>> Friday, June 18, 2010


வறண்ட நிலம்

இலங்கையில் ஈரவலையம் குறைகிறது



இலங்கையில் ஈர வலையம் குறைந்து உலர் வலையம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ஈர வலையத்துக்குள் உலர் வலையம் உட்புகுந்து வருகின்றது என கொழும்பு பல்கலைகழகத்தின் புவியியல் துறை நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புத்தளம், நீர்கொழும்பு, மாத்தளை, பதுளை, நுவரேலியா, அம்பாறை உட்பட பல இடங்களில் ஈர வலையம் குறைந்து வருகின்றது என அந்த ஆய்வு கூறுகிறது.

ஈர வலையம் குறைந்து வருவது பல வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என கிழக்கு பல்கலைகழகத்தின் தாவரவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் தங்கமுத்து ஜெயசிங்கம் கூறுகிறார்.

நாட்டின் பல்லினத்தன்மை இதனால் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என்று அவர் கூறுகிறார்.

பல்லிதன்மை கூடியப் பிரதேசமாக ஈரவலையப் பகுதியே சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் கருதப்படுகிறது.

இலங்கைகுரிய சில சிறப்பு வகையான தாவரங்களும், விலங்கினங்களும் மிகவும் அதிகமாக இந்த ஈரவலையப் பகுதியிலேயே இருக்கின்றன எனவும் அவர் சுட்டிகாட்டுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter