>> Thursday, July 29, 2010


நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள்

பாக் விமான விபத்தில் 152 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அதிலிருந்த 152 பேரும் பலியாகியுள்ளனர்.
கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் விமானத்தில் 146 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

இஸ்லாமாபாத்துக்கு வடக்கே இருக்கும் ஒரு மலைப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.

ஏர் புளூ எனும் தனியார் நிறுவன விமானமே மரகலா மலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. கராச்சியில் உள்ளூர் நேரப்படி காலை 07.50 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் இஸ்லாமாபாதில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் நொறுங்கி விழுந்துள்ளது.

மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நொறுங்கி விழுந்து எரிந்து போன இந்த ஏ-321 ரக விமானத்திலிருந்து உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

விபத்து ஏற்பட்ட சமயம் அந்த மலைப் பகுதியில் அடர்ந்த மூடுபனிப் படலம் நிலவியுள்ளது.

விமானத்தின் பறக்கும் குறிப்புகள் மற்றும் ஒலி சமிஞ்கைகள் அடங்கிய கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதல் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏதாவது ஆதாரங்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.

நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள் அந்த மலைப் பகுதியில் இருக்கும் மரங்களில் சிக்கி தொங்கிக் கொண்டிருப்பதை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter