>> Monday, May 3, 2010


தமிழக முதல்வர் மு கருணாநிதி

ராசா பதவி விலக மாட்டார்

ஸ்பெக்ட்ரம் எனப்படும் தொலைத் தொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா பதவி விலக மாட்டார் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி வந்த முதல்வர் கருணாநிதி, குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்

இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விவாதிப்பீர்களா, அமைச்சர் பதவி விலக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, "நீங்கள் மகிழ்ச்சியடையத்தக்க செய்தியை நான் கொண்டுவரவில்லை", என்று நகைச்சுவையாகப் பதில் கூறி, அதே நேரத்தில் ராசா பதவி விலக வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாகத் தெளிவுபடுத்தவிட்டார் முதல்வர்.

இதனிடையே,மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினை மாநிலங்களுக்கிடையிலானது என்று விட்டுவிடாமல், அதைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கருணாநிதி புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter