>> Monday, July 26, 2010


அமித் ஷா கைது


அமித் ஷா
இந்தியாவின் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்து பதவியை இராஜினாமா செய்துள்ள அமித் ஷா, கொலை மற்றும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மத்திய புலனாய்வு விசாரணையாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாட்களாக வெளியிடங்களில் தோன்றாமல் இருந்துவந்த அமித் ஷா, இன்று பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி தான் குற்றமற்றவர் என்று கூறியிருந்தார், அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நேற்று சனிக்கிழமை இவர் தனது இராஜினாமா செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சோராபுதீன் ஷேக் என்பவரையும் அவரது மனைவியையும் போலி எண்கவுண்டரில் கொல்ல ஷா உத்தரவிட்டிருந்தார் என்பது குற்றச்சாட்டு.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரான அமித் ஷா, தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்கிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter