>> Saturday, December 19, 2009

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - பிரதான வேட்பாளர்களின் பிரசாரங்கள் சூடு பிடிக்கின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்த மறுதினமே அந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்ற ஜெனரல் சரத் பொன்சேகாவும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

22 பேர் இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், இந்த இரு முக்கிய வேடபாளர்களும் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள இன மக்களின் தேசிய வாத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலேயே தமது பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.


சரத் பொன்சேகா
இலங்கையில் சிங்கள மக்களின் புனித நகரங்கள் இரண்டில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மத குருமாரின் ஆசிர்வாதங்கள் மற்றும் பெரும் கூட்டங்களுடன் இருவரும் ஆரம்பித்துள்ளனர்.

புத்தபெருமானின் புனித தந்தம் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள மத்திய மலையகத்தின் கண்டி நகரில் ஜெனரல் பொன்சேகாவின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கண்டி நகர மையமே அவரது கூட்டத்துக்காக நிரம்பி வழிந்தது. கூட்டத்தை சரியாக பார்ப்பதற்காக கூரைகளிலும், மரங்களின் கிளைகளிலும் மக்கள் ஏறி நின்றனர். பலத்த மழைக்கு மத்தியிலும் அவர்கள் அவ்வாறு கூடிநின்றனர்.

சிங்கள பௌத்தர்களின் மற்றுமொரு புனித நகரான அநுராததபுரத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பொன்சேகாவினதைப் போன்ற பெரிய கூட்டம் அங்கும் திரண்டிருந்தது.

--------------------------------------------------------------------------------


மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய கசாப் முன்னைய குற்ற ஒப்புதலை வாபஸ் பெற்றுக் கொண்டார்


தாக்குதலின் போது கசாப்
கடந்த வருடம் மும்பாய் நகரின் மீதான தாக்குதலை நடத்தியவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரேயொரு தாக்குதலாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த கசாப், தான் முன்னர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

கொலை மற்றும் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகியவை உட்பட முகமட் அஜ்மல் கசாப் மீது 86 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

தன்னை பொலிஸார் பலதடவவைகள் தாக்கி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட பலவந்தப்படுத்தியதாக அவர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார்.

160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான மும்பாய் தாக்குதலை நடத்திய 10 பேரில் கசாப்பும் ஒருவர் என்று இந்திய அரச சட்டத்தரணிகள் கூறுகிறார்கள்.



--------------------------------------------------------------------------------


"இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீரிலிருந்து 30 ஆயிரம் படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்" - இந்திய பாதுகாப்பு அமைச்சர்


காஷ்மீர் எல்லை வரைபடம்
இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த இரண்டு வருட காலமாக ஆயுததாரிகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளதால் அங்கிருந்து சுமார் முப்பதாயிரம் படையினர் மீள அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவிக்கின்றார்.

எதிர்காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் மேலும் படைக்குறைப்பை மேற்கொள்ள அராசாங்கம் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும் இந்திய மற்றும் பாகிஸ்தான் நிர்வாகங்களுக்குட்பட்ட காஷ்மீரின் எல்லைகளைப் பிரிக்கும் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்​கை குறைக்கப்படவில்லையென இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

படையினர் மீள அழைக்கப்படவுள்ளமை குறித்து சுயாதீனமான உறுதிப்படுத்தல் ஒன்று அவசியம் என தெரிவித்துள்ள இந்தியக் கட்டுப்பாட்டுக் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள், பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்த தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.



--------------------------------------------------------------------------------

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter