>> Thursday, April 29, 2010

குடும்பத்தினருடன் பிரபாகரன்



சிகிச்சை அளிக்கக் கோரி வழக்கு



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை மறுபடி இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அரசு தனது நிலை என்ன என்பதை வியாழக்கிழமை(29.4.10) தெரிவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் இன்று உத்திரவிட்டது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திரும்பி அனுப்பப்பட்டார்.

அச்சம்பவம் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது.

முதல்வர் கருணாநிதி பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தனது அரசுக்கும் எத்தொடர்பும் இல்லையென்றும், அவர் விரும்பினால் அவர் இந்தியா வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தான் கோரத்தயார் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பொது நலவழக்கொன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் வெளிநாட்டவர்கள் வருகைக்கு அனுமதி வழங்குவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என்றார்.

இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதங்களின்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் மத்திய அரசு நிலை குறித்து நாளை பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வியாழன் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter