துவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், 500 கோடி ரூபாய் உதவித் திட்டத்தை முதலில் இந்தியா அறிவித்த பிறகு, 416 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியிருப்பதாகவும், மேலும் 382 மில்லியன் டாலர்கள் கடன் அடுத்து வழங்கப்பட இரு்பபதாகவும் தெரிவித்தார்.

இந்திய முறை சாத்தியமில்லை

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவி்ததார்.

இலங்கைக்குப் பொருத்தமான வகையில், அதிகாரத்தைப் பகி்ர்ந்துகொள்ளும் வகையி்ல புதிய முறையை உருவாக்க வேண்டும். அந்த முறை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் கெளரவம் அளிக்கும் வகையிலும், சம உரிமை கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தூதர் கூறினார்.

பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய பிரசாத் காரியவசம்,
இலங்கையின் வடக்கே தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக நிராகரித்தார்.

இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான அம்சங்கள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை, நிலம் உள்ளிட்டவற்றின் அதிகாரம் தொடர்பாக இன்னும் பேசி வருவதாகவும், வடக்கு, கிழக்கில் மாகாண கவுன்சில்கள் அமைக்கப்பட்டு, பொறுப்பான தலைவர்கள் வந்தால்தான் அதன்பிறகு மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர், பிரச்சினையை அரசியலாக்காமல், சகஜநிலை மேம்பட உதவ வேண்டும் என்றும் பிரசாத் காரியவசம் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் உள்பட, .
இலங்கை, இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

Read more...



இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்க பிரபாகரனின் தாய் மறுப்பு


பார்வதியம்மாள்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு இந்திய அரசு விதித்த நிபந்தனைகள் அவரது குடும்பத்தினருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அவர் இந்தியாவுக்கு செல்லவேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதாக இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்திய அரசு, பார்வதியம்மாள் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற விரும்பினால், அரசு பாதுகாப்பில், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார் என்று விதித்த நிபந்தனை, அவர் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடியாத நிலையை ஏற்படுத்தியதாலும், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அவரை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை காரணமாகவும், இந்த முடிவை குடும்பத்தினர் எடுத்துள்ளனர் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு அரசியல் சர்ச்சைக்குள் பார்வதியம்மாள் சிக்குவதை அவரது குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்கக்கூடாது என்பது இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இருக்கலாம், அது புரிந்து கொள்ளக்கூடியதே ஆனால் குடும்ப நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சந்திக்கூடாது என்ற நிபந்தனையை அவரது குடும்பத்தினர் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கவனிக்கவேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.

பார்வதியம்மாளை இலங்கையில் தற்போது தனது கண்காணிப்பில் வைத்து மருத்து சிகிச்சை செய்து வருவதாகவும், ஒரு வார காலத்தில் அவரை யாழ் குடா நாட்டில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று சிகிச்சை தொடர முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பார்வதியம்மாளின் மகள் கனடாவிலும், மற்றொரு மகன் டென்மார்க்கிலும் இருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கு அவரை கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று கேட்டதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம், கனடாவிற்கு அவரை கொண்டு சென்று மருத்து சிகிச்சை தர விசா கோரப்பட்டிருக்கிறது என்றார்.


எம்.கே.சிவாஜிலிங்கம்

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக உரிய அனுமதி பெற்று மலேசியாவில் இருந்து வந்த பார்வதியம்மாள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். பிறகு இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் பார்வதியம்மாள் சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இந் நிலையில் சில நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு இந்தியாவுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது. பார்வதியம்மாள் அரச செலவில் அரசு மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களை அவர் சந்திக்கக் கூடாது என்பனவை அடங்கும்.

திமுக நிலை

இந்த விடயத்தை திமுக ஒரு மனித நேயப் பிரச்சினையாகப் பார்ப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார். இந்திய அரசு பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளை விதித்திருக்கலாம் என்றும் நிபந்தனைகளை நீக்குமாறு கோரிககை வந்தால் அதை திமுக தலைவர் பரிசீலிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...


பிரதமர் பதவியிலிருந்து பிரவுன் விலகினார்


பதவி விலகினார் பிரவுன்
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் பதவி விலகியுள்ளார். பிரித்தானிய அரசியை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார்.
புதிய அரசை அமைக்கும்படி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கேவிட் கெமரனை அழைக்கும்படியும் அவர் அரசியிடம் வேண்டியுள்ளார்.

பதவி விலகல் செய்தியை கார்டன் பிரவுன் தனது அரசு இல்லமான 10 டவுணிங் ஸ்டிரீட்டின் முன்னர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதன் மூலம் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் அடுத்து யார் பிரதமராவர் என்பது தொடர்பில் இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

Read more...

>> Tuesday, May 11, 2010

சில பயனுள்ள இணைய தளங்கள்
Google News
Ardic DX Club
Sarvadesavanoli
Dxers Guide
Radio World
வானொலி உலகம்
World wide Tamil Radio List
Radio stations in Tamil Nadu
Broadcasting in India
AIR-Chennai By Jose Jacob
BBC Tamilosai
China Vanoli
CRI Tamil Neyar Kaditham
Veritas Tamilpani
Vathikan Vanoli
Anbin MAdal
Elangai Vanoli

Read more...




தாகூர் 150


ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆத் தேதி தொடங்கி ஓராண்டுக்கு நடைபெற இருக்கின்றன.
இந்தியாவின் முன்னோடி இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரும், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவருமான ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் மற்றும் ஓவியத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

இன்றைக்கும் அவர் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த கவிஞராக, முன்னோடியாக இருக்கிறார் என்று நிச்சயமாக கூற முடியும் என இலக்கிய விமர்சகரும், தமிழில் நவீன இலக்கியங்களின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவருமான ஞானக்கூத்தன் கருத்து வெளியிடுகிறார்.


தாகூர் குறித்து ஞானக்கூத்தனின் கருத்துக்கள்

“இந்தியாவில் நவீன இலக்கியத்தின் தந்தையாக தாகூர் கருதப்படுகிறார்” என்றும் அவர் கூறுகிறார்.

தாகூர் அவர்களின் ஆளுமையும், தாக்கமும் இன்றளவும் இந்தியாவில் பல எழுத்தாளர்களிடம் இருக்கின்றன எனவும் ஞானக்கூத்தன் கூறுகிறார்.

நவீனக் கவிதையின் ஊற்றுக்கண்


தாகூர் வரைந்த ஓவியம் ஒன்று
இந்திய மொழிகள் அனைத்திலும், கவிஞர்கள் செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்டு நவீன கவிதைக்கு வருகின்ற போக்கை 1913 ஆண்டிலேயே தாகூர் கையாண்டது அவரது ஆளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தாகூரின் முன்னெடுப்பை அடுத்து இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள கவிஞர்களும் இலக்கணம் இல்லாத கவிதை எழுத வந்தார்கள் என்றும் ஞானக்கூத்தன் கூறுகிறார்.

தாகூரின் கவிதைகளில் அவரது ஆழ்ந்த மதநம்பிக்கை வெளிப்படுகிறது என்றாலும், அதன் காரணமாக அவரது நவீனத்துவம் குறைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது எனவும் அவர். கருத்து வெளியிடுகிறார்

ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் நவீனமாக இருக்கும் அதே வேளையில் அவை இந்தியத்தன்மையுடன் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

பாரதியிடம் தாக்கம்

மகாகவி பாரதியார் மீது தாகூரின் படைப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என கூறும் ஞானக்கூத்தன், பாரதியார் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார் என்பதையும் சுட்டுக்காட்டுகிறார்.


இந்திய மொழிகளில் கவிதை விடுதலை அடைவதற்கும், நவீனமடைவதற்கும் தாகூர்தான் மூலகர்த்தாவாக இருந்து வந்திருக்கின்றார்


ஞானக்கூத்தன்

இன்றைக்கும் தாகூர் ஒரு படிக்கத்தகுந்த இலக்கியவாதியாக இருக்கிறார் என்றாலும் அவர் படிக்கப்படுகிராறா என்பது தெரியவில்லை என்றும் தனது கருத்தை வெளியிடுகிறார் அவர்.

தாகூரின் சில சிந்தனைகள் பிற்போக்கு கொள்கைகளை கொண்டிருந்ததாக கூறப்படும் விமர்சனத்தை மறுக்கும் ஞானக்கூத்தன், இதற்கு உதாரணமாக அவரது “கோரா” எனும் புதினத்தை சுட்டிக்காட்டுகிறார்.

தேசியம் என்பது பாராட்டுக்குரிய ஒரு விடயமல்ல, அது மக்களை ஓரிடத்தில் முடக்கி விடுகிறது என்கிற கருத்து தாகூரிடம் இருந்தது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

கீதாஞ்சலியின் சிறப்புகள்


தாகூரின் கையெழுத்தில் அவருடைய கவிதை ஒன்று
தாகூரின் சாராம்ச உணர்வுகள் அவருக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்த கீதாஞ்சலியில் வெளிப்படுகிறது என்றும், உலகின் எந்த மொழியில் படித்தாலும் கீதாஞ்சலி புரியக்கூடியதாக இருக்கின்றது என்றும் ஞானக்கூத்தன் கருத்து வெளியிடுகிறார்.

கீதாஞ்சலியை படிக்கும் போது மனது ஒரு விடுதலை உணர்வை பெறுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் அந்தப் படைப்பை படிக்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டு குறுகிய நோக்கங்கள் தகர்ந்துவிடுவதாகவும், இதுபோன்ற காரணங்கள் பலரிடம் இருப்பதாலேயே கீதாஞ்சலி தனிச்சிறப்பு பெறுகிறது என்று தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.

Read more...


ஆனைமுடியில் அரிய ஆரஞ்சு தவளை



தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத் தவளை இருக்கிறது.

ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது.

ஆயிரத்துத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தவளைக்கு ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர் கூறுகிறார்.


மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன் புரியாத புதிராகவே உள்ளது. அது குறித்த ஆய்வில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம்.


டாக்டர் எஸ்.டி.பிஜு

2001 ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும், இது புதிய இனம்தான் என்பதை பல கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர் கூறுகிறார்.

"சீனா, லாவோஸ், கம்போடியா வியட்நாம், இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் நாடுகளில் வாழும் தவளை இனங்களுடன் இந்தத் தவளையை ஒப்பிட்டு பார்த்து, பலவிதமாக ஆராய்ந்து, இறுதியில் கரண்ட் சயின்ஸ் எனப்படும் அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்பினை வெளியிட்டோம்." என்கிறார் பேராசிரியர் பிஜு.

இந்தியாவில் தவளையின ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் சி ஆர் நாராயண் ராவ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்தத் தவளையின் பெயரில் ராவ் சேர்க்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பிஜு சுட்டிக்காட்டுகிறார்.

மிகச்சிறிய ஒரு பகுதியில், மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

உலகில் மொத்தத்தில் ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு உள்ளாகியுள்ளன.

Read more...


மலேஷியாவில் ஊடக சுதந்திர ஒடுக்குமுறையை எதிர்த்து 'பத்திரிகையை தலைகீழாய் பிடித்து' நடந்த நூதன ஆர்ப்பாட்டம்


மலேஷியாவில் 'ஒடுக்குமுறையில் ஊடகங்கள்'


மலேஷியாவில் கருத்து சுதந்திரம் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாக ஊடக சுதந்திரத்துக்கான ஓர் அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் இனரீதியான மதரீதியான பதற்ற நிலையை காரணம் காட்டி அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கிவருகிறது என்று இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பல இனத்தினரும் மதத்தினரும் வாழும் மலேஷியாவில், அரசாங்கம் அவசியமே இல்லாமல் செய்திகளுக்கு இனத்துவேஷச் சாயம் பூசுகிறது என செண்டர் பார் இண்டிபெண்டெண்ட் ஜர்னலிஸம் அதாவது தகவல் சுதந்திர இயக்கம் என்ற இந்த அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

வன்முறை ஏற்படலாம், நாட்டில் ஸ்திரத்தன்மை குலைந்துபோகலாம் என்ற அச்சுறுத்தல்களைக் காட்டி, எதேச்சதிகாரம் மிக்க சட்டங்கள் நாட்டில் அமலில் இருப்பதை அரசாங்கம் நியாயப்படுத்தி வருகிறது என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகங்கள் தொடர்ந்து செயல்பட அவை வருடா வருடம் அரசாங்கத்திலிருந்து உரிமம் பெற வேண்டும் என்ற ஒரு சட்டம் மலேஷியாவில் உள்ளது. ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு இந்த உரிமத்தை அரசாங்கம் ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது என தகவல் சுதந்திர மையத்தின் செயல்திட்ட இயக்குநர் சிவன் துரைசாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.


சிவன் துரைசாமி செவ்வி

சர்ச்சைக்குரிய மத விவகாரங்கள் ஊடகங்களில் விவாதிப்பதை தேச விரோதக் குற்றமாக கருத வேண்டும் என்று சில கடும்போக்கு முஸ்லிம் குழுக்கள் கூறுவதற்கு அரசியல்வாதிகளின் மறைமுக ஒப்புதல் இருப்பதாகத் தெரிகிறது என்று இந்தத் தகவல் மையம் கூறுகிறது.

முக்கிய விடயங்கள் தொடர்பில் நாட்டில் விவாதம் இல்லாமல் போவதே புரிந்துணர்வு ஏற்படுவதற்கு தடையாக இருக்கிறது என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

Read more...


பார்வதி அம்மாள்
பிரபாகரன் தாயார் இந்தியா வர அனுமதி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் ஆறு மாதம்வரை தங்கி சிகிச்சை பெற மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது என முதல்வர் கருணாநிதி தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு சிகிச்சைக் காலத்தில் பார்வதி அம்மாள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது ஒரு முக்கிய நிபந்தனையாகும்.

"கடந்த ஏப்ரல் 16ஆம் நாளன்று சிகிச்சை பெறவென உரிய விசா பெற்று சென்னை வந்த அவரை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அது பெரும் அரசியல் பிரச்சினையாகி, அவர் திருப்பி அனுப்பப்பட்டதே தனக்குத் தெரியாது, பிரபாகரனின் பெற்றோரை இந்தியா வர அனுமதிக்கக்கூடாது என்ற முந்தைய அ இ அதிமுக அரசின் ஆலோசனையில் பேரில் மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் விளைவே அவர் திருப்பி அனுப்பப்ட்டமை ஆகும், இனிமேலும் அவர் வர விரும்பினால், மத்திய அரசிடம் தான் பரிந்துரைக்கத் தயார்" என்று முதல்வர் கூறியிருந்தார்

மாநில அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டால், பார்வதி அம்மாளை அனுமதிக்கத்தயார் என மத்திய அரசு கூறியிருந்தது.

பார்வதி அம்மாள் மறுபடி வர விரும்பினால் அவரது கோரிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றமும் விரைந்து முடிவெடுக்கவேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது.

அவ்வாறு பார்வதி அம்மாளும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் அண்மையில் புதுடில்லி சென்றபோது தான் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் பார்வதி அம்மாள் இங்கு வர அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்தியதாகவும், அதன் பின்னர் இப்போது பார்வதி அம்மாளை அனுமதிக்கலாம் என மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு மத்திய அரசு எழுதியிருப்பதாகவும் சட்டமன்றத்தில் கருணாநிதி கூறினார்.

"பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும்; அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டும் தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது;அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்குத் தேவையான உதவிகளை எல்லாம் செய்திட வேண்டும்; அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பங்கு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது" எனமுதல்வர் தெரிவித்துள்ளார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter