>> Thursday, September 9, 2010


தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை


தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழ்நாட்டில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இதற்காகச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.

இதன்படி தமிழக அரசின் நேரடிப் பணி நியமனங்களில் 20 சதவீத இடங்கள் தமிழில் படித்தவர்கள் மூலம் நிரப்பப்படும்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter