>> Monday, June 28, 2010


புத்தா பார் உணவு விடுதி



'புத்தா பார்': இலங்கை பிரதமர் கவலை



புத்தா பார் என்ற பெயரில் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் அமைத்து இயங்கும் உணவு விடுதிகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புத்த மதத்தை அவமதிப்பது போன்ற விஷயங்கள் இந்த உணவு விடுதிகளில் நடப்பதாகத் தெரிவித்து அது பற்றி கூடுதல் விபரங்களைத் திரட்டச் சொல்லி தங்களுடைய தூதரகங்களுக்குப் இலங்கைப் பிரதமர் பணித்துள்ளார்.

பாரீஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த புத்தா பார் உணவு விடுதிகளுக்கு, துபாய், நியூயார்க், எகிப்தின் ஷரம் அல் ஷெய்க் போன்ற ஊர்களிலும் கிளைகள் இருக்கின்றன.

இந்த உணவு விடுதி ஒவ்வொன்றிலும் புத்த பிரானின் பெரிய உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புத்தர் சிலை முன்பு வாடிக்கையாளர்கள் மது அருந்துகின்றனர் நடனம் ஆடுகின்றனர் என்றெல்லாம் தான் கேள்விப்பட்டது தொடர்பில் இலங்கைப் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது பற்றி இலங்கைத் தூதரங்கள் கூடுதல் விபரம் சேகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏகான் பாடல் வீடியோ சர்ச்சை

இலங்கையின் அரசாங்கம் தங்களது நாட்டின் பெரும்பான்மை மக்களது மதமான பௌத்த மதத்தின் உணர்வுகளுக்கு குரல் கொடுப்பதில் முனைப்பாய் இருப்பதாய்த் தெரிகிறது என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அண்மையில் சர்வதேச ராப் இசைக் கலைஞர் ஏகோன் இலங்கையில் நடத்தவிருந்த நிகழ்ச்சி ஒன்று ரத்தாக இலங்கை அரசு காரணமாக இருந்தது.

ஏகோனின் பாடல் வீடியோ ஒன்றில் புத்தர் சிலை அருகில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் இளைஞர் யுவதிகள் கும்மாளம் போடுவதாக காட்சி அமைந்திருந்தது அரசாங்கத்தின் கோபத்துக்கு காரணம்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter