>> Wednesday, July 28, 2010


கயாவில் பர்மியத் தலைவர்

டில்லியில் பர்மிய சர்வாதிகாரி
பர்மாவின் ராணுவ ஆட்சியின் தலைவர் ஜெனரல் ஷ்வே அவர்களுக்கு செவ்வாயன்று இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐந்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஜெனரல் ஷ்வே அவர்கள்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஷ்வே, மிகச்சில வெளிநாடுகளுக்கே சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக இந்தியாவு்க்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே 1600 கிலோ மீட்டர் தொலைவு எல்லை உள்ள நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளும் பர்மாவை ஒட்டியே உள்ளன.

பர்மாவை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்கு பர்மா அரசாங்கம் இந்தியாவுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறது. அதற்கு ஈடாக, இந்தியாவும் பர்மாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்து வருகிறது.

டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க, இருநாட்டுப் பாதுகாப்புப் படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு உடனடி முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் இன்னொரு நாட்டுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எந்த வகையிலும் அனுமதிப்பதில்லை என்றும் உறுதியளிக்கப்பட்டது.

பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், பர்மாவில் மேம்பாட்டு உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று இந்திப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரினார் ஜெனரல் ஷ்வே.

இந்தச் சந்திப்பின்போது, குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில், இரு தரப்பும் பரஸ்பரம் உதவும் வகையிலான ஒப்பந்தம், அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter