>> Friday, September 17, 2010


மீள்குடியேற்றம்: முன்னேற்றமும், பிரச்சினைகளும்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு கிழக்குப்பகுதியில் நடைபெற்றுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூன், சில விடயங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், பல பிரச்சினைகள் இன்னமும் அங்கே தொடர்வதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிந்தியான நீல் பூனேயும், உயர்மட்டக் குழு ஒன்றும், கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டு வியாழனன்று மாலை கொழும்பு திரும்பினர்.


ஐநா பிரதிநிதி நீல் பூன்

இந்த விஜயம் குறித்து நீல் பூன் தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில், போருக்கு பின்னரான காலத்தில் கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நிலைமைகள் எப்படியுள்ளன என்பதை பார்ப்பதற்காகவே தாங்கள் கிழக்குமாகாணத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து தற்போது அங்கு திரும்பியுள்ளவர்களின் நிலைமைகளைப் பொறுத்தவரை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் உட்பகுதிகளில் இருக்கும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கிராம மக்களின் நிலமைகள் என்பவை அவர்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடுவதாக அவர் தெரிவித்தார்.

இவர்களில் பலர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் அவர்கள் இன்னமும் பல சவால் களை எதிர் கொள்வதாகவும், பல தொலைதூரப் பகுதி கிராமங் களில் இருந்த மக்கள் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட தாகவும் நீல் பூன் தெரிவித்தார்.

விவசாயத்தின் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு உடனடி முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றும், அந்த பகுதி மக்கள் வசிப்பதற்கு தரமான வீடு களை கட்டித்தருவது, அந்த பகுதியின் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் நீல் பூன் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter