>> Tuesday, September 14, 2010


காஷ்மீரில் மீண்டும் வன்முறை


ஆர்ப்பாட்டங்களை அடக்கும் பணியில் பொலிசார்
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் இன்று நடந்த வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டும் 100 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்.
இந்திய ஆட்சியை எதிர்த்தும், முஸ்லிம்களின் புனித நூலான குர்-ஆனை அமெரிக்காவில் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று ஓர் தொலைக்காட்சியில் தகவல் வெளியானதன் விளைவாகவும் காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பட்டம் செய்துள்ளனர்.

பல அரசு கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன; ஆத்திரம் கொண்ட மக்கள் ஒபாமாவின் கொடும்பாவியை எரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க இந்திய பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

வடக்கு காஷ்மீரில் புரோடஸ்டண்ட் திருச்சபையால் நடத்தப்படும் ஒரு பள்ளிக்கூடம் அருகே வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டிருந்தது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter