>> Thursday, July 22, 2010


ரொபேர்ட் பிளேக்

இலங்கையில் ரோபேர்ட் பிளேக்



இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு நல்ல பலனைத் தரமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசுத்துறைத் துணைச் செயலர் ரொபேர்ட் பிளேக் அவர்கள் கூறியிருக்கிறார்.
இலங்கையில் அமைதி திரும்ப நல்லிணக்கம் ஏற்படுவது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், நல்லிணக்கத்தை எட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக போரினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கியமான விடயமாக கடந்தகால தவறுகளுக்கு பொறுப்பு ஏற்கப்படுதலை குறிப்பிட்டுள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை மனித உரிமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவும் நல்ல பலனைத்தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்குழு ஐ. நா செயலாளரால் நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடதத்தக்கதாகும் என்றும் அதுமாத்திரமன்றி, அது ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு மாத்திரந்தான் என்பதுடன் அதற்கு புலன் விசாரணை செய்யும் பங்கோ நீதித்துறைப் பங்கோ கிடையாது என்றும் பிளேக் கூறினார்.

ஐநா இது போன்ற விடயங்களில் உலகின் பல பாகங்களில் நல்ல அனுபவத்தை கொண்டிருக்கிறது. ஆகவே அதன் பலனை இலங்கையும் பெற முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

நல்லிணக்கத்துக்கான மூன்றாவது விடயமாக ஜனநாயகமும், மனித உரிமைகளும் மேம்படுத்தப்படுதலை குறிப்பிட்டுள்ள ரொபேர்ட் பிளளேக் அவர்கள், மாகாணங்களுடன் சிறப்பான அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளலும், 17 வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமல் படுத்தலுமே இதற்கான பலனைத்தரும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புசாதன சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter