>> Monday, July 19, 2010


சர்வகட்சி கூட்டம்

'சர்வகட்சி தீர்மானங்களை வெளியிடுவோம்'

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் நடத்தப்பட்டுவந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்பட்ட உடன்பாடுகளை வெளியிடபோவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாரான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.



சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தவிசாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண இணக்கப்பாடுகள் தொடர்பான தீர்வுத்திட்டத்தை ஜனாதிபதியிடம் கையளித்து நீண்டகாலமாகியும், அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளமையால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிசாம் காரியப்பர் கூறுகிறார்.

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையை தாமும் குழுவின் உறுப்பினராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனும் திங்கட்கிழமை வெளியிடப் போவதாக தமிழோசையிடம் காரியப்பர் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளில் பல முழுமையாக இணங்கப்படாத போதிலும், சுமார் 48 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கையில், சிறுபான்மை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றி அனைத்துக்கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலாளர் பிபிசி தமிழோசைக்கு பிரத்தியேகமாக அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter