>> Saturday, June 19, 2010


இராணுவ அணிவகுப்பில் இலங்கை ஜனாதிபதி

சர்வதேச அழுத்தம் தவறு: மஹிந்த



இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் தருவதை இலங்கை ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
இலங்கையில் பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகள் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் சென்ற வருடம் நடந்த இறுதிக் கட்ட மோதல்களின்போது போர்க்குற்றங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் தந்துவருகின்றது.

விடுதலைப் புலிகளின் தோல்வியடைந்த தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக நடந்த இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த மோதலின்போது பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மட்டுமே அத்தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடர்பில் எழுந்துள்ள மனித உரிமை விவகாரங்களைப் பரிசீலிப்பதற்கான விசேட ஐ.நா. நிபுணர் குழு இன்னும் ஒரு சில நாட்களில் ஏற்படுத்தப்படும் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி தெரிவித்திருந்த மறுநாள் ஜனாதிபதியின் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter