>> Monday, May 3, 2010


சஜீத் பிரேமதாஸ


''கட்சிக்குள் ஜனநாயகம் தேவை''



ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்பதை 2004 ஆம் ஆண்டில் இருந்தே வலியுறுத்திவருவதாக அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸ தமிழோசையிடம் தெரிவித்தார்.

சஜீத் பிரேமதாஸ கருத்துக்கள்

கட்சி பொறுப்புகளுக்கு நபர்களை தெரிவுசெய்யும் நடைமுறையில் ஜனநாயக வரைமுறையும் தீர்மானங்கள் எடுக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மையும் அவசியப்படுவதாக அவர் கூறுகிறார்.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை எனவும் கட்சியின் நலனுக்காகவே கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் சஜீத் கூறினார்.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் யாராக இருக்கவேண்டுமென்பதை தன்னால் மட்டும் தீர்மானிக்க முடியாது எனவும் அந்த தீர்மானத்தில் கட்சியின் அனைத்து மட்டங்களிலுள்ளவர்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

''சீர்திருத்தங்கள் பரிசீலிக்கப்படும்''


ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சித் தலைமை தயாராகவே உள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாளருமான டி.எம். சுவாமிநாதன் கூறுகிறார்.


சுவாமிநாதன் பேட்டி

கட்சி மறுசீரமைப்புகளுக்கான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க தலைமைத்துவம் தயாராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் தீர்மானங்களை எடுக்கும் நடைமுறைகளில் தன்னிச்சையாகவே செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு நியாயமற்றது எனவும் சுவாமிநாதன் கூறினார்.

பத்திரிகைகளில் வெளிவரும் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியிலுள்ள குறைபாடுகள் பற்றி ஆராய்வது அர்த்தமற்றது எனவும் அவர் கருத்து வௌயிடுகின்றார்.

கட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமானால் அவற்றுக்கான கோரிக்கைகள் கட்சியின் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரினால் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் எனவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter