>> Saturday, June 19, 2010



துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை பெறுவதை ரொனீ லீ கார்டனர் தெரிவுசெய்திருந்தார்


துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை


அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மரண தண்டனை விதிப்பது சட்டத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்ட 1976ஆம் ஆண்டுக்குப் பின் அங்கு இவ்வகையில் நிறைவேற்றப்படும் மூன்றாவது மரண தண்டனை இது.

இரண்டு கொலைக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு இருபத்தைந்து வருடங்களை சிறையில் கழித்திருந்த ரொனீ லீ கார்டனருக்கு, அவர் கேட்டுக்கொண்ட வகையிலேயே தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள், தங்களுக்கு எவ்விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள இடமுண்டு.

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இடமிருப்பது அமெரிக்காவில் இந்த ஒரு மாகாணத்தில் மட்டும்தான்.

அங்கேயேகூட பதினான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது இந்த முறையில் ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது வழக்கம்.

கார்டனருக்கு செய்யப்பட்ட வகையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றுவதென்பது 'வைல்ட் வெஸ்ட் ஜஸ்டிஸ்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற, கவ் பாய் படங்களில் வருகிற மாதிரியான தண்டனை என்று விமர்சகர்கள் வருணித்துள்ளனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter