>> Monday, September 13, 2010



துருக்கி அரசியல் சீர்திருத்தம்- வாக்கெடுப்பு


துருக்கி நாடாளுமன்றம்
துருக்கியில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் தலைவிதியை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
1982 ஆம் ஆண்டில் இராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு அடுத்த கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கூடிய பெரும்பாலான திருத்தங்கள் உள்ளடங்கலாக 26 புதிய சீர்திருத்தங்கள் துருக்கி மக்களின் அங்கீகாரத்திற்காக தற்போது காத்திருக்கின்றன.

இதற்கிடையில், ஆளுங்கட்சியின் முடிவுகளை தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்திவரும் துருக்கி எதிர்க்கட்சியினர், அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.


துருக்கி பிரதமர்
இரண்டு பிரதான நீதித்துறை நிறுவனங்களின் உறுப்புரிமையை விரிவு படுத்தும் இரண்டு அரசியல் திருத்தங்கள், அரசாங்கம் நீதித்துறையில் அளவு கடந்து செல்வாக்கு செலுத்துவதற்கு வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

துருக்கியின் மேனிலை நீதிமன்றங்கள், பிரதமர் எர்துவானின் இஸ்லாமிய அடித்தளம் கொண்ட நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியை கண்காணிக்கும் பொறிமுறையாகவே மதச்சார்பற்ற துருக்கியர்களால் பார்க்கப்படுகின்றன.

ஆனால் நீதிமன்றங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட தீர்ப்புகளை வழங்குவதாக பிரதமர் குற்றஞ்சாட்டிவருகின்றார்.

இவ்வாறான திருத்தங்களின் பின்னர் பிரதமரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது என அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

அரசியலமைப்புத் திருத்தங்களை வலியுறுத்தி வந்த பெரும்பாலான வாக்காளர்கள், இந்த முன்மொழிவுகள் போதுமான பகிரங்க விவாதங்களுக்கு உள்ளாகமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட முயற்சிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter