>> Monday, September 20, 2010


குத்துச்சண்டை வீராங்கனை சாதனை


குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் மேரி கோம் (ஆவணம்)
இந்தியாவைச் சேர்ந்த எம்.சி.மேரி கோம் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
சனிக்கிழமை பார்படோஸில் நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் இவர் ரோமானியாவைச் சேர்ந்த ஸ்ட்லுட் டுடாவை வெற்றி கொண்டார்.

பெண்கள் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில்
கலந்து கொண்டு அனைத்து 6 போட்டிகளிலும் பதக்கத்தை வென்ற ஒரே வீராங்கனை இவராவார்.

இதற்கு முன்னர் 46 கிலோ பிரிவிலேயே மேரி கோம் அனைத்து பதக்கங்களையும் வென்று இருந்தார். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 48 கிலோ பிரிவிலும் மேரி கோம் பதக்கத்தை வென்றுள்ளார்.

தன்னுடைய வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த மேரி கோம், தனது கணவர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும், 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கத்தை வெல்ல முயற்சிக்கவுள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கு கொடுக்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுனை இவர் 2009 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter