>> Saturday, July 31, 2010



ஆரையம்பதி உண்ணாவிரதம்
ஆரையம்பதி உள்ளூராட்சியினர் உண்ணாவிரதம்
மட்டக்களப்பு ஆரையம்பதி உள்ளுராட்சி சபை நிர்வாக எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சுமத்தியும், குறிப்பிட்ட அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரியும் ஆரையம்பதி உள்ளுராட்சி சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் சகிதம் சபை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்தான்குடி நகர சபை நிர்வாகம் எற்கனவே தமது பிரதேச எல்லைக்குள் அத்துமீறி செயல்பட்டு வந்தமை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மூலம் அதனை தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை பலனளிக்கவில்லை என ஆரையம்பதி உள்ளுராட்சி சபையின் உப தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையிலேயே இந்தப் போராட்டம் நடை பெற்றதாக அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினகளுக்கு 10 நாட்களுக்குள் தீர்வைப் பெற்று தருவதாக முதலமைச்சர் தங்களிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரையம்பதி உள்ளுராட்சி சபையினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை காத்தான்குடி நகரசபையின் உப தலைவரான சாகுல் ஹமீட் மொகமது அஸ்வர் நிராகரித்துள்ளார்.

ஆரையம்பதி உள்ளுராட்சி நிர்வாக சபை எல்லைக்குள் தங்களுக்குரிய சொந்த காணிகளில் உள்ளுராட்சி சபையின் உரிய அனுமதி பெற்று முஸ்லிம்கள் குடியேறுவதாக அவர் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter