>> Monday, November 30, 2009

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு

ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர் அமைப்பு.

இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேராயர் டூட்டு தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதிக்கு தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எல்டர்ஸ் அமைப்பின் தற்போதையத் தலைவர் பேராயர் டெஸ்மண்ட் டூடூ அவர்கள் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


வெற்றி பெற்றால் போர்குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம் - சரத் பொன்சேகா


சரத் பொன்சேகா

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அவரது மூன்று சகோதரர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி என்பது ஒரு குடும்பத்துக்கு பாத்தியப்பட்டது மட்டுமே என்று அர்த்தமல்ல என்றும், பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவம் உதவியதற்காக மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் போரில் கிடைத்த வெற்றி என்பது எந்த ஒரு சமூகத்துக்கும் எதிராக கிடைத்த வெற்றி கிடையாது என்றும் வர் கூறியுள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக அரசாங்கம் போதுமானதை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் போரின் போது இராணுவத்தால் போர் குற்றங்களை இழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்துவதற்கு தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதி தேர்தலின் போது வடகிழக்கு மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை - பப்ரெல் அமைப்பு


வாககளிப்பு(கோப்புப் படம்)

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலின்போது, விசேட ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பப்ரெல் எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர்கள் வாக்களிப்பின்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் தகுதியை அவர்கள் இழக்க நேரிடக்கூடும் என்றும் அந்தக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருக்கின

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகள் முக்கிய ஆவணங்கள் என்பவற்றை இழந்துள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கச் செல்வதும் சிக்கலான ஒரு விடயமாக இருக்கும் என்றும் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter