>> Thursday, July 29, 2010



சச்சின் டெண்டூல்கர்
சச்சின் 48 ஆவது சதமடித்தார்
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் 48 ஆவது சதத்தை அடித்துள்ளார்.
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போதே தனது 48 ஆவது சதத்தை சச்சின் அடித்துள்ளார்.

நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 642 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்திருந்தது.

கொழும்பு போட்டியில் இந்தியாவின் விரேந்திர ஷேவாக் தனது 21 ஆவது சதத்தை அடிக்கும் வாய்ப்பை ஒரு ஓட்டத்தில் தவற விட்டார். 99 ஓட்டங்களை எடுத்திருந்த போது சதத்தை அடிக்கும் ஆசையில் சுராஜ் ரண்டிவ் வீசிய பந்தை கிரீஸை விட்டு அடிக்க வெளியே வர முயன்ற போது விக்கெட் கீப்பரால் ஸ்டம்ப் செய்யப்பட்டார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி 1-0 என்கிற கணக்கில் முன்னணியில் உள்ளது.

முதல் போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த முத்தையா முரளிதரன் தனது கடைசிப் போட்டியில் 8 விக்கெட்டுகளை எடுத்து 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவார் என்கிற பெருமையை அடைந்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter