>> Wednesday, September 15, 2010


படையினர் சட்டம் குறித்து விரைவில் முடிவு


இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் காஷ்மீரில் அதிக அளவு நடந்து வருகின்றன.
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டத்தை மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்வது தொடர்பாக, டெல்லியில் புதன்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. கடந்த வாரம், அரசுக் கட்டடங்கள் தீயிட்டுக்க கொளுத்தப்பட்டன. அதையடுத்து, அங்கு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. திங்கட்கிழமையன்று ஊரடங்கு உத்தரவை மீறி நடந்த வன்முறையில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

அதே நேரத்தில், மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப் படைகளுக்கான சிறப்புச் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரி வருகிறார்.

அவரது கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆதரவளிப்பதாகவும், அதே நேரத்தில், பாதுகாப்ப அமைச்சர் அந்தோணி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந் நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் அறிய, நாளை புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதே நேரத்தில், அரசு சட்டத்தை விலக்கிக் கொள்வது குறித்த முடிவை எடுக்கும்பட்சத்தில், ஆயுதப்படைகளுக்கு சட்டப்பூர்வப் பாதுகாப்பு அவசியம் என்று வலியுறுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி ஏர்சீஃப் மார்ஷல் பி.வி. நாயக்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter