>> Monday, September 13, 2010


மிக விலை உயர்ந்த புத்தகம் விற்பனைக்கு


பறவைகள் குறித்த புத்தகம்
உலகத்தின் மிக விலை உயர்ந்த அரிய புத்தகமான ஜான் ஜேம்ஸ் அடுபோன்ஸின் ‘பேர்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா’புத்தகம் சோதிபைஸ் ஏலக்கடையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த புத்தகத்தின் முழுமையான வடிவங்களில் 119 பிரதிகள் மட்டுமே தற்போது இருப்பதாக அறிய வந்துள்ளது. அவற்றில் 108 புத்தகங்கள் நூலகம் மற்றும் அருங்காட்சியங்களில் உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் தனி பிரதி ஒன்று 8.8 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியது.

டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்படும் பிரதி மறைந்த லார்ட் ஹெஸ்கத் அவர்களின் சேகரிப்பில் இருந்து வருகிறது.

இந்த புத்தகத்தில் 500 பறவை இனங்களின் சுமார் 1000 பொருள் உயர ஒவியங்கள் உள்ளன.

இந்த ஒவியங்கள் மற்றும் ஆராய்ச்சியை முடிக்க வன உயிர் ஒவியரான ஜான் ஜேம்ஸ் அடுபோனுக்கு சுமார் 12 ஆண்டுகாலம் பிடித்தது.

அமெரிக்கா முழுவதும் பயணித்து பறவைகளை சுட்டு, பின்னர் அவற்றை கம்பியில் கட்டி தொங்கி விட்டு அவற்றை இவர் வரைந்துள்ளார்.

அதன் பின்னர், பிரிட்டனுக்கு சென்ற அவர், புத்தகங்களை பிரசுரித்து அவற்றை செல்வந்தர்களிடம் விற்பனை செய்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter