>> Monday, June 28, 2010



உலகக் கோப்பை கால்பந்து
உலகக் கோப்பை-இங்கிலாந்து தோல்வி



தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
ஞாயிறன்று இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜெர்மனி அணியின் ஆதிக்கம் தொடக்கம் முதலே இருந்தது.

ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் நோயர் பந்தை தனது பக்கத்திலிருந்து ஓங்கி உதைக்க அது மிக அதிக தூரம் பறந்து இங்கிலாந்து கோலை நோக்கி வந்தது.

அந்த பந்தைப் பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் ஜேம்ஸ் முன்னேறி வந்தபோது ஜெர்மன் வீரர் குளோஸ் முந்திப் பாய்ந்து வந்து பந்தை கோலுக்குள் இலாவகமாகத் தட்டிவிட்டு ஜெர்மனியின் முதல் கோலைப் போட்டார்.

ஜெர்மனியின் அடுத்த கோலை போட்டவர் பொடொல்ஸ்கி.

இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணி ஒரு கோல் போட 2-1 என்கிற நிலை ஏற்பட்டது.

பின்னர் இங்கிலாந்து அணி ஒரு கோலை அடித்ததாக கோரியது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது.

எனினும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஜெர்மனி மேலும் இரண்டு கோல்களை அடிக்க இறுதியில் 4-1 என்கிற கணக்கில் ஜெர்மனி வென்றது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter