>> Monday, June 14, 2010





முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 காதல் ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கான வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இந்த மெகா திருமண வைபவம் நடந்துள்ளது.


ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த திருமணங்களுக்குக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜனாதிபதியின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச முக்கிய விருந்தினராக, பொலிவூட் நடிகர் விவேக் ஒபராயுடன் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.


இந்து ஜோடிகளுக்கு இந்து சமய ஆச்சாரப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டது.


கிறிஸ்தவ ஜோடிகளுக்கு பாதிரியார் மணம் முடித்து வைத்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter