>> Tuesday, June 22, 2010


ப.சிதம்பரம்


போபால்: கூடுதல் நிவாரணம் பரிந்துரைப்பு


இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் 1984 ஆம் ஆண்டு நடந்த விஷவாயு பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது உட்பட பல நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருந்தனர்.

இந்த விஷவாயு கசிவுக்கு காரணமான அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் அண்டர்சன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை அமைச்சர் மட்டத்திலான குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் தேடப்படும் நபர்களை ஒருவரிடம் மற்றவர் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் உள்ளது.

ஆனாலும் ஆண்டர்சனை நாடு கடத்த வேண்டும் என்று இதுவரை இந்தியாவால் விடுக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அமெரிக்காவால் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நஷ்டஈடுகளைத் தாண்டி புதிதாக வாழ்வாதார உதவிகளுக்கென நிதி ஒதுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter