>> Friday, November 27, 2009

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த ஐ.தே.க ஒப்புதல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்த முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உடன்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கட்சி அவரை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதேவேளை, வரக் கூடிய ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் இது குறித்த தமது கட்சியின் முடிவை அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஜனநாயக மக்கள் முன்னணி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவரான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


மும்பை தாக்குதலின் ஓராண்டு


மெழுகுவர்த்தி அஞ்சலி
மும்பை தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவு இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு மும்பை நகரில் பொலிஸாரின் அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது.

170 க்கும் அதிகமான மக்கள் பலியான இந்த தாக்குதல் சுமார் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தது.

இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட 9 பேரை அப்போது இந்திய படையினர் தமது பதில் தாக்குதலில் கொன்றிருந்தார்கள். ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டிப்பது தொடர்பில் பாகிஸ்தான் இன்னமும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அமெரிக்காவில் கூறியிருக்கிறார்.

இந்த தாக்குதல் குறித்த ஆய்வுகள் மற்றும் இன்றைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை நேயர்க்ள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


கடலூர் மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால் பரபரப்பு

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் பகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதால், மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலூர் தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்களை, கடலோர காவற்படையினர் அடையாள அட்டை மற்றும் உரிமம் கேட்டு, அவை இல்லாதவர்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம், கடலூர் மாவட்ட மீனவர்களிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

கடலோர காவற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கப்போவதாக மீனவர்கள் எச்சரித்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாராமனும் மற்ற உயர் அதிகாரிகளும் தாழங்குடா பகுதி சென்று நேரில் விசாரித்தனர்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter