>> Saturday, July 31, 2010


தாக்குதலுக்குள்ளான தொலைக்காட்சி நிலைய அலுவலகம்



தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்


இலங்கைத் தலைநகர் கொழும்பில் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் ஒன்றை இனந்தெரியாத கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளது.
இத்தாக்குதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதம் ஏந்தி முகமூடி அணிந்திருந்த 12 பேர் நகர மையத்தில் உள்ள சியத அலுவலகத்துக்குள் நுழைந்து பெட்ரொல் குண்டுகளை வீசியதோடு, ஒளிபரப்புக் கருவிகளை உடைத்து சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த பணியாளர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மண்டியிடச் செய்ததாகவும், இரண்டு ஊழியர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் 18 மாதங்களுக்கு முன்பு மஹாராஜா தொலைக்காட்சி நிறுவனம் இதே வகையில் தாக்கப்பட்டிருந்தது.

தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ள சியத தொலைக்காட்சியின் உரிமையாளர் முன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சியத உரிமையாளர் மஹிந்தவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி வழங்கினார் என்று செய்திகள் வெளியானதை அடுத்து சில மாதங்கள் முன்பு அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

சியத ஒளிபரப்பு நிறுவனத்தார் அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிப்பது சிலகாலமாக தடுக்கப்பட்டு வந்தது என்றும், அரசாங்க அறிவிப்புகள் சியத நிறுவனத்தாரின் செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிகிறது. இந்த செய்தித்தாள் அண்மையில் மூடப்பட்டுவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சியத ஒளிபரப்புகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலானவையாக இருக்கவில்லை என்று கூறப்படுகிறது

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter