>> Monday, June 28, 2010



தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற உலகத் தமி்ழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும், தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என்றும் அந்த மாநாடடில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கோவை நகரில் கடந்த 23-ம் தேதி துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 23-ம் தேதி மாலை நிறைவடைந்தது. நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு


சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

மாநாட்டை ஒட்டி, சிறப்பு அஞ்சல் தலைகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா வெளியிட முதலமைச்சர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

பின்னர் அந்த விழாவில் நிறைவுரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் நடைபெற்ற மாநாட்டு ஆய்வரங்க அமைப்புக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், பொது மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் சில தீர்மானங்கையும் அறிவிப்புக்களையும் வெளியிடுவதாக அறிவித்தார்.

அதன்படி, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்றப்படும் எனவும், தமிழை மத்தியில் ஆட்சிமொழியாக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.

பாடத்திட்டத்தில் செம்மொழி

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டும் என்ற கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர், அதை நிறைவேற்ற அலுவலர்களும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இனி, பாடத்திட்டத்திலும் செம்மொழி இடம் பெறும் என அவர் அறிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter