>> Friday, April 30, 2010





வீழ்ச்சியில் ஊடக சுதந்திரம்


இலங்கையில் ஊடக சுதந்திரம் கோரி நாடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்று
உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக ஃபிரீடம் ஹவுஸ் என்னும் சுயாதீன கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு ஒன்று கூறுகிறது.
கடந்த தொடர்ச்சியான 8 வருடங்களாக தொடர்பூடக சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதாக 2009 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்க்கையில் வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

உலகில் சராசரியாக 6 பேர்களில் ஒருவர் மாத்திரமே தொடர்புசாதன சுதந்திரத்துடன் இருப்பதாகவும் அது கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் தொடர்பூடகங்கள் செயற்படுகின்ற அரசியல் மற்றும் சட்ட சூழ்நிலை குறித்து ஃபிரீடம் ஹவுஸ் ஆராய்கிறது. தொடர்பூடகங்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார அழுத்தங்கள் குறித்தும் அது கவனம் செலுத்துகிறது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது உலக மட்டத்தில் கடந்த வருடத்தில் மீண்டும் ஊடக சுதந்திரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தெரியக்கூடியதாக இருக்கின்றது என்று அந்த அமைப்பு கூறுகின்றது.

மிகவும் முக்கியமான மாற்றம் என்பது சகாராவுக்கு தென்பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில்தான் நடந்துள்ளது.


வீழ்ச்சியடையும் ஊடக சுதந்திரம்
2008 இல் தென்னாபிரிக்காவும், நமீபியாவும் ஊகட சுதந்திரம் உள்ள நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அங்கெல்லாம் பாதியளவிலான சுதந்திரமே காணப்படுகின்றது.

மெக்சிகோவில் ஊடக சுதந்திரம் கிடையாது என்ற நிலை எட்டப்பட்டுள்ளதுடன், லத்தின் அமெரிக்கா குறித்தும் கவலைகள் அதிகரித்துள்ளன.

ஹொண்டியூஸும் ஊடக சுதந்திரம் அற்ற நாடாகவே கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலின்போது செய்தியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறையின் காரணமாக தனது பிராந்தியத்தில் ஊடக சுதந்திரம் பெரும் வீழ்ச்சியடையும் நாடாக இரான் பதிவாகியுள்ளது.



ஒருவர் இணையம் மூலம் தகவ்வல் பெறுவதில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது குறித்தும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது. தகவலை தணிக்கை செய்யவும், இணையத்தில் இணைபவர்களை கண்காணிக்கவும், சீனா, ரஷ்யா மற்றும் வெனிஸ்ஸுவேலா ஆகிய நாடுகள் மிகவும் நுட்பமான பொறிமுறைகளை பயன்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆசிய பசுசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக பூட்டான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறப்பான ஊடக சுதந்திரத்தை நோக்கிய நகர்வுகள் குறித்தும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter