>> Tuesday, April 20, 2010




''ஐபிஎல் நிதி பற்றி விசாரணை''


ஐபிஎல்
நிதித்துறை அவதூறில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் பிரிமியர் லீக் கிரிக்கெட் குறித்து விசாரணை நடத்தப்ப்பட வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
கிரிக்கெட் லீக்கிற்கு வரும் பணம் எங்கெங்கு இருந்து வருகின்றது என்று இந்த விசாரணையில் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

தவறு இழைத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு விதிவிலக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குற்திப்பிட்டுள்ளார்.

''கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கிரிக்கட் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

நிதித்துறையில் ஒழுங்கீனங்கள் எவையும் கிடையாது என்று கிரிக்கட் லீகின் ஆணையர் லலித் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நாவில் இந்திய அரசின் இராஜதந்திரியாக முன்பு பணியாற்றிய, சசி தரூர் இந்த நிதி அவதூறு காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.

இதற்கிடையே இந்த அறிவிப்பு காலதாமதாக எடுக்கப்படும் நடவடிக்கையே என்று எழும் விமர்சனங்கள் சரியானவை என்று ஓய்வு பெற்ற இந்திய வருவாய்த்துறை செயலர் எம்.ஆர்.சிவராமன் கூறினார்.


''கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கிரிக்கட் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.



கடந்த காலங்களிலேயே, கிரிக்கெட் விளையாட்டில், முன்கூட்டியே முடிவுகளை சட்டவிரோதமாகத் தீர்மானித்துக்கொண்டு ஆடுதல், பந்தயம் கட்டுதல் போன்ற முறைகேடுகள் வெளிவந்து அதன் தொடர்பாக கிரிக்கெட் பிரமுகர்கள் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சிவராமன், இந்த சூழ்நிலையில் அரசு விழிப்புடன் இருந்து, இந்த விளையாட்டை கண்காணித்திருக்க வேண்டும் என்றார்.

“கிரிக்கெட் மைதானம் எப்போது ஒரு சூதாட்ட மைதானமாக மாறிவிட்டதோ, அப்போதே அரசாங்கத்தின் வருமானவரித்துறை போன்ற துறைகள், விழிப்பாக இருந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்றார் சிவராமன்.

ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் போன்ற அமைப்புகளை இந்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவேண்டும் அல்லது அவைகளின் நிர்வாகத்தில் ஒரு பங்கேற்கவேண்டும் என்று கூறப்படுவதை சிவராமன் நிராகரித்தார்.

இது போன்று தனியார் முயற்சிகளில் அரசு தலையிடுவது சரியல்ல ஆனால் அவைகளில் சூதாட்டம், கிரிமினல் வழிகளில் பணம் விளையாடுவது போன்றவை கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படவேண்டும் என்றார் அவர்.

பிரபா தாயார்- கருணாநிதி விளக்கம்


பிரபாகரன்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் த‌மிழக‌த்தி‌ல் ‌சி‌கி‌‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்‌பினா‌ல் அக்கோரிக்கையினை ப‌ரி‌‌‌‌சீலனை செ‌ய்து ம‌‌‌த்‌திய அரசு‌க்கு ப‌‌ரி‌ந்துரை செ‌ய்ய‌ தமது அரசு தயாராக இருக்கிறது என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
கடந்த வெள்ளியன்றிரவு பார்வதியம்மாள் மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.

விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும், அது முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்பான பிரச்சினையென்றும் கூறினார்.

செய்தித் தாள்கள் மூலமாக மறு நாள்தான் தனக்கு முழுவிவரம் கிடைத்ததாகச் சொன்ன அவர், வேறொரு இடத்தில் இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்குள் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகத் தனக்கு சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதி
தவிரவும் பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அ. இ அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததையும் கருணாநிதி நினைவு கூர்ந்தார்.

ஆயினுங்கூட பார்வதி அம்மாள் விரும்பினால், அவர் இங்கே சிகிச்சை பெற அனுமதிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்ளத் தயார் என்றும் முதல்வர் கூறினார்.

ஏறத்தாழ அனைத்து கட்சிகளுமே பார்வதியம்மாள் சிகிச்சைக்காக இந்தியா வர அனுமதிக்கப்படவேண்டும் எனக் கோரினர். காங்கிரஸ் சார்பில் பேசியவர்களும் திருப்பி அனுப்பப்பட்டது நியாயம்தான் என வாதிட்டாலும், அவர் இங்கே சிகிச்சை பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றனர்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிரச்சினை திமுகவாலேயே எழுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு பார்வதி அம்மாள் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, தவிரவும் குற்றப் பின்னணி இல்லாத அவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக விசா வழங்கப்பட்டும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று வினவினார்.

2003ல் அன்றைய அ இ அதிமுக அரசு பிரபாகரனின் பெற்றோர் மறுபடி இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கடிதம் எழுதியது என்றபோது அ இஅதிமுகவினர், அந்நேரத்தில் திமுக மௌனமாயிருந்ததேன் என்று வினவினர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter