>> Thursday, May 13, 2010


விஸ்வநாதன் ஆனந்த்

ஆனந்த் மீண்டும் உலக சாம்பியன்



இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
பல்கேரியாவின் வேஸலின் டோபலோவை அவர் வென்றுள்ளார். 12 சுற்றுகள் இடம் பெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வென்றதன் மூலம் ஆனந்த் மீண்டும் சாம்பியனாகி உள்ளார்.

இந்தப் போட்டிகளில் மூன்றில் ஆனந்தும், இரண்டில் டோபலோவும் வென்றனர். ஏழு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. இறுதியில் 6.5 க்கு 5.5 என்கிற புள்ளிகள் வீதத்தில் ஆனந்த் வென்றுள்ளார்.

இரண்டு மில்லியன் யூரோக்கள் பரிசுத் தொகையை ஆனந்தும், டோபலோவும் சமமாக பகிர்ந்து கொள்வார்கள்.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த் அதிரடியாக ஆடி இந்த வெற்றியை பெற்றார் என சதுரங்க விளையாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வெற்றிக் கொண்டு உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்.

இதுவரை நான்கு முறை உலக பட்டத்தை அவர் வென்றுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter