>> Friday, June 18, 2010


அர்ஜெண்டினா வீரர் கொண்சாலோ

அர்ஜெண்டினா அபார வெற்றி



தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுப் போட்டியில் தென் கொரிய அணியை 4-1 என்கிற கணக்கில் அர்ஜெண்டினா வென்றது.
சாக்கர் சிட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொண்சாலோ ஹிகுயேன் அர்ஜெண்டினா அணிக்காக மூன்று கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கோல் அடிப்பதை தடுக்க முயன்ற தென் கொரிய வீரர் பார்க் சூ யங்கின் கால்களில் பட்ட பந்து கோல் வலைக்குள் செல்ல எதிர்பாராத வகையில் அர்ஜெண்டினா அணிக்காக தென் கொரிய வீரர் ஒரு கோலை போட்ட நிலை ஏற்பட்டது.

வியாழக்கிழமை இடம் பெற்ற மற்றொரு ஆட்டத்தில் கிரேக்க நாட்டு அணி நைஜீரிய அணியை 2-1 என்கிற கனக்கில் வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் கிரேக்கம் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

இந்த ஆட்டத்தின் முதல் கோலை நைஜீரிய வீரர் ஊச்சே அடித்தாலும் அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இறுதியில் நைஜீரியா தோல்வியை தழுவியது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter