>> Monday, May 17, 2010

உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து


ஆஸ்திரேலிய விக்கெட் விழுந்ததை கொண்டாடும் இங்கிலாந்து அணியினர்
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபது இருபது உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு தோன்றியவிடமாக இங்கிலாந்து இருந்தாலும், இது வரை அந்த நாடு, பல நாடுகள் பங்கேற்கும் எந்த ஒரு முக்கிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வென்றதில்லை.

மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாசில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இருபது இருபது உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இருபது ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து அணி இந்த இலக்கை 17 ஒவர்களிலேயே எவ்வித சிக்கலும் இன்றி எட்டியது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter